Friday, March 25, 2011

பூச்சாண்டி !!!


       
        ராமு 6.3அடி உயரம் கொஞ்சம் ஸ்மார்ட் பார்க்கிறதுக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும் மனசளவில ரொம்ப சாப்ட் நேச்சர் தான்.

      காதல் பண்றதுக்கு பயந்து வருஷத்த கடத்திட்டான் 29 வயசில அவன் வீட்டுலயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணத்த முடிச்சு வச்சுட்டாங்க...

      அவன் மனைவிக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலைங்கறதால காலைல சீக்கிரமாவே கிளம்பி போயிருவாங்க. அதனால தினமும் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கிரீச்ல கொண்டு விடுறது ராமுவோட பொறுப்பு. குழந்தைய சாப்பிட வைக்கிறதுக்குள்ள தினமும் அவனுக்கு போதும் போதும்னு ஆயிடும் .

    கடைசியா அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான் ரோட்ல நின்னு போற வர்ற ஆட்கள குழந்தைக்கு காட்டி "சாப்பிடு இல்ல, அந்த மாமாக்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," "இந்த தாத்தாகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," இப்படி பயமுறுத்தியே தினமும் சாப்பிட வச்சுட்டான். இன்னொரு பக்கம் போறவர்றவங்கள்ல குழந்தைய வச்சு கலாய்க்கிரதில இவனுக்கு ஒரு சந்தோசம்.

   இன்னைக்கும் அப்படி அவன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துகிட்டு வீட்டுக்குள்ள நுழையுறான் அப்ப ஜன்னல் ஓரத்தில ஒரு சத்தம் "ஏய் கஸ்துரி பாரு ராமுமாமா வந்துட்டார் சாப்பிடுரியா இல்ல உன்ன தூக்கிட்டு போய்டுவார் சீக்கிரம் சாப்பிடுன்னு" ஒரு குரல்...




ஒரு நொடி அதிர்ச்சி ஆகி அந்தபக்கம் எட்டி பார்க்கிறான் ராமு,

 'அவன் முகத்த பார்த்ததும் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிற குழந்தை மெதுவா சாப்பிட வாய திறக்குது '!!!







இப்படிக்கு 

மு.வெ.ரா-
திருநெல்வேலியிலுருந்து


மார்ச் மூன்றாவது வாரம்...2011





Monday, March 14, 2011

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்! ! !



      குமாருக்கு
 காலையில அவன் பேங்க் பேலன்ஸ் செக் பண்ணதிலருந்து மனசே சரியில்ல....


  அவன் மனைவிகிட்ட இருந்து முணு மிஸ்டு கால் இவன் போனையே எடுக்கல....


   இந்த மாசம் சம்பளம் இன்கிரிமென்ட் போடுவாங்கன்னு ஒரு வருஷமா காத்துக்கிட்டிருந்தான். நெறைய ப்ளான்லாம் வச்சுருந்தான்.பட் எல்லாம் ப்ளாப்... அவனுக்கு 1000 ரூபாய் தான் இன்கிரிமென்ட் போட்டுருக்காங்கங்கிறது கூட அவனுக்கு வருத்தமா இல்ல, ஆனா அவன் ஜுனியர்ஸ்ல சிலருக்கு 4000௦௦௦ ரூபாய் இன்கிரிமென்ட் போட்டுருக்கிறத நெனைச்சா அவனுக்கு இன்னும் அவமானமா இருந்தது.

   யார்கிட்டயும் பேசல....

    அவன் சீட்ல உட்கார்ந்து எம்.டிய மனசுக்குளையே திட்டி தீர்த்துக்கிட்டுருக்கான். வொர்க்கர்ஸ் பத்தி யார் கவலைபடுறாங்க, அவங்க வருமானம் வருஷம் வருஷம் ஏறுது. நமக்கும் சம்பளம் கூட்ட வேண்டாம் ச்சே...அவன் எரிச்சல் பட்டுக்கிட்டிருக்கும்போதே அவன்  மனைவிகிட்டே இருந்து ஒரு போன்கால் வருது ...




  முதல் கால அவன்  அட்டெண்ட் பன்னல ...

இரண்டாவது, மூணாவது தொடர்ந்து ஒரு அஞ்சு மிஸ்டு  கால்...

குமார் போன அட்டென்ட் பண்றான்...

ஹலோ......சொல்லு

    எதிர்முனையில அவன் மனைவி " ஹலோ என்னங்க சிவகாமி அம்மா நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்து 2 வருஷம் ஆச்சு, இந்த மாசமாவது ஒரு நூறு ரூபா சம்பளத்துல ஏத்தி கொடுக்க முடியுமானு கேட்கிறாங்க "...

     "ஏய் உனக்கு அறிவில்ல ஆபீஸ் நேரத்தில இப்படி தொந்தரவு பண்ற, அவங்க துவைக்கிற நாலு துணிக்கு மாசம் முண்ணூறு ரூபாவே அதிகம். இதுல கூட 100 ரூபா வேற குடுக்கணுமோ வையுடி போனனு கத்திட்டு போன வச்சுட்டான்.....
     


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் இரண்டாவது வாரம் ...

Tuesday, March 8, 2011

அம்மா அம்மாதானே !


நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்

குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா...

" ஏய் சூ...போ...."

அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா...

"மியாவ்...மியாவ்...
"

இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...09-03-2011

Sunday, March 6, 2011

காதலா ! காதலா !


     
         எப்பவும் காலேஜ் முடிஞ்சா தனியா வீட்டுக்கு வர்ற உமா இன்னைக்கு அவங்க அப்பாவோட வண்டியில வந்து இறங்கறத பார்க்கும்போது அவங்க அம்மா கலைவாணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு...

"என்ன உமா இவ்ளோ சீக்கிரம் காலேஜ் விட்டு வந்துட்ட?"

பதில் உமா அப்பாக்கிட்ட இருந்து வருது....

"ஆமா உன் பொண்ணு காலேஜ் படிக்கிற இலட்சணத்தை இன்னைக்குதான பார்த்தேன்...பஸ் ஸ்டாண்ட்ல யாரோ ஒரு பையன் கூட நின்னு பேசிகிட்டிருக்கா..."வார்த்தைகள் வேகமாய் வந்தன..

என்னங்க சொல்றிங்க ?

   "ம்...கேட்டா ரொம்ப நல்ல பையன்ப்பா என் கிளாஸ்மெட்,அவங்க அப்பா அம்மாவுக்குலாம் கூட என்னை நல்ல தெரியும்ங்கிறா..."

  அங்கும் இங்கும் நடக்கிறார் ஏதோ நினைத்தவர் மீண்டும் உமாவ பார்த்து பேசுறார். "ஏய்...உமா இந்த காதல் கீதல்னு ஏதாவது பேசிகிட்டிருந்த நடக்கிறதேவேற, என் சொந்தத்துல நல்ல மாப்பிள்ளையா பார்த்து நானே கட்டிவைக்கிறேனு" கத்திட்டு அந்த இடத்த விட்டு நகர்ந்துட்டார்...

   அந்த வார்த்தை காற்றில கரையிரதுக்குள்ள உமா மனசுக்குள்ள அவங்க அப்பா என்னைக்கோ தன்ன பத்தி பெருமையா சொன்ன சில வார்த்தைகள் திரும்ப திரும்ப ஓடுது "உங்க அம்மாவை நா காதலிச்சப்ப வேறசாதி பையன் எப்படின்னு தெரியலையேனு பல காரனங்கள் சொல்லி எதிர்த்த உங்க தாத்தாவ என் உழைப்பால முன்னேறி போராடி சம்மதிக்க வச்சேன் தெரியுமா"....




"காற்றில் உயிர் இருக்கிறது! ஆம் எத்தனை உயிர்களின் உணர்வுகள் அதில் கலந்திருக்கிறது!"


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் முதல் வாரம்.....

Saturday, February 26, 2011

குற்றம் நடந்தது என்ன?



        வினோத் எம்.பி.ஏ முடிச்சிட்டு உள்ளுரிலேயே வேலை பார்த்துட்டிருக்கான். படிச்ச எம்.பி.ஏக்கும் அவன் பாக்குற வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,அது கல்யாண பத்திரிக்கைக்காக கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சது, நாலு செமஸ்டர் ஒரு புராஜெக்ட் ஒழுங்கா முடிச்சு டிகிரியும் வாங்கிட்டான்.

         ஆனா என்ன சப்ஜெக்ட்லாம் படிச்சான்? சிலபஸ் என்ன? போன்ற ஆக்க பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டிங்கனா "சாரி பாஸ் தெரியலனு" பதில் சொல்ல அவன் வெட்க்கபட்டதே இல்ல,

      நீங்க வருத்தப்பட்டு அவன் கல்லூரியையோ பாடம் எடுத்த ஆசிரியரையோ இவனெல்லாம் எப்படி பாஸாக்கினாங்க "னு திட்ட வேண்டாம் பாவம் அவங்க...

        எல்லாம் நாட்டு நடப்பு, இன்னைக்கு தேதியில தினமும் டிகிரி காப்பி குடிக்கி​றவங்கல விட டிகிரி வாங்கினவங்க எண்ணிக்கை அதிகம். அந்த கூட்டத்தில ஒருத்தன் தான் நம்ம வினோத். பொது அறிவில ரொம்ப ஸ்ட்ராங். தினமும் காலையில எந்திரிச்ச உடனே முணு பேப்பராவது படிப்பான்,இல்ல புரட்டுவானு வச்சுக்கோங்களேன்...

        இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற பேப்பர் வந்ததே கொஞ்சம் லேட் தான்"அதையும் பக்கத்து வீட்டில எடுத்துட்டு போயிட்டாங்க."எப்ப தான் இந்த ஒ.சி பேப்பர் படிக்கிற பழக்கம் ஓயுமோ அப்புடி"னு கொஞ்சம் சத்தமாவே சொல்லிட்டான்...

      ஜன்னல் வழியா பக்கத்து வீட்டில இருந்து ஒரு கை மட்டும் இன்னைக்கு  பேப்பர வினோத் வீட்டுக்குள்ள தூக்கி போட்டுது. பேப்பர எடுத்தவன் ஒரு தடவை தேதியெல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சான்.

     முதல் பக்கத்திலயே அவன் ஸ்கூல் பிரெண்ட் தன்ராஜோட போட்டோவ பாக்குறான்.ஒரு நிமிஷம் யோசிச்சவன். :"அம்மா இங்க வாயேனு...கத்தி கூப்பிடுறான்..."


    அடுப்படியில சுவாரசியமா எப்.எம் கேட்டுக்கி​ட்டிருந்த அவங்க அம்மா அந்த சத்தத்தையும் தாண்டி வந்த வினோத்தோட குரலால  என்னமோ ஏதோனு பயந்து வெளியில வர்றாங்க. "என்னடா என்னாச்சு...ஏன் இப்படி பதறுற?"

     அவங்க பேசின வார்த்தை முடியிறதுக்குள்ள வினோத் ஆரம்பிச்சட்டான் "அம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம ஊர்ல நடந்த அந்த பாதரியார்  கொலை வழக்குல தன்ராஜ கைது பண்ணிருக்காங்க மா...." அப்படின்னான்..


   " இவன் ஒருத்தன் இங்க மனுஷிக்கு ஏற்கனவே பி.பி சுகர்லாம் ஏறி போய்கிடக்கு, இப்புடி காலங்காத்தாலேயே டென்சன் ஆகுற மாதிரி  கொலை,கொள்ளைனு பேசிகிட்டிருக்க,எந்த தன்ராஜுடா? "அப்படினாங்க வினோத் அம்மா.....


    அதான்மா நா 10th படிக்கும் போது டிராமால நா போலீஸ் வேஷம் போட்டேன் அவன திருடன் வேஷம் போட சொன்னதுக்காக என் கூட சண்டை போட்டுட்டு பேசாமலே போனானேமா அந்த தன்ராஜ்மா...அவன் எப்படிமா இப்படி?....


                    

      அப்பஅப்ப  அங்கங்க பாப்பேன் பி.ஏ.எகனாமிக்ஸ் படிச்சிடிருந்ததா சொன்னான்.செல் நம்பர்லாம்  கூட வச்சுருந்தேன் எல்லாம் மிஸ் பண்ணிட்டேன்.ரொம்ப கஷ்டபட்ட குடுமபம்மாங்கிறான்.
    
    " டேய் வினோத்...அந்த தன்ராஜ் உன் பிரென்ட்னு யார்க்கிட்டயும் போய்
உளறிக்கிட்டிருக்காதடா உன்ன கூப்பிட்டு விசாரிக்கபோறாங்கனு" சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க"வினோத் அம்மா ...

     வினோத் இந்த வார்த்தைய அவங்க அம்மா கிட்ட இருந்து எதிர்பார்க்கல,உலகத்திலேயே உயர்வான பாசத்த தர்ற உறவு அம்மா தான் ஆனா அது அவங்க அவங்க பிள்ளைங்க மேலதான்.

    அந்த போட்டோவ திரும்ப திரும்ப பார்க்கிறான் வினோத்.அவனுக்கு மனசு என்னமோ மாதிரி ஆயிடுச்சு. பல வருடங்களா ஸ்கூல் பிரெண்ட்ஸ்லாம் பார்க்க முடியலையேனு வருத்தபட்டுக்கிட்டு இருந்த வினோத். இனிமேல் யாரையுமே பார்க்காட்டா கூட பரவாயில்ல ஆனா தன்ராஜோட நிலைமையில யாரையும் பார்த்துரக்கூடாதுனு மனசுக்குள்ள நெனைசுக்கிட்டு கையில இருந்த பேப்பேர்ல அடுத்த பக்கத்த மெதுவா திருப்பி படிக்க ஆரம்பிச்சிட்டான்....




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்.
திருநெல்வேலியிலிருந்து  

காலம்:- பிப்ரவரி நான்காவது வாரம்...2011

Saturday, February 19, 2011

" ராணி "


மகேஷ் 5 நாளா வேலைக்கே போகல....

   அவங்க தாத்தா இறந்தப்பகூட அவங்க அப்பா இவ்வளவு சோகமா இருக்கல...

   அந்த வீடே களையிழந்து போயிருந்துச்சு...

  மகஷோட அண்ணி சித்ரா எல்லாரையும் சாப்பிட கூப்பிடுறா ?

   " அவன் அப்பாவுக்கு சித்ரா ராணிய என்னைக்கோ திட்டுனத நினைச்சு கோபம் வந்துச்சு"  சாப்பாடு வேணாம்ங்கற மாதிரி மூஞ்சிய திருப்பிக்கிட்டார்.

  "நல்ல குடும்பம்டானு" திட்டிட்டு அடுப்பங்கரைக்குள்ள போன சித்ராவும் ராணிய நினைக்க ஆரம்பிச்சிருந்தா...

   அப்ப உள்ள வர்ற மகஷோட அண்ணன் " டேய் மகேஷ் ஏண்டா எல்லாரும் இப்படி இருக்கீங்க ' ராணி 'என்ன இந்த வீட்டு பொண்ணா? நாய் தானடா செத்து போச்சுனா என்னடா? வேற வாங்கிக்கலாம்  அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட போயிட்டான்... "




    கொஞ்ச நேரம் வீடே அமைதியாயிருந்தது...

    தீடிர்னு எல்லாருக்கும் கேட்கிற மாதிரி சத்தமா ஒரு குரல்  "நா பாசமா நாய் வளர்த்ததும் போதும் பொசுக்குனு அது போனதும் போதும் இனி நாய் பத்தி பேச்ச கூட இந்த வீட்டுல யாரும் எடுக்க கூடாது" மகேஷ் அப்பா கோபமா பேசிட்டேவெளியில வந்தாரு ...

   அப்ப பக்கத்தில ஒரு நாய் குரைக்கிற சத்தம் விடாமா கேட்குது ...

 
மகேஷும் அவன் அப்பாவும் ஜன்னல் வழியா எட்டிப்பார்க்கிறாங்க...

   அந்தபக்கம் பக்கத்து வீட்டு சின்ன பையன் குரல் 'மகேஷ் அண்ணா இந்த நாய்க்குட்டிய பாருங்க எங்க அப்பா ராஜபாளையத்துலேர்ந்து வாங்கிட்டு வந்துருக்காரு'. " நம்ம ராணி நாய்க்குட்டி மாதிரியே இருக்குல்ல".....

   அப்பத்தான் அஞ்சு நாளைக்கு பிறகு மகேஷ் வீட்டுல எல்லாரோட முகத்துலையும் திரும்பவும் சந்தோசம் வந்துச்சு...
 
                                                            




இப்படிக்கு

மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து


காலம்:- பிப்ரவரி முன்றாவது வாரம்...2011

Wednesday, February 9, 2011

" பார்த்தேன் ரசித்தேன் -1 "

வணக்கம் நண்பர்களே,

கடந்த வாரம் நான் பார்த்த ஒரு தமிழ்படம் பற்றிய என் தனிப்பட்ட விமர்சனம் கேட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

நன்றி மு.வெ.ரா. திருநெல்வேலியிலிருந்து.....