Tuesday, October 26, 2010

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 1

"இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.

கற்பனைகள் கேமராவுக்குள் தஞ்சம் அடைய தொடங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டு அதன் இறுதிப்பகுதியில் திரை ஒளிப்பதிவில், ஒரு தனி பாணியை வளர்த்தெடுக்க தொடங்கியவர் இவரின் முன்றாவது கண்களுக்குள் நுழைந்தவர்கள் உலகப்புகழ் பெற்றார்கள் விருதுகள் வாங்கி குவித்தார்கள்.

ஒருவர் தற்காலத்தில் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு என்கிற இந்த நான்கு துறைகளிலும் நல்ல அறிமுகம் உள்ளவராய் இருப்பதே அரிது. ஆனால் அதில் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்தவர் இவர். இவருடைய படங்கள் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது நிதர்சனம், இயற்கையை அழகாய் திரையில் வடித்த இவர் கருத்திலும் குறை வைக்கவில்லை. விருதுகள் தாண்டி பல கலைஞர்கள் கைபிடித்து எழும்ப
விழுதுகளாய் இருந்தவர்.



கிட்டத்தட்ட 72 வயது இன்னமும் தனது 26 ஆவது படத்தை பற்றி அவர் பேச தொடங்கியது திரை துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்தால் உலக சினிமா வரலாறு இந்திய திரைப்படங்களும், இந்திய திரைக்கலைஞர்களும் இன்றியமையாது.( அது நிச்சயமாய் நனவாகும்! அந்த காலம் வெகுதூரமில்லை என்ற நம்பிக்கை இவரை சந்தித்து விடைபெறும்போது என் மனதில் திரும்ப திரும்ப தோன்றியது)

தமிழ் சினிமாவின் பிதாமகன்களின் ஒருவராக கருதப்படும் திரு.பாலுமகேந்திரா அவர்களை பற்றி சொல்லத்தான் இந்த சின்ன முன்னுரை.....



நான் இவர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இவர் படங்கள் பற்றி பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதும் தொலைகாட்சிகளில், இவருடைய "முன்றாம் பிறை" போட்டால் கூட நகராமல் படம் பார்த்தவர்களையும் பார்த்திருக்கிறேன். நானும் அப்படி பார்த்திருக்கிறேன்.ஆம்! ஒரு கலைஞனின் படைப்பு எல்லா கால கட்டத்திலும் விரும்பப்படும் படியாக அமைவது மிக அரிது. அந்த வரிசையில் இவரின் பல படங்கள் இருப்பது இவரின் தனிச்சிறப்பு.




இன்று காலை நானும் என்னுடன் மக்கள் தொலைக்காட்சியில்
பணிபுரியும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து எங்கள் பத்து நிமிட கதைகள் ( இன்று பல தொலைக்காட்சியில் குறும்படங்களுக்காக ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள் ஆனால் முதலில் நாங்கள் தான் இப்படி ஒரு நிகழ்வை தொடங்கினோம்). நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்யும் படி கேட்க சென்னை சாலி கிராமம்,தசரதபுரம் போலீஸ் பூத் அருகில் இருக்கும் பாலுமகேந்திரா அவர்களின் "சினிமா பட்டறை"க்கு சென்றோம்.நான் இவரை சந்திப்பேன்.இவ்வளவு நேரம் உரையாடுவேன் என்றெல்லாம் நினைத்துப்பார்க்கவில்லை, ஆனால் நான் சின்ன வயதில் கண்ட கனவுகள் மட்டுமே எனக்கு இது போன்ற அறிய வாய்ப்புகளை கிடைக்கச் செய்கிறது என்பேன்.

நா எங்க அப்பாம்மா கை பிடித்து பொருட்காட்சிகளில் நடக்கத் தொடங்கிய காலங்களிலேயே அங்கே ஒலிபரப்பாகும் விளம்பர அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டு அதே போல் பேச ஆரம்பித்த பழக்கம் தொடங்கி நான் வகுப்பில் பாட புத்தகத்தை வாசிக்க முதல் ஆளாக எழுவது வரை, போகிற வழியில் எல்லாம் சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டே பயணித்தது வரை நான் ஒரு வானொலி தொகுப்பாளராய் ஆனதற்கும் அடித்தளம் இட்ட கனவுகள் பின் தொலைக்காட்சி துறை பணியில் இடம் பெற நினைத்தது, நடந்தது, இன்னும் திரைப்படம் நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த கனவு பயணத்தில் நான் 2009 பிப்ரவரியில் மக்கள் தொலைகாட்சியில் நுழைந்த பின் பல அருமையான சந்திப்புகள் எல்லா துறையிலும் பல மனிதர்களின் அனுபவ பகிர்வுகள். இனி என் வாழ்நாளில் நான் ஊடகம் அல்லது திரைத்துறை சார்ந்து இயங்க முடியாமல் போனால் கூட நினைத்து அசைபோடவும் ஒரு நல்ல ரசிகனாய் வாழவும் தகுதியடைய தொடங்கிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்...

அதில் முக்கியமான நாள் இன்று.உள்ளே நுழைவதற்கு
முன்னேயே ஆயிரம் கேள்விகள் மனதில், சின்ன வயதில் இருந்தே கேள்விகள் கேட்டே பழக்கப்பட்டவன் ஆயிற்றே! முதலில் வரவேற்பறை சென்றோம் உள்ளே தகவல் சென்றதும் எங்களை அவருடைய தனி அறைக்கு அழைத்தார்.(அந்த அறை முழுக்க திரைப்படங்கள்.புத்தகங்கள், "உன் வாழ்வில் நீ நல்ல புத்தகங்களோடும், திரைப்படங்களோடும் அதிக நேரம் செலவழிக்க தொடங்கிவிட்டால் உன் வாழ்க்கை மிக அழகாகும்..". என்ற நான் எங்கோ எப்பொழுதோ படித்த
ஒரு ஆங்கில மேற்கோள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.)

பிடல் காஸ்ட்ரோ மேல் கொண்ட அபிமானத்தால் தலையில் நிரந்தரமாய் தங்கிவிட்ட தொப்பி (நீல நிறம் ),பனி படர்ந்தது போல் அடர்ந்த வெண் தாடி,நல்ல பெரிய முக்கு கண்ணாடி,கழுத்தில் கர்ச்சிப் வைத்து ஸ்கௌட் ஷ்கால்ப் போல் ஒன்றை கட்டியிருந்தார்.அதற்குள் அவர் முகத்தை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை..சாய்வு நாற்காலியில் அவர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். பொதுவாகவே நான் புகைப்படத்தில் ஒருவரை பார்ப்பத்தர்க்கும்,கான்பொளியில் பார்ப்பத்தர்க்கும்,அவரையே நேரில் பார்ப்பத்தர்க்கும் நெறைய வித்தியாசங்களை உணர்வேன், ஒரு புது பரிமானத்தில தெரிவாங்கனு கூட சொல்லலாம்.அதை இங்கேயும் உணர்ந்தேன்.

அப்பத்தான் அவர் மாணவர்களுக்கு காலை வகுப்பு முடிச்சுட்டு வந்துருந்தார், வணக்கம் சொல்லி உள்ளே நுழைந்தோம். உட்கார போன என்னை என் நண்பர் செய்கை காட்ட அந்த கம்பிர கலைஞனின் சம்மதத்திற்கு பிறகு அமர்ந்தோம். கோபக்காரர்,அப்புடி இப்பிடின்னு நெறைய பேர் சொல்லி கேள்விப்பட்டதால, அமைதியா இருந்தேன். அவர் பேசும் போது இருந்த ஒரு அமைதியும் நெருக்கமும் என்னை மடமடனு பேச வச்சுடுச்சு...

பாலுமகேந்திரா :- என்ன விசயம்?

நான்:- இந்த பத்து நிமிட கதைகள் குறும்படங்கள நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை நீங்க தான் தேர்ந்தடுக்கணும்.

பாலுமகேந்திரா :- நா எதுக்குப்பா எதாவது இளம் இயக்குனர் வச்சு தேர்ந்தேடுத்துக்ககூடாதா ?

நான்:- இல்ல நீங்க தான் தேர்ந்தடுக்கணும் இது தான் எங்க எல்லோருடைய விருப்பம்.

பாலுமகேந்திரா :- சரி ஆனா இன்னிக்கு குடுத்து நாளைக்கு வேணும்னு சொன்னா
என்னால முடியாது கொஞ்சம் நேரம் வேணும்னு சொன்னார் .

நான்:- கண்டிப்பா சார், பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை அதற்குள் கிடைத்தால் போதும்.

பாலுமகேந்திரா :- ம்... சரி நான் சனி,ஞாயிறு ரெண்டு நாளும் என்னோட அடுத்த பட நடிகர் தேர்வுக்காக நா திருவண்ணாமலை போறேன்,

தொடர்ந்து அவரே பேச தொடங்கினர் அவர் உதவியாளரை அழைத்து எங்களுக்கு தேநீர் கொண்டு வர சொன்னார் வந்தது "ப்ளாக் டீ" குடிப்பீர்களா என்று கேட்டார் (நான் சின்ன வயதில் இருந்தே டீ காபி எதுவும் குடிப்பதில்லை ப்ளாக் டீ குடித்த அனுபவம் இல்லை ஆனாலும் ஆம்! என்றேன் நன்றாகத் தான் இருந்தது.அவரே தொடர்ந்தார்.தன அடுத்த படத்திற்க்கான சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் (அது மீடியாக்களுக்கு தெரியாத விசயம் அதனால் பிரபலபடுத்தவில்லை) ஆச்சிரியம் இன்னும் அந்த ஆர்வம், அந்த படைப்புக்காக நானும் காத்திருப்பேன் .

நான்:-சார் கடைசியா என்ன படம் பார்த்திங்க?

பாலுமகேந்திரா:-அங்காடி தெரு படம் தான் பார்த்தேன் அந்த தீம் மிக அருமை, கதை வேறு தீம் வேறு வெளியூரில் இருந்து பிழைக்க வரும் இளைஞர்கள் பற்றிய ஒரு தீம் தேர்வு செய்தது ,சரி ஆனால் அந்த கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் சில நிறை குறைகளை பகிர்ந்து கொண்டார். என்ன ஒரு ஆழமான விமர்சனம்.

நான்:-இப்ப நல்ல படங்களுக்கு திரைஅரங்கு கிடைக்குறதில நெறைய பிரச்சனைகள் இருக்கே ?

பாலுமகேந்திரா:- எஸ். நம்ம சினிமா இப்ப மோனோபோலி ஆயிடுச்சு. நா அதனால தான் என் மாணவர்களுக்கு உலக சந்தைய பார்க்க சொல்றேன். ஒரு ஜப்பான் படமோ, கொரிய படமோ, இந்திய ரசிகர்கள் வெறும் சப்-டைட்டில் துணையா வச்சு விரும்பி தேடி தேடி பார்க்குறோமே, நம்ம படங்கள அவங்கள பார்க்க வைக்க வேண்டாமா? எப்பவும் ஒரு மாற்று
வழி இருக்கும் சோ அத பாருங்க அப்புடினார்! வாவ் ! தட்ஸ் மாஸ்டர்....

நான்:-உங்க சினிமா பட்டறை பற்றி?

பாலுமகேந்திரா:- சாகுற வரைக்கும் சினிமால இருக்கணும்,சினிமாவுக்கு எதாவது செய்துட்டு போகணும், அதனால ஆரம்பிச்சதுதான் இந்த ஸ்கூல் வீடு படத்துக்காக பாதி கட்டி முடிச்ச வீடு இது, மறுபடியும்ல தொடர்ந்து முதல் மாடி கட்டினேன், அப்புறம் முழுசா முடிச்சு என்னோட கதை நேரம் படப்பிடிப்பு ரெண்டுமுனு நடந்துது,அப்புறம் renovate பண்ணி இங்க இத ஆரம்பிச்சிட்டேன்.இங்க தமிழ் வழி கல்வி தான், ஒரு வருஷத்துக்கு 12 பேர் தான் " எழுத்து-இயக்கம்-ஒளிப்பதிவு-படத்தொகுப்பு " எல்லாமே கத்து கொடுத்து ஒரு creatorah உருவாக்கணும் அதான் என் ஆசை இங்க இருக்குற 12 பேர் கூ ட நா நெருங்கி பழகுறேன் அதனால அவங்கல நா நல்ல கலைஞர்களா உருவாக்க முடியும். நெறைய பேர் சேர்காததற்க்கு இதுவும் ஒரு காரணம்.அதே மாதிரி இங்க சான்றிதழும் கிடையாது.அவர்கள் வொர்க் தான் பேசும்.

நான்:-சார் எங்க தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் தர முடியுமா ?

பாலுமகேந்திரா:-இப்ப வேண்டாமே எல்லாம் பேசி பேசி சலிச்சுபோச்சு அப்புறம் ஒரு நாள் கண்டிப்பா தரேன்னு சொன்னார்.

எங்க நாம விட்ருவோமா இவ்ளோ நேரம் பேசினதே ஒரு குட்டி நேர்காணல் தான??? என்ன நான் சொல்றது !!!!!!!!!!!!!!



என்ன ஒரு பிளான்னிங் இதுதான் legends "டீ தீர்ந்து போச்சு இது என் மைன்ட் வாய்ஸ்" அவர் தற்பொழுது தான் புதிதாக அவர் அழைபேசி உபோயிக்க தொடங்கியிருந்ததார். அவர் ரசிகை ஒருவர் கொடுத்ததால் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தார்.அவர் கையாலேயே என் அழைபேசி என்னையும் வாங்கி எழுதி வைத்து கொண்டார்.வாங்க சுத்தி காட்டுறேன்னு சொல்லி இரண்டு மாடிகளிலும் ஒவ்வொரு அறையா அவர் விளக்கி சொல்ல பின்னாடியே நாங்க போனோம்.அவர் வீடு முழுக்க உலக திரைப்படங்களின் ஜாம்பவான்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்,சத்யஜித் ரே,புகைப்படங்கள். பாலுமகேந்திரா படத்தின் கதாநாயகர்கள் கதாநாயகிகள்,அவர் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ்,என எல்லாமே கருப்பு வண்ண புகைப்படங்கள் தான், அழகாக போட்ரைட் செய்யப்பட்டது. அந்த "சினிமா பட்டறை" முழுக்க ஒரு புகைப்பட அருங்காட்சியகம் போல் ஜொலித்தது.

கடைசியில தயங்கிக்கிட்டே உங்க கூட ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமானு கேட்டேன். கேமரா வச்சுருக்கிங்களானு? கேட்டார், நா நண்பர் கிட்ட வாங்கி கொண்டு வந்திருந்த ஒரு ஹன்டி காம எடுத்து காட்டினேன். உடனே என்ன நெனைச்சாரோ அவர் உதவியாளர கூப்பிடார். ஒரு ஸ்டில் கேமரா வந்துச்சு. வெளிய போலோமனு கேட்டார் சரின்னு தலையாட்டுனேன் நாங்க முனு பேரு நின்னோம் என்ன மட்டும் தனியா நிக்க வச்சு அவர் கையாள டயிட் குளோசப்ல ஒரு போட்டோ எடுத்தார். அவர் கையாள எடுக்கிற திரைப்படம்ல நடிக்க கிடைக்காத வாய்ப்பு நிழற்படத்திளியாவது கிடைச்சது, எனக்கு ரொம்ப சந்தோசம்,அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரோட உதவியாளர் எடுக்க போறார் ஒரு படம் "முடிஞ்ச வரைக்கும் டயிட் ஷாட்ல எடு" அப்புடின்னு சொன்னார்.அதான் பாலுமகேந்திரா.

கிளிக் "ஒரு சந்தோஷ நிமிடம் பதிவானது".



இடமிருந்து வலம்- 1 - முன் பதிவுகளில் அறிமுகப்படுத்திய திரு.பிரசாத் (இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட), 2 -நண்பர் ராஜா, 3 - திரு.பாலுமகேந்திரா , 4 - நானே தான் ...


கை குடுத்து வழி அனுப்பி வச்சார். "என் வாழ்நாளில் எனக்கு இன்று ஏற்பட்டது போன்ற ஒரு பெருமித உணர்வை இன்னொரு நபருக்கு ஒருநாள் என்னிடம் ஏற்படச் செய்ய வேண்டும்.அதற்காக உழைக்க தொடங்க வேண்டும் என்கிற அணையா கனவோடு நான் வெளியேறினேன்".

GOLDEN DAYS NEVER COME AGAIN>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எந்த ஒரு கலையும் அடுத்த தளத்திற்கு செல்வது அதன் நிகழ்கால பயணிகளின் கையில் தான் இருக்கிறது. ஒய்வு பெரும் வயதிலும் ஓயாத கனவுகளோடும்,கற்பனைகளோடும் திரு.பாலுமகேந்திரா நிகழ்த்தி வரும் இது போன்ற முயற்சிகளை ஒவ்வொரு நல்ல கலைஞர்களும் பின்பற்ற தொடங்கினால் தமிழும், தமிழர்களும் உலக அரங்கில் தனிஇடம் பெறுவது நிச்சயம்.

"கலை மனிதர்களுக்காக வளரட்டும்" "மனிதர்களிடம் மனிதம் வளரட்டும்"




ஆம்!!! ஒரு வெகுதூர பயணத்திற்கு தேவையான மிகப்பெரிய மாற்றமும்,ஊக்கமும்
நம் மண்ணிலும், நம் மனதிலும் தொடக்கமாகி விட்டது, என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்...

இன்னும் பல நாயகர்கள் வலம் வருவார்கள்.....

மு.வெ.ரா
26-10-10


பின்னூட்டம்:-நாள்-27-10-10

இன்று காலை 11 மணி ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு யாரென்று ஹலோ சொன்னால் எதிர்முனையில் வெங்கட் நான் பாலுமகேந்திரா பேசுறேன்.. ஒரு நிமிஷம் ஷாக் அப்புறம் சந்தோசம் யார் போன் பண்ணினாலும் அமைதியா பேசுற நான் இவரோட குரல் கேட்டதும் ரொம்ப பணிவாதான் பேச ஆரம்பிச்சேன், அதே நேரத்தில நல்ல பழகின ஒரு நபர்கிட பேசுற மாதிரி ஒரு பீலிங்.அவர் அந்த குறும்படங்கள பத்தி புகழ்ந்து தள்ளிட்டார்.எங்க அலுவலக்த்தில நடக்கிற விழாவுக்கும் வரேன்னு சொல்லிட்டார்.ஹாப்பி அந்த விவரங்கள் விரைவில்>>>>>>>>>>>>>>>

Thursday, October 21, 2010

போட்டி-1 முடிந்தது....-யார் கொடுத்த பேட்டி இது? (பரிசு போட்டி-கடைசி தேதி-அக்டோபர்-31-2010)


ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தருக்கு பரிசு!!!!!!!!!
சின்ன வயசில் இருந்தே பரிசுகள் மேல எனக்கு ஒரு கண்ணு!!!!!!!!!!! பரிசுகள பத்தி நா அடிக்கடி என்னோட முதன் முதலாய் நிகழ்ச்சி படபிடிப்புல கலந்துக்குற ஆளுமைகள் கிட்ட இப்படி சொல்றது உண்டு "கொடுக்கப்படும் பரிசின் மதிப்பின் காரணமாக இல்லாமல் அந்த பரிசை கொடுத்த நபரின் காரணமாக மதிப்பற்றதாக அமையறது, நீங்க பொக்கிஷமா பாதுகாக்கிற எதாவது விஷயம் இருக்கா? அப்படினுதான் கேட்பேன் பரிசுக்கான இலக்கணம் அப்புடின்னு நா நெனைக்குறது இத தான், இந்த கருத்து பொதுவா நமக்கு நம்மோட உறவினர் நண்பர்கள்கிட்டே இருந்து கிடைக்கிற பரிசுகளுக்கு பொருந்தும்.

ஆனா எல்லாரும விரும்புற பரிசுகள் போட்டில கிடைக்கிறது தான் அது பள்ளிக்காலம் தொடங்கி நம்ம வயது எவ்ளோ ஏறினாலும் எங்கேயோ நடக்கிற போட்டிகள சந்திக்க நேரும் போதோ இல்ல ஊடகங்கள் நடத்துற போட்டிகள பார்க்கும் போதோ பெரும்பாலானோர் மனசுல உண்டாகுற ஒரு உற்சாகத்தையும் சந்தோசத்தையும் வேற எந்த விஷயங்களும் நிச்சயமாய் தர முடியாது. அந்த போட்டியில வெற்றி தோல்வி அது ரெண்டாவது விஷயம் தான், பங்கேற்க்கனும்கிற ஒரு ஆர்வம் இருக்கே அது தான் முக்கியம் , அது மனித இயல்பும் கூட...

என்னோட பள்ளி கல்லுரிகள இந்த பரிசுகளுக்காக நா எவ்ளோ ஏங்கியிருப்பேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். LKG டு 5 TH வரைக்கும் நா படிச்சது பாளையம்கோட்டை செந்தில் நகர்ல இருக்கிற செயின்ட் ஜோசப் மெட்ரிக் ஸ்கூல் அங்க படிக்கும் போது அடி வாங்கினது பயந்தது டி.டில ஒளிபரப்பான சக்திமானுக்காக சனிக்கிழம லீவ் போட்டது என்னோட வாழ்நாளோட கோல்டன் டேஸ் தான்...

அங்க நா LKG படிக்கும் போது மாறுவேடப்போட்டியில கலந்துக்கிட்டேன்
எங்க அப்பா, தாத்தா எல்லாரும் காவல்துறையில பணிபுரிந்த ஒரே காரணத்துக்காக போலீஸ் வேஷம் போட்டுவிடப்பட்டு ,அப்புடித்தான சொல்லணும். நடந்தது என்னனு எனக்கு ஞாபகம் இல்ல வசனம் பேசுறதுக்கு பதிலா ரொம்ப நேரம் அழுதேனாம்,
அதனால சாக்லேட் பரிசா கொடுத்து ஓரமா உட்கார வச்சிட்டங்கனு அது மட்டும் தான் எங்க அம்மா சொல்லி எனக்கு தெரியும் முதல் போட்டியே தோல்வில முடிந்தாலும் என் கலை பயணம் தோல்வில முடியல் UKGல டான்ஸ் 5 ஆம் வகுப்புல கிளாஸ் பெஞ்ச தலைகீழ போட்டுட்டு கப்பலேறி போயாச்சு பாட்டு டான்ஸ்க்கு atmosphereல ஸ்கேல் வச்சி ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி perform பண்ணினது, பின்ன ஒரு முணு வருஷம் கேப்.

திருப்பி ஆறாம் வகுப்புக்கு பாளையம்கோட்டை சேவியர்ஸ் ஸ்கூல் வந்து சேர்ந்தேன் அப்புறம் 8 ஸ்டாண்டர்ட்ல எங்க அலங்கரராஜ் சார் (இவர பத்தி பின்னாடி வேற ஒரு பதிவுல விளக்கமா சொல்றேன் .அவர் ஒரு creative legend) தமிழ் அய்யா ஒரு போட்டி வச்சார் நதிய பத்தி புகழ்ந்து ஒரு புது பட பாட்டு வந்துருக்கு அத பாடுறவங்களுக்கு அஞ்சு ரூபா பரிசுன்னு சொன்ன உடனே லஞ்ச் breakla சீக்கிரம் சாப்ட்டுட்டு எங்க ஸ்கூல் பக்கம் இருக்குற அந்தோனியார் ஸ்கூல்கிட்ட ஒரு பாட்டு புக் கடை இருக்கு அங்க போய் (அந்த பாட்டு கண்டுபிடிச்சுட்டேனே) நாங்க சினிமாவ மறப்போமா ரிதம் படத்தில வர்ற தீம் தனனா நதியே நதியே பாடல் தான் அது படிச்சு மனப்பாடம் பண்ணி மத்தியானம் அவர் periodliye பாடி சாரி வாசிச்சு எப்டியோ அந்த அஞ்சு ரூபா பரிச வாங்கிட்டேன் அது தான் நம்ம ரீ- என்ட்ரி திரும்ப ஒன்பது, பத்து guest performance தான் 11 த்தல வாங்கின நாடகத்தில இயக்கி முன்னால் முதல்வர் பெண் வேடமேற்று நானே நடித்து வாங்கின இரண்டாம் பரிசு..

அப்புறம் சேவியர் கல்லூரில பி.காம் ல வாங்கின ஒரு ரெண்டு பரிசு இவ்ளோ தான் நா வாங்கின பரிசுகள் அதனால பரிசுக்காக பின்னாடி ஒரு தனி இயக்கமே உருவாக்கணும் என்கிற நோக்கத்தோட வளர்ந்துட்டு வர்ற நான், முதல் முயற்சியாய் இனிமேல் என்னோட வலை பூல மாதம் ஒரு போட்டியும் ஒரு பரிசும் கொடுக்க போறேன் இந்த மாத போட்டி நா படித்த ஒரு பேட்டியோட ஒரு சில உரையாடல்கள் சிலவற்ற இங்க போஸ்ட் பண்றேன் யார் கொடுத்த பேட்டி இது கண்டுபிடிங்க போட்டி முடிந்த பிறகு அந்த பேட்டி சம்பந்தமா ஒரு பெரிய பின்னுட்டம் எழுத காத்துக்கிட்டிருக்கேன். பதில் தெரியலனா இந்த பதிவோட கமெண்ட்ஸ்ல question கேளுங்க நா க்ளு தரேன் ஓகேயா.............................


1.கேள்வி:- பெரும்பாலும் ஏன் நீங்க பேட்டி கொடுக்கிறதில ?

பதில்:- நான் பேட்டி கொடுப்பதை விரும்புபவன் இல்லை பத்திரிக்கையாளர்கள் நான் அல்ல எந்த நடிகர் சொல்வதையும் அப்படியே எழுதுவதில்லை. எனக்கு நெடு நாட்களாக ஒரு சந்தேகம் இருக்கிறது எதற்காக எப்போது பார்த்தாலும் என்ன படம் நடித்தீர்கள்? யாரை உங்களுக்குப் பிடிக்கும்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கு பதிலாக அகழ்வாய்வில் என்ன புதிதாகக் கண்டுபிடிக்கிறது? பால்வினை நோய்க்கு மற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டிரிருக்கிறதா என்று கேளுங்களேன்? எனக்குப் பொருளாதாரமும் தெரியாது! கணிதமும் தெரியாது! நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதைப் போலவே நானும் உங்களிடம் அதிகம் கேள்வி கேட்க விரும்புகிறேன்...


2.கேள்வி:-
மக்கள் உங்களிடம் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதற்காகத்தானே இந்தப் பேட்டி சந்திப்பு எல்லாமும்?
பதில்:- அதெல்லாம் சுத்தப் பொய்! படம் ஓடாத எந்த நடிகரையாவது நீங்கள் கேள்வி கேட்கச் செல்வதுண்டா? நல்ல வேளை,எனக்குச் சில படங்கள் நன்றாக ஓடியிருக்கின்றன, விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கின்றன, என் படங்கள் ஓடியிருக்காவிட்டால் நீங்களும் நானும் இங்கு உட்கார்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பம் உருவாகி இருக்காது.

3.கேள்வி:- அப்படி என்றல் யார் தான் கலைஞர்கள்?
பதில்:- ஒன்றை தானே கற்பனை செய்து அதை ஒரு கலை வடிவமாக வெளிப்படுத்தி மற்றவர்கள் அதை பாராட்டுமாறு செய்கிறானோ அவனே.


4.கேள்வி:- ஒரே ஒரு கடைசி கேள்வி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
பதில்:- இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது அதை உருவாக்கியவரை பற்றிய பிரமிப்பு இருக்கிறது.அந்த சக்தியை ஆராதிக்க விருப்பமிருக்கிறது.எனக்கு சாவைப் பற்றிய பயமில்லை. கடவுள் என் வாழ்க்கைக்குத் தேவையனவராக இருக்கிறார்.





சவாலுக்குத் தயாரா ?????????

க்ளு:-
நீங்கள் எதாவது பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள் அந்த பதிலின் தன்மையை பொறுத்து நான் நெறைய க்ளு தர காத்திருக்கிறேன்.....



இந்த போட்டியின் முடிவு :-

பத்திரிக்கையாளர்:-அப்படியானால் நடிப்பு ஒரு கலை இல்லையா?

மர்லான் பிராண்டோ :- உங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்.உங்களுக்கே தெரியும்.சினிமா நடிகர்கள் எவரும் கலைஞர்கள் அல்ல.

பத்திரிக்கையாளர்:-முன்பெல்லாம் நீங்கள் பத்திரிக்கையாளர்களிடம் நிறைய பேசியிருக்கிறிர்களே?

மர்லான் பிராண்டோ :-தவறுதான்.இதுபோல நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் இது தவறு என்று தெரிந்தவுடன் நிறுத்திவிட வேண்டுமில்லையா? தொடர்ந்து அதே செய்வது மகத்தான தவறாகிவிடதா?

இந்த கேள்விகள் எல்லாம் அந்த நபர் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி தான் முழு பேட்டியும் பதிவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பமால் (அது தான் அவரின் ஆசையும் கூட) சில முக்கியமான கேள்விகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். தற்பொழுதெல்லாம் ஊடகங்கள் மலிந்து விட்டன. ஆனால்
இந்த காலத்திலும் தங்களை வெளிகாட்டி கொள்ள கண்டவற்றை பேசி சமுகத்தில் தங்களை அறியாமல் தவறான பிரச்சாரம் செய்து வருபவர்கள் மத்தியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்கு முன்னால் இந்த பேட்டி கொடுக்கும் போது ஒரு தனி மனிதன் அதுவும் சமுகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் துறையில் நாம் இருக்கிறோம். என்பதை உணர்ந்து ஒரு அவசியமான பேட்டியை ஒரு அவசியமில்லாத காரணத்திற்காக கொடுத்து ஒரு முன்னுதாரனமாய் இருந்திருக்கிறார்.

இந்த பேட்டியை ஒரு பிரபல எழுத்தாளரின் புகழ் பெற்ற தொகுப்பில் படிக்க நேர்ந்த போது தான் இப்படி ஒரு நடிகரால் பேச முடியுமா? ஒரு நல்ல நடிகர் என்றால் இவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராய், விசயம் தெரிந்தவராய் இருக்க வேண்டும் போல என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல், திரையில் நடித்தவர்களை எல்லாம் நாளைய தலைவர்களாய் நினைத்து வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் என் சக இளைய சமுதாயத்தை நினைத்து மனம் வேதனை அடைந்ததது உண்மை. இன்னும் வருத்தம் இந்த போட்டி அறிவித்து பல நாள் கடந்தும் என்னால் முடிவு அறிவிக்க முடியவில்லை. அதற்கு எதிர்பாரமால் எனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு இடையில் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றது.

(இந்த முறை நான் ஊருக்கு சென்று திரும்பிய பிறகு எனக்குள் பல மாற்றங்கள் ,கடந்த 2009 ஜனவரி 8 காலை நான் சென்னை வந்தேன். பல கனவுகளோடு பொதுவாக தென் மாவட்டங்களில் இருந்து படித்து முடித்தவுடன் எந்த வேலையோ அது சென்னையில் பார்த்தால் தான் திருப்தி என்று இங்கு வந்து இந்த ஜன சமாதியில் ஐக்கியமாகி கரைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இரண்டாவது ரகம் நான் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைப்பேன்,என்று ரெயில் ஏறுபவர்கள் தான் அதிகம். நான் இரண்டாவது ரகம், நான் பிறந்ததது சென்னைதான் தாம்பரத்தில் இன்றும் இயங்கி வரும் கிறிஸ்துதாஸ் மருத்துவமனையில் 22 வருடங்களுக்கு முன்னால் என் அம்மாச்சி குடும்பம் முழுக்க சென்னையில் வந்து குடியேறியதால் என் அம்மாவிற்கு பிரசவம் ஆனது இங்கு, ஆனால் நான் பிறந்து ஆறு மாதத்தில் திருநெல்வேலிக்கு சென்று நான் வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலியில் தான் இன்றளவும் நான் என் சொந்த ஊராக கருதுவதும் திருநெல்வேலியை தான், இருந்தாலும் 20 வருடங்கள் கழித்து என் வாழ்வின் இரண்டாம் பகுதியை இங்கு தான் கழிக்க போகிறேன் அதுவும் எனக்கு பிடிக்காத ஒரு சுழலில் என்று அஞ்சினாலும் சினிமா என்ற ஒரு வார்த்தைக்காக ஊரில் கல்லூரி படிக்கும் போதே யாருக்கும் கிடைக்காத அதுவும் மிக குறைந்த பத்தொன்பது வயதில் ஒரு பண்பலை வானொலி அறிவிப்பாளராக கிடைத்த அறிய வாய்ப்பை, நல்ல சம்பளத்தை விட்டு விட்டு எல்லாம் மறந்து சென்னை வந்து சினிமாவையும் மறந்து திரைப்படங்களே இல்லாத மக்கள் தொலைகாட்சியில் பணிபுரிய தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. இவ்வளவு நாள் அனுபவம் தனி கதை அதை வேறு ஒரு பதிவில் சொல்கிறேன். அந்த அனுபவங்கள் கற்று கொடுத்த பாடம் என்னை மீண்டும் என் ஊருக்கே செல்ல அழைக்கிறது சினிமாவில் வெற்றி பெற முடியாததால் அல்ல, உண்மை திரைப்படங்கள் என்னவென்று புரிந்து கொண்டதாலும், இணைய புரட்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தும் என் கலை பணியை தொடரலாம், என்ற நம்பிக்கையாலும் என் சொந்த மண்ணில் ஏதாவது
செய்யாமல் ஓயக்கூடாது என்ற தீராத எண்ணத்தாலும் நான் திரும்ப நினைத்து அந்த நாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலைக்கு இந்த பயணம் உணர்த்தியது என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றம் தான். என் தாய் வழி மாமன்கள் 5 பேர் உண்டு அதில் எல்லோரும் எனக்கு நெருக்கம் தான் அதில் எங்கள் குமரன் மாமா இந்த தீபாவளிக்கு எங்கள் ஊர் வந்திருந்தார் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை ரொம்ப உறுத்தியது " டேய் நம்ம ஊரில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆசை நம்ம யாருக்கும் இல்ல நாம நம்ம இஷ்டத்துக்கு, நம்ம ஊரை மறந்து எங்க வேணாலும் உடனே கிளம்பி போய் செட்டில் ஆகிடுறோம்" உண்மை தான் திருநெல்வேலியில என்ன இல்ல? "திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு" பெரியவங்க சொன்னது சரி தான் ஆனா தேடி அங்கேயே இருந்துருனு சொல்லல நமக்கும் அது ஆசையில்ல, ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் வேற வழி இல்லாம சொந்த ஊர் மறந்து பிழைக்க வந்த ஊரிலியே கலந்துர்றோம். அந்த நிலை எனக்கும், என் பிள்ளைகளுக்கும், வந்துற கூடாதுங்குற பயத்தில பல கனவுகளோடு காத்துக்கிட்டு இருக்கிறேன். இனிமேல் பல புது பயணங்கள், சந்தோசமா அதே நேரத்தில சீரியஸ் திட்டங்களோட வாழ்கைய அனுபவிக்கனும். நல்ல விசயங்கள் ஆயிரம் இருந்தாலும் சொந்த மண்ணின் நினைவுகள் மறந்து ஆயிரம் வெற்றிகள்,பெயர்,புகழ் கிடைத்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் சந்தோசம் இன்றி தவித்து கொண்டிருக்கும் பலரின் வரிசையில் நானும் சேர்ந்து விடாமல் சிறிது மாற்றி யோசிக்க முயற்சிக்கிறேன்,மற்றதை பொறுத்திருந்து பார்ப்போம். பாருங்க இப்படி தான் நா எப்பவும் எதையோ பேசிக்கிட்டிருக்கும் போது இடையில வேற பக்கம் டைவேர்ட் ஆகிறேன் என்ன பண்றது சின்ன வயசில வகுப்பறையில தொடங்கின பழக்கம் போகுமா? )

பின் என் அலுவலகத்தில் இருந்த 5 நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் பனி விலகல் ஆக கடந்த வாரம் முழுக்க நான் படப்பிடிப்புக்கு சென்றதாலும் கொஞ்சம் தாமதமாகி விட்டது, நெறைய பேர் பார்த்து படித்ததோடு சரி போட்டியில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் முதல் பதிலே சரியாக சொல்லி வெற்றி பெற்றவர் திரு.செல்லையா முத்துசாமி அவர்கள் சரியான பதில் மற்றும் அவர் பற்றிய விவரங்கள் கிழே ......



chelliah muthusamy / செல்லையா முத்துசாமி(அவருக்குரிய பரிசு அவரை சென்று சேர்ந்துவிடும்.)



Hometown: சத்திரகொண்டான், திருநெல்வேலி மாவட்டம் Currently: சென்னை, தமிழ்நாடு
Occupation: ஒளிப்பதிவாளர்

அவர் பற்றிய விவரங்கள் அறிய " http://chelliahmuthusamy.blogspot.com/-இந்த லிங்க்-அய் காப்பி செய்து "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர்" டாஸ்க் பார் இல் பேஸ்ட் செய்து தெரிந்து கொள்ளவும் "


விடை:-
பேட்டி கொடுத்தவர் "மர்லன் பிராண்டோ"

மார்லன் பிராண்டோ

மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர். த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில் நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.

( http://www.wsws.org/tamil/articles/2004/july/120704_MBrando

http://en.wikipedia.org/wiki/Marlon_Brando


(இந்த லிங்க்-அய் காப்பி செய்து "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர்" டாஸ்க் பார் இல் பேஸ்ட் செய்து இந்த கட்டுரை தொடர்பான மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ளவும் )



Marlon Brando, Jr.
Born:April 3, 1924(1924-04-03)
Omaha, Nebraska, U.S.
Died July 1, 2004(2004-07-01) (aged 80)
Los Angeles, California, U.S.
Occupation Actor/Film director
Years active 1944–2004
Spouse Anna Kashfi (1957–1959)
Movita Castaneda (1960–1962)
Tarita Teriipia (1962–1972)
Marlon Brando, Jr. (April 3, 1924 – July 1, 2004) was an American actor who performed







இந்த மாத போட்டி விரைவில்>>>>>>>>>.

Saturday, October 16, 2010

நான் ரசித்த புத்தகங்கள்-1 (புத்தகங்கள் மனித பிறவிகள் அல்ல ஆனால் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன- பென்னட்)



" வாழ்க்கை நமக்காக ஆயிரம் ஆச்சரியங்களையும்,சந்தோசங்களையும் தனக்குள்ளே ஆழ புதைத்துள்ளது. என்ன அவற்றை நாம் சந்திக்க வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சிறிய வலிகளினால் நாம் பயணத்தை தொடர தயங்கினாலோ, வருந்தினாலோ பல அற்புதமான அனுபவங்களை நிச்சயமாக இழக்க நேரிடும்"


கடந்த ஒரு மாசத்துக்கும் மேல இது தாங்க என் மனசுல நிறைஞ்சுருகிற வாசகம்...நா ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட அனுபவங்கள பகிர்ந்துக்க மட்டுமே இந்த வலைபூனு ம்....ம் இப்ப கூட அப்பிடிதான் நா படித்த ஒரு அற்புதமான அனுபவத்த உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புறேன்!

எனக்கு என்ன விட வயது முத்த நண்பர்கள் தான் அதிகம் அது எனக்கு ரொம்ப நல்ல விஷயங்களா தான் அமைஞ்சுருக்கு அப்புடி என்னோட நண்பர்கள்ல ஒருத்தர் திரு.பிரசாத் நான் வியந்த மனிதர்கள்ல அவரும் ஒருத்தர். ( "என் ப்ளாக் டைட்டில் கீழ் உள்ள வாசகத்தை ஒரு முறை படிக்கவும் " )அவருக்கு புத்தகங்கள் மேலையும் திரைப்படங்கள் மேலையும் இருக்கிற காதல் எனக்கும் ஓட்டிக்க ஆரம்பிச்சுடுச்சுனு தான் சொல்லணும்.நா ஒன்னாவது படிக்கும் போது என் மீனாக்ஷி ஆச்சி (என் அப்பாவோட அம்மா )அறிமுகப்படுத்தி வச்ச சிறுவர் மலர்ல தொடங்கிய என் வாசிப்பு பழக்கம் இப்பதன் கிளை விரித்து வளர ஆரம்பிச்சிருக்கு.செப்டம்பர் தொடக்கதில ஒரு நாள் இரவு உணவுக்கு பிறகு அவர் வீட்டுல சும்மா உட்கார்ந்து கதையடிச்சுட்டு இருந்தப்ப அவர் எனக்கு குடுத்த புத்தகம் தான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரின் "சிதம்பர நினைவுகள் " தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட நூல் மொழி பெயர்த்தவர் திருமதி-கே.வி.ஷைலஜா

(வெளியிடு-வம்சி பதிப்பகம்)
முகவரி-
19 .டி.எம்.சரோன்,
திருவண்ணாமலை
தொலைபேசி-04175 -238826







பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் சிதம்பர நினைவுகள் சிறுகதை தொகுப்பு இந்த புத்தகம் தான் நா மேல சொன்ன வாழ்கைய பத்தி ஒரு அற்புதமான புரிதல எனக்கு உண்டாக்குச்சு படிச்ச பிறகு நிச்சயம் உங்களுக்கும் அப்படி ஒரு உணர்வு ஏற்படும்>>>>>>
ஒரு மனிதன் தன்னோட வாழ்கையின் பல்வேறு காலகட்டங்கள்ல நடந்த நினைவுகள உள்ளது உள்ளபடியே மறைக்காம திறந்த மனதோட எழுதுறதுக்கு ஒரு மிகப்பெரிய தைரியம் வேணும். அதையும் சுவாரசியமா கதை பாணியில சொல்ற விதம் நமக்கெல்லாம் நம்பிக்கைதர கூடிய அனுபவம். அத மலையாளத்திலிருந்து தமிழுக்கு நல்ல படியா மொழிபெயர்த்து தந்த திருமதி கே.வி.ஷைலஜா அவர்களுக்கும் நன்றிய சொல்லிக்கிறேன்.


அதுல என்ன பாதிச்ச ஒரு கதைய இங்க போஸ்ட் பண்ணிருக்கேன் படிங்க கமெண்ட்ஸ் எழுதுங்க!!!!!!!!!!!

சிதம்பர நினைவுகள் -முதல் கதை

சிதம்பரம் கோவிலுக்குள் நான் அடி எடுத்து வைத்த போது நேரம் இரவாகியிருந்தது . பக்தர்கள் எல்லோரும் கலைந்து போயிருந்தார்கள். கோவில் கதவுகள் மூடும் நேரமாகிவிட்டது. விசாலமான கருங்கல் தளங்களிலும், கல்தூண்களுக் கிடையிலுமாகப் பிச்சைக்காரர்களும் , தீர்த்த யாத்ரிகர்களும் உறங்கப்போகும் ஆயுதத்தில் இருந்தார்கள்.

துணி முட்டையைத் தரையில் வைத்து ஒரு தூணில் சாய்ந்து நான் உட்கார்ந்தேன். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வழியாக... சீர்காழி வழியாக... நடந்து நடந்து...அப்பா எவ்வளவு தூரம்! எவ்வளவு களைப்பு ! கால் மடித்து உட்கார்ந்தபோது ஆசுவாசமாக இருந்தது.

சிதம்பரம் கோவிலின் உச்சியிலிருந்து எட்டிப் பார்த்த நிலா, சுடுகாட்டு சாம்பலென வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது . அந்த அமானுஷ்ய அமைதியில் நடராஜ மூர்த்தியின் உற்சவச் சிலை என்னைச் சுற்றி நர்த்தனமாடியது . கோவிலின் உட்புறம் ஏதோ ஒரு மூலையில் ஏகாந்தமாய் . ஒலித்த காண்டா மணியின் சப்தம் இரவின் சூன்யத்தில் லயித்தது

எனக்குக் கொஞ்சம் பக்கத்தில் தூண்களுக்கிடயில் வயதான ஒரு பெரியவரும், மூதாட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். அலுமினியப் பாத்திரத்திலிருந்து சோறு அள்ளி, நடுங்கும் கரங்கள் கொண்டு மனைவிக்கு ஊட்டிவிட்டுகொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.


உலகம் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய சித்தார்த்த ராஜகுமாரன் சாரதியிடம் கேட்கிறான்.

"சாரதி, என்ன இது?"

"ராஜகுமாரா, இதுதான் வயோதிகம். மனிதனின் கடைசி நிலை ."

ராஜகுமாரன் அதிர்ந்தவனாய் மீண்டும் கேட்கிறான்.

"அப்போது எனக்கும் இந்த நிலைதானா?"

"நிச்சயமாய் ராஜகுமாரா. உங்களுடைய கடைசிக் காலமும் இப்படித்தான் இருக்கும்."

இதைக் கேட்ட ராஜகுமாரன் தளர்வுற்றன். மனிதனின் கடைசிநிலையை அறிந்து துக்கதிலாழ்ந்தான் , சித்தார்த்த ராஜகுமாரன்.

அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்த கதை இது. அம்மாவைப் பார்த்து எத்தனையோ வருடங்களாய்விட்டது.

எங்கோ ஒரு கிராமத்தில், சின்ன வீட்டில், இருண்ட அறையின் மூலையில், விதவையாய், வயதானவளாய், நோயாளியாய், வறுமையில் உழன்றவளாய்... என்ன செய்வாள் இப்போது?

தூங்கியிருப்போளோ? தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாளோ? என்னை நினைத்துக்கொண்டிருப்பாளோ? கண்கள் பனித்தன எனக்கு.

முதியவர் அந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கோவில் குளத்தில் இறங்கினார். குனிந்து...மெல்ல மெல்ல...நிலவொளியில்.வெள்ளைப் புடவையணிந்த ஆவிகளைப் போலத் தெரிந்தது எனக்கு.


ஒருவேளை, சில வருடங்களுக்குப் பிறகு நானும் என் மனைவியும் இது போல ஏதோ ஒரு கோவிலின் வாசலிலோ குளத்தின் படித்துறையிலோ, நடக்க முடியாமல், கடைத் திண்ணையிலோ , தெருவோர மரநிழழிலோ சோர்ந்திருப்போமோ?



நினைத்து, நினைத்து நான் தூங்கிப்போனேன் .

தொடந்து ஒலித்த மணி ஓசைகளும், சங்கீத ஆராதனைகளிலும், என்னை
எழுப்பின, அதிகாலை அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது. பக்த கூட்டம் வர
ஆரம்பித்திருந்தது.

சிதம்பரம் கோவிலைப் பற்றி எத்தனையோ கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். படங்கள் பார்த்திருக்கிறேன். சிற்பக் கலையின் அதி அற்புதமான நடராஜ விக்ரகம். வாஸ்து கலையின் உன்னதன்களாய் நிற்கும் கோவில் மதில்கள், நர்த்தனக் கலையின் நூற்றியெட்டு கரணங்களும் செதுக்கப்பட்ட கோபுரங்கள்.



எல்லாவற்றையும் பார்த்து முடிக்கப் பல நாட்களாகும். பல நாட்கள் தங்கிப்பார்க்க அவ்வளவு பணம் இல்லை. பிச்சை எடுக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை, பிச்சை எடுத்தாவது எல்லாவற்றையும் பார்க்கவேண்டும்.

கோவில் குளத்தில் கூட்டமில்லாத மூலையில்,உடல்நிலை சரியில்லாத குழந்தைக்குத் தாய் பரிவோடு செய்யும் உபசாரமாய் முதியவளின் முகம் கழுவிக் கொண்டிருந்தார் முதியவர்.

எனக்கு மனசு கரைந்தது. துக்கத்தில் உடைந்துபோனேன் நான்.

சம்போ மகாதேவா

ஒரு குரல் என்னை அதிர வைத்தது. சுடலைச் சாம்பலை முகத்தில் பூசி, ஜடாமுடியும், தடியுமகக் கையில் சூலம் ஏந்திய ஒரு சந்நியாசியின் குரலாக இருந்தது அது.

கோவிலை ஒரு வலம் வந்து, மீண்டும், ஒரு கருங்கல் தளத்தில் உட்கார்ந்தேன். முதியவர் இப்போது வாழை இலைக் கீறலில் இருந்து இட்லியை பிட்டு மனைவிக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்.




நடராஜ விக்ரகத்தின் முன்னால் நிற்கும்போதும், சிற்பங்களை ரசித்தபடி நடக்கும்போதும், என் மனம் அதிலெல்லாம் லயிக்கவில்லை. அந்த முதிய தம்பதிகளின் உறைந்துபோயிருக்கும் அன்பையும், பிரியத்தையும் நினைத்தபடி கோவில் தளங்களில் அலைந்து கொண்டிருந்தேன் நான். அப்படி அலைந்தபோது பலமுறை நான் அவர்களைப் பார்த்தேன். சில நேரம் ஏதாவதொரு சன்னதியில் வணங்கிக் கொண்டும் சில நேரம் கட்டிடத்தினடியில் விழுந்திருக்கும் நிழலில் நிசப்தமாய் நின்றுகொண்டும் சில நேரம் கல்தூண்களுகிடையில் உட்கார்ந்தது ஏதேதோ பேசிக்கொண்டும் இணைபிரியாமல் அடி வைத்து அடி வைத்து நடந்துகொண்டும் இருப்பதைப் பார்த்தேன்.

கோவில் வாசலிலிருந்து நான் கொஞ்சம் பழம் வாங்கினேன். அந்த முதியவர்களிடம் பேச ஆசை வந்தது எனக்கு.

கல் தூணில் சாய்ந்து, கால் நீட்டி உட்கார்ந்திருந்தார் பெரியவர். அவருடைய மடியில் தலை வைத்து அந்த அம்மா படுத்திருந்தாள். அவளுடைய வெள்ளி முடி இழைகளில் பிரியம் மீதுர விரலோட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.


பக்கத்தில் போன நான் சன்னமாய் இருமினேன். அந்த அம்மா மெல்ல எழுந்தாள். பெரியவர் தலையுயர்த்தி என்னை பார்த்தார்.

சாந்தமான முகங்கள். வாழ்வின் எல்லாச் சம்பவங்களையும் எதிர்கொண்ட கண்கள், தலைமுடியும், புருவமும், கண் இமைகளும்கூட நரைத்திருந்தன . வெளுத்து மெலிந்த உடம்பு, பழையதானதால் பழுப்பேறிய வெள்ளைப் பருத்தி ஆடைகள்.

நான் அந்த முதியவரை ஆதரவாய் நோக்கிப் புன்னைகைத்துப் பழங்களை நீட்டினேன். குழந்தையைப்போல வெள்ளையாய்ச் சிரித்த அவர். அதை இருகைகளும் நீட்டி வாங்கினார். ஏதும் புரியாத முதியவள் என்னையும் கணவனையும் மாறிமாறிப் பார்த்தாள்.


நேரம் மத்தியானமாயிருந்ததது . மணிகளின் சப்தங்களும் கீர்த்தனைகளின் ஒலிகளும் தேய்ந்தடங்கியிருந்தன . காற்றின் பாடல் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது. வில்வத்தில் கற்பூரத்தின், விபூதியின் சிவமணம் சூன்யத்தில் எங்கும் நிறைந்திருந்தது.

மெல்லிய குரலில் தழிலும், ஆங்கிலமும் கலந்து, இற்று ,பதில் அறுபடும் நினைவுகளிருந்து கோர்த்துக் கோர்த்து முதியவர் பேச ஆரம்பித்தார். நினைவுகள் கார்மேகங்களாய் வழி மறைக்கும் போது அவர் ஒன்றும் பேசாமல் கண்முடி மௌனமானார் நான் ஒரு குழந்தையைப்போல அவரிடமிருந்து கேட்கும் அவளோடு அமர்ந்திருந்தேன்.

முதியவர் சொல்லிக்கொண்டிருந்தது, வாழ்வின் எத்தனையோ பரிணாமங்களில் ஒன்றாயிருந்தது. மனித வாழ்வின் எல்லாம் கடமைகளையும் நிறைவேற்றிய பின், குற்ற மனப்பான்மை இல்லாமல், ஆற்றாமை இல்லாமல், பகை இல்லாமல், குறை இல்லாமல், சுய பச்சாதாபம் இல்லாமல், எழுபத்திரண்டு வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்த இரண்டு மனித ஜீவிகளின் ஆத்ம கதை.


இந்த நுற்றாண்டின் தொடக்கக் காலம் . தமிழ்நாட்டின் திண்டுக்கலில் சாதுவும், எழையும், விதவையுமான ஒரு பிராமணப் பெண் இருந்தாள். அப்பளம் இட்டு விற்பது அவளுடைய தொழில். அதில்வரும் வருமானம் கொண்டு தன் ஒரே மகனான ரங்கசாமியைப் பள்ளிக்கூடத்திற்க்கு அனுப்பிப் படிக்கவைத்தாள். ஏழாம் வகுப்பு பாஸானபோது ரங்கசமிக்குத் தபால் துறையில் வேலை கிடைத்தது. அப்பளம் இடுவதில் ரங்கசாமியின் தாயாருக்கு உதவ, அனாதையும், துரத்துச் சொந்தமுமான ஒரு பெண் வந்து சேர்ந்தாள், அவள் பெயர் கனகாம்பாள், சர்க்கார் உத்யோகத்திலிருக்கும் ரங்கசமிக்குப் பல இடங்களில் இருந்தும் திருமண யோசனைகள் வந்து கொண்டிருந்தன. நிறைய சீதனமும், ஆடம்பரமான திருமணமும் செய்வதை உறுதி அளிக்கப்பட்டது. அனால் அம்மா ரங்கசாமியிடம் தீர்மானமாய் இப்படி சொல்லியிருந்தாள்.


"ரங்கா, நாம் எழைகள். எளிமையான பந்தம்தான் நமக்கு நல்லது. இந்த கனகம்பாளுக்கு யாருமில்லை. இவளுக்கு நீ தான் துணை"

கல்யாணம் நடக்கும்போது ரங்கசாமிக்கு வயது பத்தொன்பது. கனகம்பாளுக்குப் பதிமுன்று. தபால் ஆபிஸ் காரனான ரங்கசாமியும் அப்பளம் இடும் கனகம்பாளும் அப்படி தங்கள் ஜீவிதத்தை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இரண்டு பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்து போக இரண்டு ஆணும் இரண்டு பெண்ணும் இப்போதும் இருக்கிறார்கள்.

பாங்க் மேனேஜராயிருந்த ஒரு மகன் ரிடையர்மெண்டாகி, பென்ஷனும், பிள்ளைகளுமாக சென்னையிலிருக்கிறான். இன்னொரு மகன் பம்பாயில் சார்ட்டர்டு அக்கௌண்ட்டண்டாக இருக்கிறான்.பெண் பிள்ளைகள் இரண்டு பெரும் ஹைதராபாத்திலும். கோயம்புத்துரிலும் நன்றாக இருக்கிறார்கள். ரங்கசாமியின் நாலு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகள் எடுத்து, நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

பிள்ளைகளிடம் போய், அவர்களுக்குப் பாரமாய் வாழ ரங்கசாமியும், கனகம்பாளும் தயாராக இல்லை, எல்லா மாதமும் மிகச்சரியாகச் சிதம்பரம் போஸ்டாபீஷில் ரங்கசாமியின் பென்ஷன் வந்துவிடும். கோவிலில் வாழும் எளிய வாழ்க்கைக்கு அது தாராளம். அவசியமேற்பட்டால், தந்தி அடித்தால் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பறந்து வந்துவிடுவார்கள். ஆனாலும் யாரையும் தொந்தரவு செய்யாமல் நடராஜ மூர்த்தி ஆனந்தத்
தாண்டவமாடும் புண்ணிய பூமியில் தேகம் சாய வேண்டும் என்பதுதான் மோகம். எல்லாம் நடராஜனின் அனுக்ரகம்.

இந்த ஆத்ம கதையின் எதோ ஒரு பகுதியில், என் கண்கள் நிறைந்து வழியத் தொடங்கியிருப்பதை நான் உணரவில்லை.கண்ணீர் திரையிட்டு,கல் தூண்களும்,சிற்பங்களும், நடராஜ விக்கிரகமும், சிதம்பர கோபுரமும் மறைந்துபோயின, கண்ணீர் பெருகிப் பெருகி பிரவகமாயின.

புன்னியதலங்களும், தெய்வங்களும், மனிதர்களும் பிரவாகத்தில் முழுகிக் கானாமல்போனர்கள், வேதங்களும் இதிகாசங்களும் , புராணங்களும், ஆதியும் அந்தமும் இல்லாத பிரளயத்தில் முழுகிப் போனது.

நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன், பிரியத்தில் பின்னிப் பிணைந்து, குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில், யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்?

ரங்கசாமியா?

கனகாம்பாளா?



நன்றி-பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரின் "சிதம்பர நினைவுகள் " தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட நூல் மொழி பெயர்த்தவர் திருமதி-கே.வி.ஷைலஜா




Balachandran Chullikkadu (Malayalam: ബാലചന്ദ്രന്‍ ചുള്ളിക്കാട്) (born 30 July 1957) is a renowned Malayalam poet from Kerala, India.

Early life
He was born in Paravur, Ernakulam, Kerala. He completed his graduation in English literature from Maharajas College, Ernakulam.

Writing career

His collection of poems published are "Pathinettu kavithakal", "Amaavaasi", "Ghazal", "Maanasaantharam", "Dracula" etc. A collection of his complete poems, Balachandran Chullikkadinte Kavithakal (The Poems of Balachandran Chullikkad) (2000) was published by DC Books, Kottayam, Kerala, India. They have also published the book of his memmoirs, Chidambarasmarana (2001). He married the Malayalam poetess Vijayalaksmi. He participated in many national literary seminars organised by Central Academy of Letters, India. He was one among the ten members of a cultural delegation of India to Sweden in 1997 invited by Nobel academy and Swedish writers union. He represented Indian poetry in the international bookfair in Gotenborg, Sweden in November 1997.In 2000 he took Buddhism as hi own religion.[1] He is also an actor in Malayalam films and serials.[2]