Monday, July 25, 2011

அட கடவுளே!!!!!!!!!!



    "காலைலயும் சீரியல் பாக்க முடியல சாயங்காலமும் சீரியல் பாக்க முடியல"....இது சதீஷோட பாட்டி

     "ஒரு சட்டினி அரைச்சு சாப்பிட முடியலங்கிறாங்க" சதீஷோட அம்மா 

     "அம்மா போன  சீக்கிரம்  சார்ஜ் போடு கரென்ட் போக போகுது "அப்படின்னு சதீஷ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவங்க ஏரியால கரென்ட் போயிடுச்சு..

     "இப்படிதாங்க ரெண்டு முணு வருஷமா எப்ப வரும் எப்படி வருமுன்னு யாருக்குமே தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வராம  போயிருது. இந்த கரென்ட்கட்டுக்கு  என்ன செய்யுறதுனே தெரியலடி ஈஸ்வரி" அப்படிங்கறான் சதீஷ்

     அதுக்கு அவன் பொண்டாட்டி ஈஸ்வரி  "என்னங்க பக்கத்து வீட்லலாம் எதோ இன்வெர்ட்டர் வாங்கியிருக்காங்கலாம். 12 ,000௦௦ ரூபாய் தான் ஒரு மெஷின் 3 லைட் ரெண்டு பேன் போட்டுக்கலாமாங்க நம்மளும் ஒண்ணும் வாங்கலமாங்க ? " கேட்டுட்டு அவன் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருக்கா

    உடனே சதீஷ் "ஏய் அது ஒன்னு தான் இப்ப குறைச்சல் உங்களுக்கெல்லாம் டி.வி பாக்காம இருக்க முடியாதோ?

இல்லங்க "பேன் இல்லாம இருக்க முடியலங்க்ரா " ஈஸ்வரி

டென்சன் ஆயிட்டான் சதீஷ் "பச்சபுள்ள என் பையன் கரென்ட் இல்லாட்டா கூட அழமா தூங்குறான் உனக்கு என்ன ? தாட் பூட்னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

"ஆமா உங்க பிள்ளை பிறக்கும்போதே கரென்ட் இல்லாம பழகிட்டான் நாங்க அப்படியா! எங்க வீட்டுலலாம் நான் பிறக்கும் போதே பேன் உண்டு தெரியுமானு" ஈஸ்வரி சொல்லிமுடிக்கிறதுக்குள்ள தீடிர்னு கரென்ட் வருது பேன் ஓட ஆரம்பிக்குது  ....




   அங்க அதுவரை நல்லா தூங்கிட்டிருக்கிற சதிஷோட குட்டிபையன் தூக்கம் கலைஞ்சு சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிறான் .....

அப்ப ஈஸ்வரி "ஏங்க அந்த பேன அனைங்க பிள்ளை பயப்படுதுபாருங்க அப்படின்னு" கத்துறா


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் இரண்டாவது வாரம்-2011


Friday, July 22, 2011

"போலாம் ரைட்"




   அந்த பஸ் கிளம்பி இரண்டு மணிநேரம் ஆயிருக்கும் ரொம்ப நேரமா  நின்னுகிட்டே தான் வர்றான் மாரியப்பன். கால்வலி அவனுக்கு பழகியிருந்தாலும், இன்னைக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே டையர்டாகி இருந்தான். பேக்ரௌன்ட்ல "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா " பாட்டு ஓடுது திரும்பி தன்னோட சீட்ட பார்க்குறான்.அங்க ஒரு ஆள் உட்கார்ந்திருக்கார் . எழுப்ப மனசு வரல,அப்படியே பாட்ட பீல் பண்ணிட்டே வலதுபக்கம் திரும்புறான்.அங்க ஒரு அழகான பொண்ணோட ஒருபக்கம் முகம் மட்டும் லேசா தெரியுது.பார்த்தவன் ஒரு நிமிஷம் அங்கிருந்து பார்வைய திருப்ப முடியாம தவிக்கிறான்.


         இப்படி டக்குனு இவன் எந்த பொண்ண பார்த்தும் இம்ப்ரெஸ் ஆனதில்ல, ஆனா எல்லாம் மனித இயல்பு தான சில தடவை அவன் மனக்கட்டுபாட்ட மீறி அவனோட பஸ் பயணத்தில வர்ற சில அழகான பொண்ணுங்கள ரசிக்க ஆரம்பிச்சிடுவான். நாகரிகமா நடந்துப்பான் அழகியலோட ரசிப்பானே தவிர தப்பா பார்க்கமாட்டான்.

         இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்படி பாவாடை தாவனியில ஒரு பொண்ண பார்க்கிறான் மாரியப்பன்."குட்டி ஜிமிக்கி வச்ச கம்மல் போட்டுருக்கு, மூக்குல சின்ன கல் வச்ச மூக்குத்தி தெரியுது.அப்ப நல்ல காற்று அடிக்குது உடனே இடது கை விரல்களால தன்னோட தலைமுடிய கோதி விடுறா அந்த பொண்ணு அவளோட மோதிர விரலில ஒரு ஹார்ட்டின் மோதிரம் சூரிய ஒளியில மினுங்குது. அந்த பொண்ணோட ஒவ்வொரு அசைவையும் கவனமா கவனிச்சிட்டு வர்றான்.அந்த பொண்ணு முகத்த திருப்புற முழுசா இவன் பக்கம் திருப்புற நொடிக்ககாக காத்துகிட்டிருக்கான். அந்தபக்கம் திரும்புது இந்தபக்கம் திரும்புது ஆனாலும்  இவனால  அந்த பொண்ணோட முழு முகத்தையும் பார்க்க முடியல, கொஞ்ச முன் பக்கமா போய் பார்க்கலாம்னா கூட்டம் அதிகமா இருக்கு. எங்கேயும் நகர முடியாம அப்படியே வச்சகண் வாங்காம அந்த பொன்னையே பார்த்துகிட்டிருக்கான் மாரியப்பன் .

      பஸ் ஸ்பீக்கர்ல ஓடுற முள்ளும் மலரும் பட பாட்டு வேற மாரியப்பன ரொம்ப தொந்தரவு பண்ணுது. எப்படியாவது அந்த பொண்ண பர்த்துரனும்னு எம்பி எம்பி குதிக்கிறான்.ம்ஹும் முடியல... அப்ப அவன் செல்போன் ரிங் அடிக்குது.. ஆனா அவனுக்கு அந்த சத்தமே  கேட்கல. பக்கத்தில உட்கார்ந்திருக்கிற ஒரு ஆள் இவன் தோள்ல தட்டி "சார் போன் அடிக்குது அட்டென்ட் பண்ணுங்க" அப்படின்னு சொல்றார்.


        உடனே நிதானத்துக்கு வந்து போன் எடுக்கிற மாரியப்பன் "ஹலோ" சொல்றான் அந்தபக்கம் அவன் அம்மா "ஏய் மாரியப்பா எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா உன் பொண்டாட்டி பிள்ளைங்களலாம் பார்த்து எத்தன நாள் ஆச்சு அப்படி என்ன டுயுட்டில ஓடுற திருச்சில இறங்கி ஒரு எட்டு எங்கள பார்த்துட்டு போப்பா" படபடனு பேசிட்டு போன் கட் பண்ணிட்டாங்க  அவன் அம்மா.

          அப்ப தான் சுதாரிச்சான் மாரியப்பன் கொஞ்ச நேரம் ஏதயோ யோசிச்சுகிட்டிருந்தான்,தீடிர்னு எதோ ஞாபகம் வந்த மாதிரி  கூட்டத்த விலக்கிட்டு விறுவிறுனு  நேரா அந்த பொண்ணு இருக்கிற சீட் பக்கம் போறான். அந்த பொண்ணோட முகத்த நல்லா பார்த்துட்டு கேட்கிறான் "டிக்கெட் கொடுக்கும் போது கவனிக்கல, ஆமா நீங்க எந்த ஊர்ல எறங்கணும் " அப்படின்னு, அதுக்கு அந்த பொண்ணுகிட்டருந்து பதி   "விழுப்புரம் சார் " னு வருது. ஒரு தடவை நல்லா அந்த பொண்ணு  முகத்த பார்த்துட்டு  "அடுத்த ஸ்டாப் தான் இறங்க ரெடியா இருங்க" சொல்லிட்டு அந்த இடத்த விட்டு வேகமா நகர்ந்துட்டான்.
          ஒரு அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும் விழுப்புரத்தில பஸ் நிக்குது. அந்த பொண்ணு இறங்கி போறா, கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கிட்டிருக்கான்.என்ன நெனைச்சானோ  முதல உட்கார முடியாம போன சீட் பக்கம் வர்ற மாரியப்பன் "சார் எந்திரிங்க இது கண்டக்டர் சீட் கொஞ்சம் எந்திரிச்சு இடம் விடுறீங்களானு" கேட்டுட்டு அவர் நகரவும் அந்த சீட்ல உட்காருறான் மாரியப்பன்.

                 அப்ப பல வருஷம் முன்னாடி அவன் மனைவிய இந்த ஸ்டாப்ல அவன் முதல் முதல  பார்த்து லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணின ஞாபகம் வரவும் பஸ் ஸ்பீக்கர்ல "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர்ற நெஞ்சம் இல்லையோ" பாட்டு தொடங்கவும் சரியா இருக்கு சத்தம் போட்டு போலாம் ரைட்டுன்னு கத்துறான் பஸ் மட்டும் இல்ல மாரியப்பனோட நினைவுகளும் வேகமா தன்னுடைய இலக்க நோக்கி கிளம்புது.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் முதல் வாரம்-2011

Wednesday, July 20, 2011

எஸ்கேப்பு !!!


         "ஏய் சக்தி அன்னைக்கே சொன்னோம்ல உள்ளுர்லையே படின்னு கேக்காம வெளியூருக்கு படிக்க போன, 'இப்ப ஹாஸ்டல்ல பெருச்சாளி தொல்லை,பூச்சி தொல்லைன்னு, நீ உங்க அம்மாகிட்டேயே பேசிக்கோ' 'நா குளிக்க போறேன்னு' " அவன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டு,
செல்போன்ன அவங்க அம்மாகிட்ட குடுத்துட்டு  பாத்ரூம்க்குள்ள போறான் -விகாஸ்.


                பாத்ரூம்க்குள்ள வந்த வேகத்தில கவனிக்காம கால் வச்சு வழுக்கி கீழ விழுறான். அப்ப கரெக்டா அவன் கால் போய் பாத்ரூம்ல் தண்ணி வெளியாகுற குழி பக்கம் ஸ்டாப் ஆகுது. நல்ல வேலைனு எட்டிபார்க்குறான் அப்ப அங்க ஒரு வாலறுந்த பல்லி குழியவிட்டு மேல வரமுடியாம துடிச்சுட்டு இருக்கு..


           மெல்ல நள்ளி  கம்பிய பிடிச்சு எந்திரிச்சு நிக்கிறான். ஒரு கப் தண்ணிய கோரி ஊத்தினா பல்லி குழிக்குள்ள ஓடி போயிரும்னு கப் எடுக்கிறான் மனசு கேக்கல.. 'ஆத்தி குழிக்குள்ள விழுந்தா செத்து போயிரும்ல' அப்படின்னு மனசுக்குள்ள 
திங்க் பண்ணும் போதே, விகாஷோட மைன்ட் வாய்ஸ்- "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன், அந்த வரிசையில பல்லிக்குஉயிர் கொடுத்த விகாஸ்" ஆஹா அவன அவனே மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு  சந்தோசபட்டுக்கிட்டான்...

              உடனே பக்கத்தில் கிடக்கிற வாரியல்ல ஒரு ஈக்குச்சிய உருவி எடுத்து பல்லிய வெளியில எடுக்க போராடுறான்.பாவம் பல்லி இவன் காப்பாத்த முயற்சி பண்றது புரியாம பயத்தில அந்த பக்கமும் இந்த பக்கமும் பாய பாக்குது.


            இவனுக்கு டென்சன், ஆபிசுக்கும் டைம் ஆச்சு குளிக்கணும். பொறுமையில்லாம ஈக்குச்சிய பல்லி உடம்புக்கு அடியில விட்டு ஒரு கெந்து கெந்துறான் துள்ளி பறந்து வந்த பல்லி விகாஸ் வயித்துல பட்டு தரையில விழுந்து குடுகுடுன்னு ஓடி சுவற்றில ஏறிடுச்சு.


       இப்ப விகாஸ் கத்துறான் "அம்மா பல்லி வயித்தல விழுந்துடுச்சு கொஞ்சம் பால் கொண்டு வா பற்று விழுந்துற போகுது.அப்படியே பல்லி விழுந்த பலன் போட்டுருக்குற காலண்டர் அட்டையையும் எடுத்துட்டு வாமாங்க்றான்".

"யப்பா இத்துணுண்டு பல்லி இப்படி பயமுறுத்திட்டுருடுச்சேனு துண்ட உதறி கட்டுறான் -விகாஸ் ".


     அப்ப மேலே இருந்து பல்லியோட மைன்ட் வாய்ஸ் "நல்ல வேலை இவர் கீழ விழுந்த பலன்ல நா உயிர் பிழைச்சுகிட்டேன்"

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-மே மாதத்தில் நாலாவது வாரம்-2011