Saturday, December 24, 2011

"தமிழ் சினிமா 2011"

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு கதை கவிதைகள தாண்டி என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற சில விசயங்கள பகிர்ந்துக்கலாம்னு நெனைக்கிறேன்.கடந்த வருடம் சென்னையில இருந்ததால முதல் முறையா சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சுது.அதுல பாடல்கள் இல்லாம சண்டைகள் இல்லாம பல்வேறு நாட்டோட பல மொழிகள்ல வந்திருந்த படங்கள சப் டைட்டில தாண்டி பல உணர்வுகள உள்வாங்கி பார்த்தது ஒரு புதிய அனுபவமா இருந்தது. அதை வார்த்தைகளால விவரிக்கிறது கடினம் சென்னையில வருடத்திற்கு ஒரு முறை வர்ற இந்த விழாவ தமிழகத்தில சினிமா ஆர்வலர்களா தங்கள நெனைக்கிற எல்லாருமே கண்டிப்பா கலந்துகிட்டு பார்க்கணும். நாலு ஸ்டார் படங்கள முதல் நாள் பார்த்தா ஆகுற செலவு தான் இங்க ஒன்பது நாட்கள் மொத்த படங்களையும் பார்க்குறதுக்கு ஆகுது. சில இந்திய மொழிப் படங்கள் திரையிடப்படும் போது அதில பணியாற்றின கலைஞர்கள்கிட்ட உரையாடி பல விஷ்யங்கள தெரிஞ்சிக்கிற வாய்ப்பும் கிடைக்குது.


ஆனா இந்த வருஷம் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்து வைக்கல, நா திருநெல்வேலியிலேயே என் வேலைய தொட்ரறதுனாலயும்,சென்னையில இருக்கிற பல நண்பர்களோடையே தொலைபேசி புண்ணியத்தல தான் உறவே தொடருதுங்கிறதாலயும். இந்த வருஷம் தமிழ் சினிமால எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் என்ன பாதிச்ச சில படங்கள் நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், எல்லாரையும் பத்தி கொஞ்சம் சுருக்கமா திரும்பி பார்க்கிற மாதிரி சில விசயங்கல பகிர்ந்துக்குறேன் படிச்சு உங்க கருத்துக்கள பகிர்ந்துக்கனுமுனு கட்டாயமா கேட்டுக்குறேன்.


சினிமா:-2011





நடிகர்கள்:-1

நிழல் கதநாயகர்களே நிஜ கதாநாயகர்களாக இன்னும் திரையில் தோன்றி கொண்டிருக்க முடியாது. மாஸ் ரசிகர்கள் குறைந்து கிளாஸ் ரசிகர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்கிற இன்றைய தமிழ் சூழலை தமிழ் சினிமா கதாநாயகர்கள் உணர தொடங்கிய வருடம் 2011 . உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமலின் படங்கள் இந்த வருடம் இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் மற்ற எல்லா முன்னணி நாயகர்களின் படங்கள் வெளிவந்து அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டன.அவர்களோடு போட்டிபோட நாளுக்குநாள் திறமையான புதுமுகங்களும் அறிமுகமாக தொடங்கியுள்ளத்தால் முன்னணி நாயகர்கள் கூட வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை தேடி நடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.



இது தமிழ் சினிமாவின் நல்ல மாற்றத்தின் தொடக்கம்.இந்த வருட சிறந்த நடிகர்களாக திரையில் வாழ்ந்தவர்களில் மனதில் நின்றவர்களில் சிலரை பத்தி இப்ப பார்க்கலாம்.முதலில் தனுஷ் இவருக்கு இந்த வருடம் அவரது திரைப்பட வாழக்கையில் முக்கியமான வருடம் மொத்தம் ஐந்து படங்கள் வெளிவந்தன அனைத்தும் அவரின் முத்திரை பதித்த படங்களாக வந்தன.முதல் படமான ஆடுகளமே அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று தனி இடம் பெற செய்தது.அடுத்து சேரன் இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த திரை பிரபலம் சென்ட்மென்ட் கதைகளை தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் மிஷ்கினின் யுத்தம் செய்,அவரது உதவியாளர் ராஜேஷ் மாதவ் இயக்கிய முரண் என்ற இரண்டு வித்தியாசமான படங்களில் கதை நாயகனாக தோன்றி மக்கள் மனதில் அழுத்தமான இடம் பிடித்த ஆண்டு இது.


அடுத்து விமல் பசங்க மூலம் அறிமுகமாகி இந்த வருடம் தூங்கா நகரம்,எத்தன்,வாகை சூட வா என்ற மூன்று படங்களின் இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் பட்டியலில் தன் இடத்தை தக்க வைத்து கொண்டார்.இந்த வருடம் பல திரைப்பட வாரிசுகள் மட்டுமல்லா மால் பல்வேறு புதிய நாயகர்கள் தமிழ் சினமாவில் அறிமுகமானாலும் நாய்கர்களுக்கான இலக்கணத்தை உடைத்து கதை தான் ரியல் ஹீரோ என உணர்த்திய அப்புக்குட்டி அழகர் சாமியின் குதிரை படம் மூலம் திறமைகளை மட்டுமே நம்பி இருக்கும் பல புதிய நடிகர்களுக்கான வாசலை திறந்துவிட்டார்.


அடுத்து தென்னிந்திய சினிமாவின் ஆல் டைம் பேவரைட்டான சூர்யா ஏழாம் அறிவில் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றி கலக்கினார். அடுத்து பாலாவின் அவன் இவன் மூலம் உலகிலேயே முதல்முறையாக மாறு கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.ஏற்கனவே வித்தியாசமான் கதாபாத்திரங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ள விக்ரமிற்கு தெய்வ திருமகள் படம் மேலும் ஒரு மணிமகுடம்.ஹீரோ என்றால் நேர்மறையான கதாபாத்திரங்கள் தான் அவர் நல்லது செய்ய வேண்டும் அநீதியை கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற லாஜிக்கை உடைத்தெறிந்து வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடித்து மங்கர்த்தா படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார். எந்த நடிகர் வந்தாலும் ரசிகர் மன்றம் தொடங்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டிய ஒரு சில நடிகர்களில் இவர்கள் இந்த வருடத்தின் முக்கியமானவர்கள்.


நடிகர்கள்:-2

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் பெர்பாமன்ஸ் மட்டும்மல்லாமல் வியாபார ரீதியாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறியிருக்கும் ஒரு சிலரை பற்றி இங்கே விரிவாய் பார்க்கலாம்.ஹீரோவிர்க்கான எந்த வித முக லட்சணங்களும் இல்லாதவர் என தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்ட இவர்.தற்பொழுது முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளார். இந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்களில் மூன்று பெரியளவில் பேசப்படவில்லை என்றாலும் ஆடுகளம் மயக்கம் என்ன என்ற இரு வெவேறு பரிமாணங்கள் நடிகர் தனுஷை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடமும் இந்திய அளவில் மிக பெரிய பெயரும் புகழும் பெற செய்திருக்கிறது.அடுத்து எந்த வித குடும்ப பின்னணியும் இல்லாமல் முறையான பயிற்சியோடு பல வருட போரட்டத்திற்கு பிறகு பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இந்த வருடம் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் நல்ல நடிகர் இயக்குனருக்கான நடிகர் என்கிற பெயரை வாங்கி தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் நடிகர் விமல்.அடுத்து விக்ரம், இயக்குனர் பாலா மூலம் மறுபிறவி கிடைத்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிப்போன விக்ரம் தன்னை மீண்டும் நிருபித்திருக்கும் வருடம் 2011. பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தெய்வ திருமகள் படம் மூலம் உடல் மொழியால் அதிகமாய் பேசி இந்த வருடத்தின் தேசிய விருது பட்டியலில் இவரும் இருப்பார் என ரசிகர்களை பேச வைத்து இருக்கிறார்.


கமெர்சியல் தான் தன் அடையாளம் என்பதை மாற்றி பரிச்சார்த்த முயற்சிகளுக்கு நான் தயார் என்று உடல் வருத்தி உலக நடிகர்கள் வரலாற்றில் முதல் முறையாக மாறுகண் உள்ள நபராகவும் பெண் தன்மை உள்ள ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்து.இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தன அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.அடுத்து அஜித் மாஸ் ஹீரோ பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இவருக்கு ரசிகர்கள் அதிகம் இந்த வருடம் வெளிவந்திருக்கும் மங்காத்தா திரைப்படத்தில் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்து நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.


இந்த நடிகர்களின் புதிய அவதாரங்களை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல சக திரைப்பட நடிகர்களும் அசந்து போய் அடுத்த வருடத்தில் இவர்கள் நடிப்பில் வெளிவரயிருக்கும் படங்களை மிக ஆர்வமாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பது நிதர்சனம்.

நடிகைகள்:-

தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்திருப்பது கதாநாயகர்கள்தான். நடிகைகளை பொறுத்தவரையில் குறுகிய காலம் தான் அதிலும் அவர்கள் நடிப்பதற்க்கான வாய்ப்புள்ள படங்கள் அமைவது என்பது மிக அரிதான நிகழ்வாக கடந்த சில காலங்களில் இருந்தது.டைட்டிலில் பெயர் போட்டதற்காக இரண்டு காதல் காட்சிகள் நான்கு டூயட் பாடல்கள் என்று மட்டுமே நடிகைகளை பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாவில் தற்பொழுது மீண்டும் நடிகைகளை மைய்யப்படுத்திய கதைகளையும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களும் வர தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் இந்த் 2011ஆம் வருடத்தில் மிக அதிகமான புதுமுக கதாநாயகிகள் அறிமுகமும் கடந்த வருடம் புதுமுகங்களாக இருந்த கதாநாயகிகளின் அடுத்தடுத்த படங்களும் திரைக்கு வந்தன.அவற்றில் திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் திரும்ப திரும்ப நினைத்து பார்க்கும் அளவுக்கு நடிப்பால் கதாபாத்திரத்தால் பேசப்பட்ட சில நடிகைகளை நினைவுபடுத்தலாம்னு நெனைக்கிறோம்.முதலில் கல்கி தமிழ் சினமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் என்ற பெயரை மட்டுமல்லாது நல்ல நடிகை என்கிற பெயரையும் தக்கவைத்து அவரது வாழ்வியல் சூழலை ஒட்டி நடக்கும் கதாபாத்திரம் என்பதை உணர்ந்து நடித்து தான் சார்ந்துள்ள திருநங்கை சமுதாயத்தின் அடையாளமாக மாறினார்.

அடுத்து நடிகை அனுஷ்கா கவர்ச்சியான ரோல்களில் மட்டுமே தமிழில் தலை காட்டி வந்த இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெற்றிகரமாக ஓடிய அருந்ததி படத்தின் மூலம் நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்று, ஏற்றுகொண்ட முக்கியமான நேரடி தமிழ் திரைப்படம் தெய்வதிருமகள். இதில் ஒரு கனமான கதாபாத்திரத்தை மிக அழகாகவும் இயல்பாகவும் செய்து அனைவரையும் கவர்ந்தார். அடுத்து அஞ்சலி அறிமுகமான கற்றது தமிழ் என்ற முதல் திரைப்படத்திலிருந்தே சிறிய வயதிலேயே ஆழமான பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியிருந்த அஞ்சலி இந்த ஆண்டு நடித்த அனைத்து படங்களுமே அவரை பற்றி அதிகமாக பேசவைத்த படங்கள். அதில் குறிப்பாக அவரது வயதுக்கு முதிர்ந்த தோற்றத்தில் நடித்திருந்த கருங்காலி மற்றும் மிக இயல்பான காதலியின் பிரதிபலிப்பை காட்டியிருந்த எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் நல்ல நடிகை என எல்லாராலும் பாராட்டப்பட்டு அவரது நடிப்பிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அடுத்து இனியா இந்த வருடம் அறிமுகம். தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோயின்களின் தாய்மாநிலமான கேரளத்து வரவானாலும் தமிழக முகசாயலில் எல்லோராலும் கவரப்பட்ட நடிகையாக கிராமத்து நடிப்பில் முத்திரை பதித்த வாகை சூட வா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சி பயணத்தை தொடங்கியுள்ளார்.



இந்த வருடம் முழுக்க ஆடி பாடி ஓய்ந்த அத்தனை நடிகைகளையும் தன் நடிப்பாலும் வசீகரமான முகத்தாலும் வருட கடைசியில் வெளிவந்த ஒஸ்தி, மயக்கம் என்ன என்ற இரண்டு படங்களின் மூலம் கிராமம் நகரம் என இரு வேறு கதாபாத்திரங்களில் அசத்தி 2012 ஆம் வருடத்தின் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகியாய் இடம் பெறப்போவது நிச்சயம் என்பதை உணர்த்தியிருக்கிறார் ரிச்சா கங்கபாத்தியாய் . இந்த முறை தமிழ் சினிமா கனவுக்கன்னிகளை மட்டுமல்ல தரமான நடிகைகளையும் தந்திருப்பது இந்த வருடத்தின் சிறப்பு.


நகைச்சுவை நடிகர்கள் :-

திரைப்படங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவை என்கிற விஷயம் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது அதிலும் கதையோடு இணைந்த கருத்துக்கு முக்கியத்துவம் நகைச்சுவைக்கு மக்களிடம் என்றுமே குறையாத வரவேற்பு உண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் இருவர் முன்னணியில் இருப்பார்கள்.அன்றைய கலைவானர் என்.எஸ்.கே.மதுரம் தம்பதியினரில் தொடங்கி நேற்றைய வடிவேலு விவேக் வரைக்கான ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்கு எல்லா திரைப்படங்களிலும் ஆட்சி செய்வார்கள்.



அந்த வரிசையில் அடுத்தகட்டம் இது இந்த வருடம் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக்கின் படங்கள் அதிகமாக வெளிவரவில்லை வந்த ஒரு சில படங்களும் ஒரே மாதிரியானதாகவும், நாடகத்தனமானதாகவும் இருந்ததால் மக்களிடம் பெரிதும் எடுபடவில்லை.அவர்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்த வருடம் மற்ற நகைச்சுவை நடிகர்கள் கைப்பற்றி அவர்களுக்குரியாதாக மாற்றியிருக்கிறார்கள்.அந்த வரிசையில் முதலில் அதிகமான தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் எல்லா வீட்டினருக்கும் செல்லபிள்ளையாக மாறிப்போன சந்தானம்.தொடக்கத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக பேசும் நடிகராக பார்க்கப்பட்ட இவர் இன்று தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பதற்கு காரணம் இவரின் இயல்பான நடிப்பும் எளிமையான அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசனங்களும் மிக முக்கிய காரணம் குறிப்பாக சிறுத்தை,வானம் தெய்வதிருமகள் ஆகிய படங்களில் இவர் செய்த பங்களிப்பு இவரை நகைச்சுவை நடிகராக மட்டும் ஒதுக்கி விடாமல் படம் முழுவதும் வரும் செகன்ட் ஹீரோ அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.


அடுத்து வெண்ணிலா கபடி குழு ஐம்பது பரோட்டா சூரி என்று சொல்லும் அளவிற்கு ஒரே படத்தில் நகைச்சுவையின் உச்சம் தொட்ட இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை,போராளி போன்ற திரைப்படங்கள் இவருக்கான தனி அந்தஸ்தை 2011 -ல் பெற்று தந்துள்ளது. ஏற்கனவே நகைச்சுவையில் தனி பாணியில் கலக்கி கொண்டிருந்த கஞ்சா கருப்புக்கு இந்த ஆண்டு நகைச்சுவை நடிப்பில் ஒரு ஏற்றத்தை ஏற்படுத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.மொத்தத்தில் நகைச்சுவை என்கிற தனி டிராக்களாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் ஆரோக்கியமான நகைச்சுவை மாற்றத்தை தமிழ் சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறது இந்த 2011 ஆண்டு.


பாடலாசிரியர்கள்:-

கவிதைகள் இலக்கியமாக ஒதுங்கியிருந்த இரண்டு நூற்றாண்டுக்கு முன் இருந்த காலம் மாறி கடந்த நூற்றாண்டில் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி இன்று புதிதாய் பரிணமித்திருக்கிற எல்லா கவிஞர்கள் வரை அவை பாடல்களாக, இசை கோர்வைகளாக, குறுவட்டுகளாக இணையத்தில் என பல்வேறு பரிமாணங்களில் உலவி கொண்டிருந்தாலும் அவை திரைப்பட பாடல் என்ற பலகைக்குள் வரும் பொழுது அவை தனி அடையாளமாகி பட்டொளி வீச தொடங்கி விடுகிறது.அதிலும் தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் படங்கள் வருவது இல்லை என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடல்களில் புரியாத வார்த்தைகள் ஒரு பக்கம் தெறித்து கொண்டிருந்தாலும் அர்த்தமுள்ள வித்தியாசமான பாடல் வரிகளால் மக்கள் மனதில் சந்தோஷ முடிச்சு போட்டிருக்கிறது 2011 -ஆண்டின் தமிழ் சினிமா பாடலாசிரியர்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் இது.


முதலில் கவிஞர் தாமரை பாடல் எழுத தொடங்கிய முதல் படம் முதல் வேற்று மொழி கலக்காமல் ஆபாசமான வரிகள் இல்லாமல் தான் பாடல் எழுதுவேன் என்கிற உறுதி குறையாமல் பாடல்களை எழுதி வரும் இவர் இந்த வருடம் எங்கேயும் காதல் திரைப்படத்தின் எங்கேயும் காதல் பாடல் தொடங்கி எழுதிய சில பாடல்களையும் வருடம் முழுக்க உச்சரிக்கும் பாடல்களாக மாற்றியுள்ளார்.அடுத்து வாலிபம் குறையாத வாலி மூண்றாம் தலைமுறையினரும் கொண்டாடும் இவரது பாடல்களில் இந்த வருடம் புதுப் புனல், கலசலா ,மச்சி ஓபன் தி பாட்டில் ,நங்கை போன்ற இளைஞர் களின் வாயில் எப்போதும் முனுமுனுக்க செய்யும் படல்களை தந்திருக்கிறார்.


அடுத்து நா.முத்துகுமார்.இவரது திரைப்படப்பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெரும் நபர்கள் அதிகரித்து வந்தாலும் இவர் அலட்டிக்கொள்ளாமல் கடந்த வருடங்களின் தொடர்ச்சியாக இந்த வருடத்திலும் அதிக பாடல்களை மட்டுமல்லாமல் அழகான ஹிட் பாடல்களையும் தந்து தவிர்க்க முடியாத பாடலாசிரியராக மீண்டும் இடம்பிடித்தார். அடுத்து வைரமுத்து இந்த வருடம் தன் மகனோடு களம் இறங்கியுள்ளார். இருவரும் போட்டி போட்டு கொண்டு ஹிட் படல்களை கொடுத்த வருடம் குறிப்பாக வாகை சூடவா வில் சரசர சார காற்று தொடங்கி பல தனி அடையாள பாடல்களை தந்திருக்கிறார்.


அதேபோல் அவரது மகன் மதன் கார்க்கியும் நுட்பமான வரிகளால் அறிவியல் ரீதியான பல்வேறு வார்த்தைகளை தமிழ் பாடலகளில் உலவவிட்டு பாடல்களை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார் குறிப்பாக ஏழாம் அறிவு படத்தில் இவர் எழுதிய சீன பாடலை சொல்லலாம்,கோ திரைப்படத்தில் இவரின் என்னமோ ஏதோ இந்த வருடத்தில் அதிகமாக இணையத்தில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் இவரை மூத்த இளம் இசையமைப்பாளர்கள் வரை அனைவராலும் தேடபடுப்பவர்களில் ஒருவராகவும் மாற்றியிருக்கிறது.



அடுத்து இந்த வருடம் புதிய பாடலாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் நடிகர் தனுஷ் இளைஞர்களின் நாடித்துடிப்பை இவர் சரியாக புரிந்து கொண்டு இவர் சாதரணமான வார்த்தைகளால் பேச்சு வழக்கை பாடல்களாக மாற்றி எழுதிய பாடல்கள் இந்த வருடத்தின் மோஸ்ட் வாண்டட் சாங்க்ஸ் என்றால் அது மிகையாகாது.இந்த வருடம் படங்களில் கதைக்கு இடைஞ்சல் இல்லாமல் அதே வேளையில் அவசியமான இடங்களில் பாடல்களை இடம்பெற செய்து நல்ல பாடல்களுக்கான முக்கியத்துவத்தையும் நல்ல பாடலாசிரியர்களுக்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது தமிழ்சினிமாவின் 2011 ஸ்பெஷல்.


இசையமைப்பாளர்கள்:-1

இசையும் இயலும் நாடகமும் ஒருங்கிணைந்து ஒளிப்படமாகிய வரலாறு தான் சினிமா.காட்சிகளில் வசனங்கள் பூர்த்தி செய்யாத பல இடங்களை இசையால் முழுமை பெற செய்யும் வலிமை இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே உண்டு. உலக சினிமாவில் பின்னணி இசை மட்டுமே ஆட்சி செய்கிறது இந்திய சினிமாவில் பின்னணியும் பாடல்களும் தான் படத்தின் ஊக்கமாக இருக்கின்றன. படம் வெளிவருவதற்கு முன்னேரே இசை வெளியிட்டிற்கு பெரிய வரவேற்ப்பை கொடுப்பது இந்திய சினிமாவில் தமிழ் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது.


எம்.எஸ்.வி. இளையராஜா ஆண்ட தமிழ் சினிமா இசையை இந்த வருடம் பத்துக்கும் மேற்பட்ட புது இசையைமைப்பளர்கள் பழைய இசையமைப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டு 2011 ஆம் ஆண்டை ஒரு மியுசிக்கல் ஆண்டாக மாற்றியுள்ளனர்.இந்த வருடத்தின் புதிய வரவுகளான எங்கேயும் எப்போதும் -சத்யா,யுத்தம் செய் -கே.,வாகை சூடவா ஜிப்ரான்,கண்டேன் -விஜய் எபினேசர்,முரண்- சாஜன் மாதவ், ரவுத்திரம்- பிரகாஷ் நிக்கி,ஆகியோர்களால் இசை இன்னும் இளமையானதொடு மட்டுமல்லாமல் அந்த படங்களுக்கு பாடல்களால் தனி பெயரையும் வாங்கி தந்தது. அடுத்து இளையாராஜா இலக்கிய படைப்புகளான பொன்னர் சங்கர்,மற்றும் அழகர் சாமியின் குதிரை படங்களுக்கு த்ன் இசையால் உயிரும் மதிப்பும் குடுத்து தனி இடத்தில் நிற்கிறார்.


அடுத்து அவரது மகன் யுவன் சங்கர் ராஜா அப்பாவின் பெயரை இந்த வருடமும் அவர மெய்பிக்கும் வகையில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் மூலம் இந்த வருட இசை பயணத்தின் உற்சாக பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரியான மெட்டுகளையே இவர் எல்லா படங்களிலும் தருகிறார் என்கிற விமர்சனமிருந்தாலும் ரசிக்கும் படியான பால்களை தருவது இவரின் தனிச்சிறப்பு.அடுத்து ஜி.வி.பிரகாஷ் எ.ஆர்.ரகுமானின் மருமகன் என்கிற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல் அவரின் புகழுக்கு மேலும் புகழ சேர்க்கும் வகையில் இவர் இந்த் வருடத்தில் இசைஅமைத்த ஒவ்வொரு பாடல்களும் மெகா ஹிட்.


அடுத்து வித்யாசாகர் பெயரளவில் சில படங்களை இவர் இந்த வருடத்தில் செய்திருந்தாலும் அந்த படத்தின் பாடல்கள் கால ஓட்டத்தில் கரைந்து சென்று விட்டன என்றே சொல்லவேண்டும். அடுத்து காதலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். ரகுமானிடம் வேலை செய்துவிட்டு திரும்பி இந்த் வருடம் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்த வெப்பம் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் பேசப்பட்டவனாக இருந்தன.அடுத்து பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கில் கவனிக்க தக்க பாடல்களை கொடுத்து மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் தமன் . இன்று கடைசியாக விஜய் ஆண்டனி ஒரு பக்கம் நடிப்பை தொடர்ந்து இசையையும் கைவிடாமல் இவர் இந்த் வருடம் இசையமைத்த படங்கள் அனைத்தும் லோக்கல் குத்து மொத்தத்தில் இந்த வருட இசை ஜொலித்தது.


இசையமைப்பாளர்கள்:-2


இந்த வருடம் இசை மழை பொழிந்தாலும் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்த பாடல்களை தந்த இசையமைப்பளர்களை பற்றி கொஞ்சம் விரிவா பார்க்கலாமா? முதலில ஜிப்ரான் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வாகை சூட வா படத்தின் மூலம் தன் முதல் பட இசை வாய்ப்பை பெற்ற இவர் தன் பொறுப்பை உணர்ந்து சமகால வரலாற்று இசையை மிக அருமையாக தந்திருக்கிறார். அத்துணை பாடல்களும் ரசிக்கும் படியாக இருந்தது சிறப்பு,அடுத்து கண்டேன் படத்தின் அறிமுக இசையமைப்பாளர் விஜய் எபினேசர் படத்தின் காதல் பாடல்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் வெவ்வேறு விதமாக தந்து தனி இடம் பிடித்தார்.


அடுத்து எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சத்யா முதல் படம் என்பதை எந்த இடத்திலும் உணராத வகையில் பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் நம்மை படத்தோடு ஒன்ற வைத்து அந்த படம் மாபெரும் வெற்றியைடைய உறுதுணையாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று இருக்கும் மிக சிறிய வயது இசையமைப்பாளர்களில் குறிப்பிடும் படியான ஒருவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாடல் மற்றும் பின்னணி இசை அனுபவத்தின் மூலம் அந்த படத்தை தூக்கி பிடித்து செல்பவர் மற்றும் அந்த படத்தின் இன்னொரு ஹிரோ என்றே சொல்லவேண்டும்.இந்த வருடம் தெய்வ திருமகள் படத்தில் அவரது பாடல்களும் தீம் மியூசிக்கும் பெரும்பாலான தமிழ் ரசிகர்களில் ரிங்டோனாக இன்றளவும் நிலைத்திருப்பது அவர் இசையின் சிறப்பின் ஒரு சிறிய உதாரணம்.மேலும் ஆடுகளம்,மயக்கம் என்ன என அவர இசையமைத்த அத்துணை படங்களும் மாபெரும் மியுசிக்கல் ஹிட். அதற்கு வருடத்தில் அவரை பெரிய இயக்குனர்களோடு பணி செய்ய செய்துள்ளது.


அடுத்து யுவன் சங்கர் ராஜா இந்த வருடம் ஒன்றிரண்டு படங்கள் செய்திருந்தாலும் பேசப்பட்ட படம் என்றால் அது மங்காத்தா படத்தின் பாடல்கள் மட்டுமே.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இவரின் இசை ஆல்பங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது புரியாத வரிகளாக இருந்தாலும் திரும்ப திரும்ப பாட வைக்கும் இவரின் இசை அனுபவம் இந்த் வருடத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டிப்படைத்தது.என்றே சொல்ல வேண்டும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் இசை இன்றியமையாத ஒரு இடத்தை பிடித்து அடுத்த வருடத்தில் இன்னும் பல உயரத்தை தொட ஆயத்தமாக உள்ளது.


திரைப்படங்கள் 2011:-1


உலக அளவில் ஆண்டு தோறும் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படும் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த எண்ணிக்கையில் திரைப்படங்கள் வராத போதும் எதிர்பாராத படைபாக்கங்களால் தமிழ் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று .உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனதில் அதிகமாய் இடம் பிடித்த இந்த ஆண்டின் பத்து திரைப்படங்கள் பற்றி ஒரு அலசு அலசுவோமா....


முதலில் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து ஆறு தேசிய விருதுகளையும் அள்ளி சென்ற ஆடுகளம்.அடுத்து வழக்கமாக மென்மையான குடும்ப படங்களை தந்து வந்த இயக்குனர் ராதாமோகன் இந்த ஆண்டு பயணம் திரைப்படத்தின் மூலம் தனது விறுவிறுப்பான திரைப்பயனத்தை தொடங்கியிருக்கிறார் விமான கடத்தல் தான் படத்தின் கரு என்றாலும் தற்கால அரசியல் மற்றும் சமுக சூழலை மனதில் கொண்டு தனக்கே உரிய பாணியில் உணர்வுரீதியான ஒரு படைப்பை தந்திருக்கிறார். அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவமாக ஐந்து கதைகள் ஒரே இடத்தில் இணையும் திரைக்கதை பாணியில் இரண்டாண்டுக்கு முன் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற வேதம் படம் அதே இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் தமிழில் வானம்.



அடுத்து படம் வெளிவருவதற்கு முன்னரே உலக பட விழாக்களில் பங்கேற்று பரிசு பெற்ற திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்து திரையில் சில நாட்களும் விமர்சகர்கள் மத்தியில் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக பேசப்பட்டு வரும் இந்த படம் ஹிந்தியின் பிரபல நடிகர் ஜாக்கி சாரபின் முதல் தமிழ் படம் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லமால் முதல் படத்திலேயே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாகராஜன் குமாரரஜாவின் ஆரண்யகாண்டம். இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்க்கும் இருக்க வேண்டிய உறவை சமீபகாலமாக அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கும் இயக்குனர்களின் வரிசையில் ஒரு அழகான கிராமியம் சார்ந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அதன் வீரியம் குறையாமல் எந்த வித வியாபார சமரசங்களும் இல்லாமல் சிறந்த படைப்பாக அமைத்திருந்த சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை.


அடுத்து நர்த்தகி தமிழ் சினமாவில் அரிதாக பரிமளிக்கும் பெண் இயக்குனர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துகொண்ட இயக்குனர் விஜய பத்மா இந்த படத்தின் மூலம் எவரும் கையாள தயங்கும் ஒரு திருநங்கையின் கதையை முழுமையாக ஒரு திருநங்கையை வைத்தே தந்திருக்கிறார்.அடுத்து ஆங்கில திரைப்படத்தின் தழுவலாக பேசபட்டாலும் அது படமாக்கப்பட்ட அழகியலால் எல்லோரையும் கவர்ந்த விக்ரமின் தெய்வ திருமகள்,புதிய இயக்குனரானாலும் சரியான முறையில் கதை சொன்னால் குத்துப்பட்டு நாலு பைட்டு இல்லாமல் வெள்ளிவிழா கொண்டாட முடியும் என்று நிருபித்த முதல் முறையாக பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் பட நிறுவனம் தமிழில் தயாரித்து வெளியிட்ட எங்கேயும் எப்போதும்.


அடுத்து களவாணி மூலம் கடந்த வருடம் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சற்குணம் குழந்தை தொழிலாளர் பிரச்ச்னையை அடிப்படையாய் வைத்து இரண்டாவது படத்திலேயே 1960 களை நம் கண் முன் நிறுத்திய சமகால வரலாற்று படமாய் வடித்திருந்த வாகை சூட வா. செல்வராகவனின் வழக்கமான கூட்டணியோடு வித்தியாசமான கதை சூழலில் வெளிவந்து மனதை மயக்கிய மயக்கம் என்ன இது தான் இந்த 2011 ஆம் வருடத்தின் வணிகரீதியில் அல்லாமல் படைபாக்கத்தால் பேசப்பட்ட தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பத்து திரைப்படங்கள். ..


திரைப்படங்கள் 2011:-2




இந்த வருசத்தில் வெளிவந்து மறக்கமுடியாததா மாறின ஐந்து படங்கள் பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாம் .முதல்ல வர்றது ஆடுகளம் வெற்றிமாறன் துனுஷ் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையின் பின்னணியில் நம் மண்ணின் மனிதர்களிடம் புதைந்திருக்கும் பல்வேறு குணாதிசியங்களை இயல்பாய் பதிவு செய்து நம் கண் முன் உலவவிட்டுருக்கிறார் வெற்றிமாறன்.எல்லா கதாபாத்திரங்களும் மிகைப்படுத்துதலும் இல்லாமல் நேர்த்தியாய் செய்திருந்த்ததால் ஆறு தேசிய விருதுகளை அள்ளி தமிழ் சினிமா வரலாற்றில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படமாக அமைந்தது.


அடுத்து பொதுவா ஒரு நாவலையோ சிறுகதையையோ திரைபடமாக்குறதுங்கிறது இயக்குனருக்கு சவாலான வேலை.அந்த கதையின் இயல்பும் கெடாமல் அதேசமயம் திரை மொழியும் கச்சிதமாக படைக்கப்படுவது அரிதான ஒரு நிகழ்வு. அதை சாத்தியமாகி இலக்கியத்திற்க்கும் சினிமாவிற்குமான உறவுப்பாலத்தை அகலப்படுத்திய ஒரு படமாக அமைந்தது அழகர்சாமியின் குதிரை.அடுத்து தெய்வ திருமகள் ஐயம் சாம் என்கிற ஆங்கில திரைப்படத்தோட அப்பட்டமான காப்பின்னு சொல்லபட்டாலும் விக்ரமின் நேர்த்தியான நடிப்பாலும் நிரவ்ஷாவின் அழகான ஒளிப்பதிவாலும் கிறங்க வைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை மழையாலும் ஏ.எல்.விஜய்-ன்.சுவாரசியமான திரையாக்கத்தாலும் கவித்துவமான பதிவா வெளிவந்து வெற்றியும் பெற்றது இந்த படம்.


கதைய மட்டுமே நம்பி அத திறமையா சொல்ல முடிஞ்சா முன்னணி நடிகர்கள் யாரும் இல்லைனாலும் அசகாய வெற்றி பெறமுடியும்ங்கிற நம்பிக்கையோட புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் அழகான காதலோடும் ஆழமான கருத்தோடும் ஒரு விழிப்புணர்வு படமா வெளிவந்த எங்கேயும் எப்போதும் படம் இயக்குனர் சரவனனனுக்கு முதல் படம்னு சொன்னா யாராலையும் நம்பவே முடியாது.கடைசியா வருட கடைசியில் வெளிவந்தாலும் முன்னணியில் இருக்கிற மயக்கம் என்ன செல்வரகவனுக்கே உரிய பாணியில் தேசிய விருது பெற்ற தனுஷ் நடிப்புல வெளிவந்த படம் புதுப்பேட்டைக்கு அப்புறம் அண்ணன் தம்பி ரெண்டு பேர் கூட்டணியில வெளிவந்த இந்த படம் இயல்பான கதையாலும் தன்னை ஏமாற்றியவர்களை பழி வாங்க சிறந்த வழி ன்னு வாழ்ந்து காட்டுவது என்கிற மிக அருமையான கருத்தோடும் பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தனுஷ் செல்வராகவனின் புதுமையான பாடல் வரிகளாலும் இளைஞர்கள் மனதில் தனி இடம்பிடித்து வெற்றிகரமா ஓடிகொண்டிருக்கும் இந்தபடம் ஒரு நம்பிக்கை டானிக்.எத்தனையோ படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவந்தாலும் தமிழ் சினிமாவின் 2011 அடையாளாமாக இருக்கும் இந்த படங்கள் தான் உலக சினிமா ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் 2012 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் திரைப்படங்களின் மீதான ஆர்வத்த அதிகரிக்க செய்திருக்குனு சொன்னா அது மிகையாகாது.



இயக்குனர்கள்:-1

நாயகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா இயக்குனர்களின் கைகளில் மீண்டும் முழுவதும் மீண்டு வந்திருக்கிறது. இந்த 2011ம் ஆண்டில். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இயக்குநர் வெற்றி மாறன் 2 தேசிய விருதுகளோடு தமிழ் இயக்குநர்களின் பெயரையும், புகழையும் உயர்த்திக் காட்டினார். புதுமுக இயக்குநர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் பல படங்கள் வெளி வந்து வெற்றிகரமாக ஓடாவிட்டாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன. அதில் குறிப்பிடப்படவேண்டியவர் சமூகத்திற்கு தேவையான ஆழமான கருத்தை அழகியலோடு இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்கேயும் எப்போதும் திரைப்படமாகத் தந்த இயக்குனர் சரவணன்.


அடுத்து கடந்த வருடம் அதிகம் பேசப்பட்ட களவாணி படத்தின் எந்த சாயலும் இல்லாமல் இரண்டாவது படத்திலேயே ஒரு சமகால வரலாற்றை நல்ல கருத்தோடு கிராமத்துப் பின்னணியில் வாகை சூட வா திரைப்படமாகப் படைத்த இயக்குனர் சற்குணத்திற்கு முக்கிய இடமுண்டு. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமளவிற்கு படைப்புகளைத் தருகின்ற இயக்குநர் பாலா அவன் - இவன் படத்தின் மூலம் வித்தியாசமான கதாபாத்திரங்களை திரையில் உலவ விடுவதில் முத்திரை பதித்தார். அடுத்து தனி மனித கோபத்தை தனக்கே உரிய பாணியில் சுவாரசியமான படைப்பாக யுத்தம் செய் மூலம் தந்திருந்தார் மிஷ்கின்.

அடுத்து தன் முந்தைய படங்களின் அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அவருடைய அதே கூட்டணியோடு வெற்றிகர பயணத்தை முடித்திருக்கிறார் ராதா மோகன். அடுத்து அயல் சினிமாவின் தழுவல் என்றாலும் தனக்கே உரிய திரைக்கதை யுக்திகளாலும், மனதை மயக்கும் காட்சியமைப்புகளாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தெய்வத்திருமகள் தந்த விஜய். இறுதியாக இரண்டு வருடத்திற்குப் பிறகு தன் வழக்கமான குழுவோடு ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணத்தை யதார்த்தத்தின் சாயல் குறையாமல் மயக்கம் என்ன திரைப்படமாக தந்திருக்கிறார் செல்வராகவன். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை இவர்கள் இயக்கியதில் எந்தக்குறையும் இல்லை.

இயக்குனர்கள்:-2

எத்தனையோ படங்கள் வருகிறது. எவ்வளவோ இயக்குநர்களும் வருகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களில் வரும் சில காட்சியை வைத்தே யாரடா இந்த இயக்குநர் என்கிற எதிர்ப்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துபவர்கள் குறைவு தான். பலர் அந்த திரைப்படங்கள் திரையரங்கை விட்டு போகும் போதே மக்கள் மனதை விட்டும் போய் விடுகின்றார்கள். இதெல்லாம் தாண்டி ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த வருட தமிழ் சினிமாவின் அடையாளமாக நாங்கள் குறிப்பிட விரும்பும் மூம்மூர்த்திகளில் முதலாமானவர் இயக்குநர் சரவணன். இவர் இயக்கி வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவரின் முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவிற்கு மாற்றி இருக்கிறது. சினிமா மொழி தெரிந்த நல்ல இயக்குநராக இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு இவர் கிடைத்திருக்கிறார். ஒரு அருமையான விழிப்புணர்வுப் படத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொழுதுபோக்கான வெற்றிபடமாக மாற்றியதில் இவரை தமிழ் சினிமாவின் இந்த வருட சாதனையாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

அடுத்து வெற்றி மாறன், வருடத்தொடக்கத்தில் வந்து 2 தேசிய விருதுகளை அள்ளியதோடு அல்லாமல் மண்ணின் பதிவுகளை திரையில் கொண்டு வரும் இயக்குநராக மாற்றி இருக்கிறது. இறுதியாக ஏ.எல்.விஜய் மதராசப்பட்டினம் படம் மூலம் மூத்த கொண்டாடப்பட்ட இவர் தெய்வத்திருமகள் மூலம் தன் இடத்தை மீண்டும் தக்க வைத்திருக்கிறார். மனதை விட்டு நீங்காத இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இவர் இயக்கத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவை இந்திய சினிமாவைத் தாண்டி உலக சினிமாவோடு இணைக்கும் பயணத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.


இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 2011

Wednesday, December 14, 2011

"தெரிந்தது கைமண்ணளவு"



ஷாலி இந்த காலத்து பொண்ணு பி.இ(சி.எஸ்.இ) பைனல் இயர். ஒரு கையில உள்ள போன்ல எஸ்.எம்.எஸ் பண்ணிகிட்டே இன்னொரு கையில லேப்டாப்ல மெயில் சாட்டிங் பண்ணிகிட்டே,அப்பப்ப வர்ற போனுக்கு காதுல போட்டிருக்கிற ஹெட்செட் மூலமா பதில் சொல்லிக்கிட்டிருக்கா.

அப்ப காப்பியோட அந்த ரூம்க்குள்ள வர்ற அவங்க அம்மா பாப்பா நீ காலேஜ் போன பிறகு எவ்வளோ போன் வருது போகுது.எனக்கு பேச தெரியுதா ?அணைக்க தெரியுதா செல்போனெல்லாம் நீ வச்சுக்கோ வீட்டில வச்சுட்டு போகதேனா கேட்க்கமாட்டிக்கிற, இத எப்படி யுஸ் பண்றது?.

கோபமான ஷாலி "அம்மா ரெண்டுநாளா உனக்கு நா சொல்லி கொடுத்தெல்லாம் வச்சு ஒரு புக்கே போடலாம். ஆனா உனக்கு புரியவே மாட்டிக்குது. இங்கவா அந்த போன் இப்படி குடு நொள்ளை அவ அம்மாக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டா இந்த பச்ச பட்டன் அமுக்கினா கால் அட்டென்ட் பண்ணும்,செவப்பு பட்டன் கால் கட் பண்ண. நாலாம் நம்பர் அமுக்கினா அப்பாக்கு கால் போகும், இரண்டு அமுக்கினா எனக்கு கால் வரும்,ஒன்னு அமுக்கினா அண்ணாவுக்கு கால் போகும்.இவ்வளவு தான் சரியா! புரிஞ்சுதா எங்க சொல்லு பாப்போம்ங்கிறா"...

ஷாலி அம்மா திக்கி திணறி சொல்றாங்க "நாலு அமுக்கினா கால் வரும் இரண்டு அமுக்கினா கட் ஆகும். பச்ச பட்டன அமுக்கினா அப்புறம் ஐயோ மனசில நிக்கவே மாட்டிக்குதுமா"...அப்படிங்கிறாங்க

டென்சன் ஆகுற ஷாலி என்னமா இது கூட ஞாபகம் வைக்க முடியலையே உனக்கு, வயசாயிட்டாலே இப்படித்தான் உங்க ஜென்ரேசன் பீப்பிள் லாம் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?" அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே அவ அண்ணன்கிட்ட இருந்து கால் வருது அந்த கால அட்டென்ட் பண்ணி அம்மாகிட்ட குடுத்துட்டு இனி என்ன சொல்லிகுடுத்தாலும் உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாது உன் பையன் கிட்ட பேசு அப்படிங்கறா எரிச்சலா....


ஷாலி அம்மா போன கையில வாங்கி ஹலோ சொல்றாங்க எதிர் பக்கம் அவங்க பையன் அம்மா அந்த மளிகை சாமான் லிஸ்ட் தொலைச்சிட்டேன். என்னலாம் வாங்கனுமுனு ஒரு தடவை சொல்லுங்க நா எழுதிக்கிறேனு சொல்லவும், இந்த பக்கம் அவங்க அம்மா பரவாயில்லை தம்பி சொல்றேன் குறிச்சுக்கோனு ஆரம்பிக்கிறாங்க,"புளி கால் கிலோ, வத்தல் அரைகிலோ,மல்லி பொடி நூறு,அரிசி 25 கிலோ, தேங்காய் எண்ணெய் அரை லிட்டர்,நல்லெண்ணெய் -ஒரு லிட்டர்,உ.பருப்புஇரண்டு கிலோ,து.பருப்பு-இரண்டு கிலோ இப்படியே ஒரு 50பொருள் லிஸ்ட் படபடனு எதையும் பார்க்காமலே சொல்லிட்டு பார்த்து பத்திரமா வீட்டுக்கு வாடானு போன கட் பண்ணிட்டாங்க
ஷாலிக்கு அவங்க அம்மா போன்ல அவ அண்ணன் கிட்ட சொன்ன பொருள்ல பத்து பொருள் பேர் கூட ஞாபகம் வைக்க முடியில....



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து 
காலம் :-ஆகஸ்டு நாலாவது  வாரம் 2011

Wednesday, December 7, 2011

"போராடுவோம் போராடுவோம்"


        இன்னையோட மூணாவது தடவை இந்த வருஷத்தில ஸ்ட்ரைக் நடக்குது. பெட்ரோல் விலை உயர்வ மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லி மாநிலம் முழுக்க எல்லா கடைகளையும் தனியார் நிறுவனங்களையும் மூடச் சொல்லி ஊர்ல இருக்கிற எல்லா சங்கங்களும் அறிவிச்சிட்டாங்க.

        நெறைய பஸ்ஸூம் ஓடாததனால காலேஜ்,ஸ்கூல் போற பசங்களுக்கும் பிரச்சனை காலையில 6 மணியில தொடங்கி சாயங்காலம் 6 மணிக்கு முடியற இந்த ஒருநாள் பந்த்தால அரசாங்கம் பணியுற மாதிரி தெரியில...அவங்க ஓவ்வொரு காலகட்டத்திலையும் விலையேற்றிக்கிட்டுதான் இருக்காங்க.

     இவங்களும் ஒருநாள் ஸ்ட்ரைக் பண்ணிட்டுதான் இருக்காங்க,விலைவாசியும்  குறைஞ்சபாடில்ல. இதனால பாதிக்கப்படுறது. நம்ம முத்துக்குமார் மாதிரி தினக்கூலி சம்பாதிக்கிறவங்கதான் ஒருநாள் பட்டினி இருக்கவேண்டியதாயிருது.



       இந்த ஸ்ட்ரைக்கால இன்னைக்கு கடை லீவுங்கிறதால முத்துகுமார் வெளியில சுத்திட்டு வீட்டுக்குள்ள வரும் போது அவன் பொண்டாட்டி ஆரம்பிச்சுட்டா " இன்னைக்கு இருந்த அரிசியை வச்சு கஞ்சி காய்ச்சிட்டேன். நாளைக்கு பட்டினிதான் உங்க முதலாளி கடைய முடுறாருனா அட்வான்சா ஒரு 100ரூபாய் கொடுத்திருக்கலாம்ல, நம்மள பத்தி யாரு நினைக்கிறாங்க....சரியா உன்ன கல்யாணம் பண்ணின பாவத்துக்கு இந்த பசி கொடுமைய நா அனுபவிக்கலாம் உன் பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சு.நாளைக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது வழி பண்ணாம இராத்திரி வீட்டுக்கு வந்திராதணு " கத்திட்டு உள்ள போயிட்டா..



         என்ன பண்றதுங்கிற யோசனையோட வீட்ட விட்டு வெளியில் வர்ற முத்துக்குமார் கண்ண மூடி மேல பார்த்து கொஞ்ச நேரம் அப்படியே நிக்கிறான். அப்ப தூரத்தில மைக்செட்ல

     "நாளை இசக்கியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஏழு மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்  பக்தர்கள் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக"ஒரு குரல் அவன கடந்து போகுது... லேசா புன்னகையோட கண்ண திறக்கிறான் முத்துகுமார்.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011

Friday, December 2, 2011

"தெளிஞ்சுடுச்சு"


                அந்த பார்க்ல வந்து ராஜன் உட்கார்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். ஒரே குழப்பத்துல இருக்கான். அவனோடது நடுத்தரமான குடும்பம் ரெண்டு அக்காவ கல்யாணம் பண்ணி கொடுக்கணும் குடும்பத்த பார்த்துக்கணும். அவனும் செட்டில் ஆகணும்

            இப்ப அவன் வேலை பார்க்கிற தனியார் கம்பெனி சம்பளத்துல இதெல்லாம் கனவாவே கலைஞ்சுரும்னு நெனைச்சுகிட்டிருந்தான். ஆனாலும் எல்லார் மாதிரியும் வேலைக்கு போய் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு ஞாயிற்று கிழமையான ஒரு படம் ஐந்தாம் தேதியான ஹோட்டல்னு நல்லதான் போய்கிட்டிருந்தது வாழ்க்கை.


        இப்ப இன்னைக்கு ரொம்ப நாளா அவன வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டிருந்த அவங்க ஒன்னுவிட்ட மாமாவா பார்த்துட்டு வந்தததுலருந்துதான் இந்த குழப்பம், வீட்டுக்கு போகாம நேரா பார்க்குக்கு வந்து உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.

       அவங்க நடத்திகிட்டிருக்குற ஒரு டிரஸ்ட்ட பார்த்துக்க யாரும் இல்ல . அதனால அந்த ட்ரஸ்ட்ட  நிர்வாகம் பண்ற பொறுப்ப ராஜன்கிட்ட கொடுக்கிறதா சொல்ல அதோட கணக்குவழக்கெல்லாம் மட்டும் நாங்க பார்த்துக்கிறோம் வர்ற லாபத்தா செலவுகணக்கு காட்டி குறைச்சு எழுதி பிரிச்சுக்கலாம்னு சொல்லவும். ராஜன் வருமானவரி கட்டாம எப்படின்னு அவங்க மாமாகிட்ட கேக்கிறான், "சின்ன சின்ன ஸ்வீட் கடை,பலசரக்கு கடை நடத்துறவங்களுக்கெல்லாம் எவ்வளவு வியாபாரம் நடக்குது. அவங்கெல்லாம் வருமானவரியா கட்டுறாங்க " நல்ல நாளா பார்த்து வந்து பொறுப்பு எடுத்துக்கோனு சொல்லி அனுப்பிட்டாங்க.


          குழப்பத்தோட வீட்டுக்கு வர்ற ராஜன் நேரா அவங்க தாத்தாகிட்ட போய் "நேர்மையா  தொழில் பார்த்தோம்னா வருமான வரி கட்டலேனா கூட தப்பு இல்லைலே அப்படின்னு கேக்கிறான்"         அதுக்கு 91 வயசுவரைக்கும் ஆரோக்கியமா இருந்து நாலுவருஷம் முன்னாடி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து நடக்கமுடியாம கிடக்கிற அவன் தாத்தா சொல்றாரு"அந்த காலத்துல என் முதலாளிக்கு வரி ஏமாத்த நட்டகணக்கு எழுதிகொடுத்ததுனாலதான் கடவுள் என்ன இப்படி நடமாடமுடியாம ஆக்கிட்டார்டா அப்படின்னு சத்தம் போட்டு சொல்லிட்டு ம்யுட்ல இருந்த டி.வில சவுண்ட் வச்சு சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

    


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து 2011



Wednesday, November 30, 2011

" அய்யோ அய்யோ "






                 "என்னதான் ஊருக்குள்ள இவ்வளவு பெரிய ஆறு ஓடுதுனாலும் காலையில அரை மணிநேரம் பைப்ல தண்ணீர் எடுக்கிறதே குதிரைகொம்பால இருக்கு" செல்வி சொல்லி முடிக்கும் போது பைப்பில தண்ணிவர ஆரம்பிக்குது.

           முதல் குடம் தண்ணி பிடிக்க ஆளாளுக்கு விட்டுக்கொடுக்குறாங்க, ஏன்னா தண்ணி கலங்கலா வரும். அப்ப ஒரு பாட்டி வாசல் தெளிக்க முதல்குடம் தண்ணிய எடுக்கிறாங்க,வரிசையில பேச்சு தொடங்குது.செல்வி அவ முன்னாடி நிக்கிற ஜானகிய பார்த்து ஆரம்பிக்கிறா...

             "ஏய் அப்படி என்ன நடக்குதுன்னு அந்த கோவிலுக்கு வாராவாரம் குடும்பத்தோட போறீங்க, நேத்து நைட்டு கூட 10 மணிக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வந்தீங்க. பக்தி ஓரளவுக்குத்தான் இருக்கணும் ஞாயிற்றுகிழமை கூட நாலு இடத்திற்கு போயிட்டு வராம சாமிய விட்டுட்டு ஆசாமிய போய் இப்புடி விழுந்து விழுந்து கும்பிட்டுட்டு வர்றீங்களே " செல்வி இப்படி சொல்லவும் ஜானகிக்கு கோபம் தலைக்கு மேல ஏறிடுச்சு.

            "உனக்கென்ன தெரியும் அந்த கோவில் மகிமை பற்றி,அந்த இடம் எவ்வளோ அழகு  அங்க வச்சுருக்கிற சிலைகள், ஏன் அந்த சாமியார் எவ்வளவு பவர்புல் தெரியுமா அவர் குறி சொன்னா அப்படியே நடக்கும். உன் முகத்தே பார்த்தே உன் ஜாதகத்த சொல்லிருவாரு வந்து பாரு எவ்வளவு கூட்டம் கால்கடுக்க அங்க காத்து கிடக்குதுன்னு "சொல்லிட்டு செல்விய பார்த்து மூஞ்ச வெட்டிகிட்டு காலி குடத்தோட திரும்பி பார்க்காம வீட்டுக்கு போயிட்டா ஜானகி.

        ரெண்டு நாள் கழிச்சு ஜானகி வீட்டுக்கு போற செல்வி காலையில பேப்பர்ல வந்த தலைப்பு செய்திய அவகிட்ட காட்டுறா, அதுல மீண்டும் ஒரு சாமியார் பாலியல் வழக்குல கைதுன்னு போட்டு ஜானகி வழக்கமா குடும்பத்தோட போற சாமியாரோட புல் சைஸ் கலர் போட்டோ அரை பக்கத்துக்கு போட்டுருக்கு.

          செல்வி அடுத்த வார்த்தை பேச வாய திறக்குறதுக்குள்ள ஜானகியே ஆரம்பிக்கிறா"அந்த ஆள் முகத்த பார்த்தப்பையே நெனைச்சேன் இப்படி எதாவது மாட்டுவான்னு, அந்த ஆள் நடவடிக்கையே சரியில்ல பொம்பளைங்கள சிறப்பு பூஜைக்கு தனியா வர சொல்லி பிரசங்கம் பண்ணிட்டிருந்தான், அந்த கோவில் கூட எதோ செட் போட்ட மாதிரி இருக்கும் ஒரு தெய்வீக கலையே இருக்காது தெரியுமா"படபடனு பேசினவ அடுப்புல சட்டி காயுது நா வரேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம உள்ள போயிட்டா...






இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 

காலம் :-ஆகஸ்டு முதல் வாரம் 2011

Tuesday, November 29, 2011

"கேட்டா தான் கிடைக்கும்"


               செல்வத்தோட அப்பா அப்படின்னு சொன்னாதான் அந்த காம்பவுண்டில எல்லாருக்கும் தெரியும். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். தினமும் காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கிளம்பி தயாராயிருப்பார்.ஏழு மணி வர்ற எல்லார் வீட்டு பேப்பரையும் ஒரு வரி விடாம படிச்சிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவார்.

             இன்னைக்கு அப்படி பேப்பெர படிச்சவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டார். இப்ப பேப்பேர்ல கொஞ்ச நாளா வர்ற உண்ணாவிரதம் செய்திகள், இரண்டாவது விடுதலை போராட்டம், காந்தியின் மறுஉருவம்னுலாம் சிலரை பத்தி செய்தி வர்றத பார்த்துட்டு தான் இந்த யோசனை.

           அந்த நேரம் வெளிய போயிட்டு வீட்டுக்குள்ள நுழையுற அவர் பையன் செல்வத்துகிட்ட "ஏம்ப்பா சத்தியாகிரகம் மாதிரி மாதிரி இந்த போராட்டங்கள்  எல்லாம்  ஊழல ஒழிச்சுரும் போலியே " அப்படின்னு கேக்கிறாரு.


                    செல்வம் எல்லாரும் அதிகமா சப்போர்ட் பண்ணினா அந்த பக்கமே போகமாட்டான். எப்பவுமே எல்லா விஷயத்துலயும் தனக்குன்னு தனி கருத்து வச்சுருப்பான்.இப்ப வேற எத பண்ணினாலும் விமர்சனம் பண்றதுக்குன்னு ஒரு கூட்டம் அதிகமாயிருக்காங்களே அவங்கள்ள இவனும் ஒருத்தன்.இப்ப அவங்க அப்பா செல்வத்துக்கிட்ட கேள்விகேட்டது வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆக அந்த காம்பவுண்டில இருக்கிற எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தம் போட்டு பேச ஆரம்பிச்சுட்டான்.


                  "அப்பா இவங்களுக்கு வேற வேலை இல்லை உண்ணாவிரதம் இருந்தா ஊழல் ஒழிஞ்சிருமா இதெல்லாம் பப்பிளிசிட்டிக்காக பண்றாங்கப்பா, நாட்டில இட ஒதுக்கீடு, சுற்றுசுழல்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இந்த உண்ணாவிரதம் நடத்தவே யார்யார்க்கெல்லாம் லஞ்சப்பணம் கொடுத்துருக்காங்களோ , இந்த உண்ணாவிரதமெல்லாம் மக்கள் மனசில எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" இத செல்வம் சொல்லி முடிக்கவும் அவன் பொண்டாட்டி மண்ணெண்ணெய் டின்னோடு வீட்டுக்குள்ள வரவும் சரியா இருந்துச்சு.


                "என்னடி பத்து பதினஞ்சு நாளா ரேசன் கடைக்காரன் மண்ணெண்ணெய் தராம பிரச்சனை பண்ணிகிட்டிருக்கானு புலம்பிட்டிருந்த இப்ப எப்படி வாங்கின? அப்படின்னு கேட்கிறான் செல்வம் . அதுக்கு அவன் மனைவி டி.வியில, பேப்பேர்ல எல்லாரும் எதுக்கோ உண்ணாவிரதம் இருக்காங்க அரசாங்கமும் அவங்க அஹிம்சை போராட்டத்த அரசாங்கத்தாலேயே ஒன்னும் பண்ண முடியலனு போட்டிருந்துச்சு. அத பார்த்த உடனே நானும் நம்ம தெருவில இருக்கிற முப்பது பொம்பளைகள கூட்டிட்டு போய் நம்ம ரேசன் கடை முன்னாடி மண்ணெண்ணெய் தரும் வரை உண்ணாவிரதம்னு உட்கார்ந்துட்டேன் . அவ்வளவு தான் பயந்துபோன அந்த கடைக்காரன் கடை திறந்த  உடனே எங்க எல்லாருக்கும் மண்ணெணெய்ய கொடுத்துட்டான்" சரி சரி  வாங்க காபி  போட்டு தரேன்னு சொல்லிட்டு  விறுவிறுனு வீட்டுக்குள்ள போயிட்டா....






இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து

காலம் :-ஜூலை நாலாவது வாரம் 2011

Friday, November 25, 2011

" பார்வைகள் பலவிதம் "



     "இன்னும் எத்தனை நாள் தான் நாம இப்படி இருக்க போறோமோவர்ற வருமானம் சாப்பாட்டு   செலவுக்கே சரியா இருக்கு. நாலு இடம் போக முடியுதாஇந்த உலகத்துல யாருக்குமே நன்றி இல்லசொந்த பந்தம் பத்தி எல்லாம் யாரு நெனைச்சு பார்க்கிறாங்க. எவ்வளவோ கெட்டது பன்றவங்க எல்லாம் நல்லாதான் இருக்காங்க"  அவ புருஷன் நல்லசிவத்த பார்த்து கத்திட்டு அடுப்படிக்குள்ள போறா தனலட்சுமி.

     
இந்த மாதிரி தினமும் ஒவ்வொரு வீட்டுல இருக்கிற சாதாரண மக்களோட உரையாடல்களை கவனிச்சா நாலு மெகாசீரியல்க்கு ஒரே நேரத்தில வசனம் எழுதலாம். அந்த அளவுக்கு வார்த்தைகள் வந்து விழும் அத கவனமா கேட்டுகிட்டு அமைதியாயிட்டா அன்னைக்கு பொழுதோட அந்த சண்டை முடிஞ்சிரும். இல்ல.... பானிபட் யுத்தம் மாதிரி பல ஆண்டுகள் இந்த சண்டை தொடரும். பாவம் இவங்களால புலம்பதான முடியுது..அப்படி ஒரு நல்ல நாளில தனலட்சுமி கத்தின குரல் தான் இது. நாலாவது வீட்டில இருக்கிற சலீமா மாமிக்கே தெளிவா கேட்கும். இங்க வீட்டில வெராண்டாவில உட்காந்திருக்கிற நல்லசிவத்துக்கு கேட்காதா என்னகேட்டுச்சுஆனா அவர் வாயவே திறக்கலையே.
  
       தனலட்சுமி நல்லசிவத்துக்கு கல்யாணமாகி நாலு வருஷம் ஆகுது.அடுத்தடுத்து ஆண் ஒண்ணு பெண்  ஒண்ணுனு ரெண்டு பிள்ளைங்க,ஊருக்கு வெளிய ஒரு வாடகை வீட்டில குடியிருக்காங்க. 
அவ கணவன் நல்லசிவம் அவங்க வீட்டில மூணாவது பையன். இரண்டு அண்ணன்களும் நல்ல வசதியா தான் இருந்தாங்க. ஒரே ஊரில பெண் எடுத்து பக்கத்தில தான் குடியிருக்காங்க.இரண்டாவது அண்ணன் பத்தி  பிரச்னை இல்ல ஒரு கடை வச்சுருக்காரு சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தாரு.

      முதல் அண்ணன் பேங்க்கில வேலை பார்த்தாருகை நெறைய சம்பளம் ரெண்டு பிள்ளைங்க காலைல பார்த்தா கட்டு கட்டா ரூபாநோட்ட எண்ணுவாரு சாய்ங்காலமான தமிழ்நாட்டோட முக்கிய நிதி ஆதாரமான டாஸ்மாக்ல போய் பணத்த எண்ணி குடுத்துட்டு குடிச்சு முடிச்சா தான் அவருக்கு அன்னைக்கு நாள் நிறைவடையும்.

      இப்படி அவரோட பல வருஷம் கடும் கடமை உணர்ச்சியின் பலனால் ஒரு அஞ்சு  வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு கிட்னி பெயிலியராயிடுச்சு.கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும்நல்ல ஹெல்த்தியான டோனர் வேணும் இல்ல உயிர் பிழைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.வெளிய முயற்சி பண்ணி பார்த்தா கிட்னி கிடைக்க நாளாகும்ங்கறதுனாளையும்  பார்மாலிடிஸ் அதிகம்ங்க்றதுனாலயும்அவன் அண்ணியோட யோசனையில அவன் அண்ணனே நேரடியா வந்து நல்லசிவத்துக்கிட்ட "உன் கிட்னி எனக்கு பொருத்தமா இருக்கு நீ குடு. உன்ன நல்லா பார்த்துக்குறேன்னு சொன்னாரு " அப்ப அவன் அண்ணன் வீட்டில தான் இருந்தான் கல்யாணம் ஆகல அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சேனு பதறி போயிருந்தவன் வேற எதையுமே யோசிக்காம, எந்த பலனையும் எதிர்பார்க்காம உடனே அவனோட ஒரு கிட்னிய கொடுக்க ஒத்துகிட்டான்.

      
அவங்க ஊர்ல நடந்த முதல் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை அதுதான்சொத்தயே பங்கு போட தயாரா இல்லாத அண்ணன் தம்பிங்க வாழுற காலத்தில அண்ணனுக்காக கிட்னி கொடுத்த தம்பின்னு பேப்பர்ல பெரிய நியூஸ்லாம் வந்துச்சு.சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கும் வந்தாச்சு   ஆனா நல்லசிவம் அண்ணன் கிட்னிய வாங்கிட்டு ஒரு மாசத்தில நல்லசிவத்த இரண்டாவது அண்ணன் வீட்டுக்கு விரட்டிவிட்டுட்டான்.அப்புறம் அவங்கதான் நல்லசிவம் உடம்ப தேத்தி தெம்பாக்கி ஒரு சின்ன கடையும் வச்சு கொடுத்து கொஞ்ச நாள் கழிச்சு தூரத்து சொந்தத்தில இருந்த தனலட்சுமிய கல்யாணம் பண்ணிவச்சாங்க.

      
இப்ப பொண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா தான் இருக்கான் நல்ல சிவம் ஆனா அவன் பொண்டாட்டி பிரசவத்திலையும் சரிபிள்ளைங்க பெறந்தப்பவும் சரிகிட்னி கொடுத்த பெரியஅண்ணன் கவர்ன்மென்ட் வேலைல நல்லா இருந்தாலும்எங்க கஷ்டபடுற தம்பி குடும்பம் எதும் காசு உதவி கேட்பாங்களோனு பயந்து ரெண்டு மூணு தடவை எட்டி பார்த்ததோட சரி கடைசி தம்பி நல்லசிவம் வீட்டுக்கு அடிக்கடி வர்றதில்ல.

     இத பத்தி நல்லசிவமும் தனலட்சுமியும் பெரிசா எடுதுக்கலனாலும் அடிக்கடி அக்கம் பக்கம் இருக்கிறவங்க பேசுற பேச்சுல கொஞ்சம் கத்திட்டு அமைதியாவா தனலட்சுமி. இப்ப தண்ணி பிடிக்க போன இடத்தில யாரோ எதோ சொன்னதுல கோபமாகி வீட்டுக்குள்ள வந்து இப்படி தாம்தூம்னு கத்திட்டு சமயலறைக்குள்ள போறா. ஆனா நல்லசிவம் எப்பவுமே அவன் மூத்த அண்ணன்ன விட்டுகொடுக்காம பேசுவான்."இப்ப என்னாச்சு உனக்கு சும்மாயிருக்கமாட்டியா ஆமா சாப்பாடு எப்ப தயாரகுமுனு" பேச்ச மாத்த பார்க்குறான் 

    அதுக்குள்ள தனலட்சுமி உள்ள இருந்து திரும்பவும் வெளியில வந்துட்டா அதே கோபம் குறையாம நல்லசிவத்த பார்த்து கேட்கிறா "ஏங்க உங்க சின்ன அண்ணனுக்கு இருக்கிற அக்கறை கூட இவங்களுக்கு இல்லநல்லா தான இருக்காங்க ஒரு பிள்ளைய கட்டி குடுத்தாச்சு.இன்னொரு பையன இஞ்சினியருக்கு படிக்க வைக்குறாங்க.சொந்தம்னு தான் பேரு நம்மள பார்த்து பேசுறதும் இல்ல ஒரு நல்லது கெட்டதுக்கு வந்து போறது கூட இல்ல,யாருமே செய்யாத உதவி செஞ்ச தம்பிய எப்படி தான் இப்படி ஒதுக்கி வச்சுட்டு இருக்க முடியுதோஹ்ம் "இந்த கடவுள் எப்பதான் நம்ம வாழ்க்கைய கண்ண திறந்து பார்ப்பாரோ" அப்படின்னு புலம்பி முடிக்கிறா" 
     எல்லாத்தையும் பொறுமையா கேட்டு முடிச்ச நல்லசிவம் அவன் மனைவி தனலட்சுமிகிட்ட சொல்றான்."ஏண்டி நீதான் ஒரு கிட்னி இல்ல எனக்கு என்னாகுமோ ஏதாகுமோனு பயப்படுற. நா நல்லா உழைக்கிறேன் தினமும் 300௦௦ ருபாய் சம்பாதிக்கிறேன் இன்னும் சில வருஷத்தில சொந்தக்கடை வச்சுருவேன். இதுவரைக்கும் நா காய்ச்சல்,தலைவலின்னு எதாவது நோய் வந்து படுத்திருப்பேனா,ஏன் நம்ம பிள்ளைங்களுக்கு கூட தடுப்பூசி தவிர வேற எதாவது மருந்து செலவு வந்துருக்குமா இதுக்கு மேல நமக்கு என்ன வேணும்.நீ சீக்கிரம் டிபன் பண்ணி வை இன்னைக்கு எங்க அண்ணனோட கல்யாண நாள் நா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துறேன் "ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துன்னு சொல்லிட்டு விறுவிறுனு வெளிய கிளம்பி போயிட்டான்"....








இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூலை மூன்றாவது வாரம் 2011

Thursday, November 24, 2011

"உணவு சங்கிலி"









        டேய் பாபு "இந்த சிலைய பாரேன் உடம்புல உள்ள நரம்பு கூட எவ்வளவு துல்லியமா தெரியிறமாதிரி செதுக்கியிருக்காங்க" வியப்பு அடங்காம சொல்றான்  சங்கர்.

        இரண்டுபேரும் நண்பர்கள் பக்கத்து பக்கத்து தெருவில தான் குடியிருக்காங்க. ஞாயிற்றுகிழமையான சினிமா தியேட்டர் கிரிக்கெட் மைதானம்னு போறவங்கள்ளுக்கு மத்தியில கோயிலுக்கு வந்து போற ஒரு சில இந்த கால இளைஞர்கள்ல இவங்களும் உண்டு  ...


            சங்கருக்கு தெரியாத கோவிலே ஊர்ல கிடையாது ஒரு கோவில்னு போனா வாசல்ல விநாயகர் சன்னதியில ஆரம்பிச்சு கருவறையில இருக்கிற மூலவர், சப்பரபவனி கொண்டு போற உற்சவர்,தட்சினாமூர்த்தினு ஒவ்வொரு சன்னதியா நின்னு அந்தந்த கடவுளுக்குள்ள பூசாரியே மறந்து போன மந்திரங்கள சொல்லிட்டு தான் கிளம்புவான் அவ்வளோ பக்தி.


               மூலஸ்தானத்துக்கு மேல உள்ள கோபுரம் விமானம்.உருவமா சிவன் இருந்தா அதாவது பார்வதி,முருகன் சேர்ந்து லிங்கமும் இல்லாம நடராஜர் வடிவமமும் இல்லாம முழுமனித வடிவுல காட்சி தர்றதுக்கு பேரு சோமாஸ் கந்தர்னு சொல்வாங்க. இப்படி போற போக்கில கோவிலோட கல்வெட்டுல இல்லாத விஷயங்கள கூட சொல்லுவான் சங்கர்.


              இப்ப ஒரு சிலைக்கு முன்னாடி நின்னு ரசிச்சுகிட்டிருக்கான்.பசியால வாடி போய் உடம்பு நரம்பெல்லாம் தெரியுற மாதிரி ஒரு மனுஷன் இறைவன்கிட்ட வேண்டி நிற்கிறமாதிரி இருக்கிற அந்த  சிலைய பார்த்து சொல்றான் "இப்ப உள்ள மனுஷங்ககிட்ட மனிதாபிமானம் குறைஞ்சு போச்சு, எறும்பில இருந்து எல்லாஉயிருக்கும் பகவான் தான் படியளக்கிறார்னு" புகழ்ந்துக்கிட்டுருந்தான் சங்கர். . அப்ப பாபு நேரமாச்சுன்னு சொல்ல பிரசாத தட்ட எடுத்துகிட்டு வெளியில் வந்த ரெண்டுபேரும் செருப்பு எடுக்க போறாங்க....


           அப்ப யாரோ சங்கர் முதுகுல கைவைக்க திரும்பிபார்க்கிறான் ஒரு மனநிலை சரியில்லாத ஆள் அழுக்கான வேட்டியோட வெறும் உடம்புல நிக்கிறான்.கழுத்து நரம்பு புடைக்க கத்தி கைய நீட்டுறான். அவ்வளோதான் பயந்துபோன சங்கர் பிரசாத தட்ட போட்டுட்டு கூட வந்த பாபுவையும் விட்டுட்டு ஓடியே போயிட்டான்.


                 சங்கர காணாம தேடுற பாபு குனிஞ்சு கீழ பாக்கிறான்,அப்ப அங்க அந்த பிரசாத தட்டுல இருந்து சிதறி விழுற பழத்த அந்த மனநிலை சரியில்லதாவர் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்.அவர உற்றுபார்க்கிற பாபுவோட மனசில ஓடுது "அந்த மனநிலை சரியில்லாத ஆளோட பலநாள் பசிக்கு இன்னைக்கு சங்கர் மூலமா படியளந்துட்டார் இறைவன்னு"



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூலை இரண்டாவது வாரம் 2011

"தண்ணீர் தண்ணீர்"








                "ஏய் அருவியில குளிக்க வந்துட்டு ஏண்டா படியில நின்னுகிட்டு பொம்பளைங்க குளிக்கிற பக்கம் வேடிக்கை பாருக்குறீங்க" கனமாக ஒலிக்கிறது துண்ட கட்டிட்டு லத்தியோட தண்ணியில் நனைஞ்சுகிட்டே கூட்டத்த கட்டுப்படுத்த முயற்சி பண்ணிட்டிருக்கிற ஒரு போலிஸ்காரரின் குரல்.



               லேசா சாரல் அடிக்குது, சோள பொறி அவிக்கிற புகை , மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் சுடுற வாசனை எல்லாம் மோப்பம் பிடிச்கிகிட்டே கூட்டம் கூட்டமா அந்த ரோட்டில போற யார தொட்டாலும் வழுக்கிவிட்டிரும்.அந்த அளவுக்கு உடம்புல நல்லெண்ணைய தேய்ச்சுகிட்டு ஒரு வருஷத்து உடம்பு அழுக்க ஒரே நாளில் தொலைச்சிரனும்னு போட்டிபோட்டுட்டு அருவிக்குள்ள போற ஆட்கள தன்னோட அஞ்சு வயசு பையன கையில் பிடிச்சுட்டே வேடிக்கை பார்துட்டுருக்கிற ரமேஸ் திரும்பி அவன் மனைவிய பார்க்கிறான்.

                   "என்னங்க இன்னும் ஒரு பத்து நிமிஷம் குளிச்சிட்டு வந்துறேங்க குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்கனு" சொல்லிட்டு அருவி தண்ணிக்குள்ள மறைஞ்சு போயிட்டா ரமேஷோட மனைவி.

                    இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணின ரமேஷ் அவன் பையன தூக்கிட்டே அருவிக்குள்ள நுழைஞ்சு குளிக்க பார்க்கிறான். ம்ஹூம் உள்ள போன யாரும் வெளியில வர்றதா தெரியில ரமேஷ நெருக்கி வெளியில்ல தள்ளிட்டாங்க,அவன் பையன் பயந்து அழ ஓரமா வந்து உட்கார்ந்துட்டான் ரமேஷ்.

                  கூட்டத்தோட கூச்சல் நெருக்கடிய பார்த்து பயந்துபோன ரமேஷ் பையன்,அப்பா வீட்டுக்கு போகணுமுன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான். ஓங்கி ஒரு அடி விட்டான் ரமேஷ் ஏன்டா இப்புடி படுத்துற டூர் வந்தா கூட நிம்மதியா இருக்க விடமாட்டியானு திட்டிட்டு முகத்த திருப்பி உட்கர்ந்துகிட்டான்.



                  அருவி தண்ணியையே வேடிக்கை பார்த்துட்டே கொஞ்ச நேரம் அழுது முடிச்ச அவன் பையன் ரமேஷ முதுகுல மெதுவா தட்டி...கேக்கிறான்."அப்பா வீட்டுல பைப் ஒழுங்கா மூடலைனா தீட்டுவேல இந்த அருவியில இவ்வளோ தண்ணி வேஸ்டா போகுதே யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?"






இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து

காலம்:-ஜூலை முதல் வாரம் 2011

Wednesday, November 23, 2011

"" மறந்துபோனவைகள்""


             "ஒரு பெரிய மனுஷன் முணு நாளா சொல்லிகிட்டிருக்காரு உன் மகன் கேக்கிறானா? இந்த காலத்து பசங்களா எங்க பெரியவங்க பேச்ச கேட்கிறாங்க " இந்த டயலாக்க வார்த்தை மாறாம இன்னைக்கு மட்டும் தன் பொண்ணு அமுதாகிட்ட பல தடவை சொல்லிடுச்சு ராஜம் பாட்டி...

            தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,அவங்க வீட்டில யார் சொல்லியும் கேட்கல இந்த ஹரி...

            ஸ்கூல் படிச்சு முடிச்சதோட சென்னை போனவன்தான்  நாலு வருஷம் இஞ்சினியரிங் படிச்சுட்டு அங்கேயே ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்துட்டுருந்தான். நல்ல சம்பளம்  வாழக்கை நல்லாத்தான் போய்கிட்டிருந்தது.

               திடீர்ன்னு  ஒரு நாள் ஹரிக்கு ஊர்ல அவங்க அம்மாகிட்ட இருந்து ஒரு போன் "அப்பாக்கு ஹார்ட் வீக்கா இருக்காம்டா புல் ரெஸ்ட்ல தான் இருக்கணும். எந்த வேலையும் செய்ய கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். நீ உடனே உன் வேலைய ரிசைன் பண்ணிட்டு வந்து அப்பாவோட  பிசினெஸ் பார்த்துக்கணும்னு" சொல்லி கட் பண்ணிட்டாங்க.

              ஒரு ரெண்டு முணு நாள் பீல் பண்ணிட்டு சுத்திகிட்டிருந்தான்.அப்புறம் சொந்த ஊருக்கு வந்து வியாபார பொறுப்புகள ஏற்றுக்கிட்டு கவனிக்க ஆரம்பிச்சு ஒரு மாசம் மேல ஆக போகுது.


              தினமும்  காலையில சீக்கிரம் எந்திரிச்சு லேட்டா எல்லாரும் தூங்கினப்புறம் வீட்டுக்கு வர்றதால தப்பிச்சுகிட்டிருந்தான்...

             நேற்று செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு ரொம்ப லேட்டா வந்ததால காலையில எந்திரிச்சு குளிச்சு முடிச்சு பசியில துண்ட கட்டினபடியே சாப்பிட வந்துட்டான். அப்பதான் அவன் தம்பி அத கண்டுபிடிச்சு வீட்டில போட்டுவிட்டுடான்.


            அதுக்கு தான் இப்புடி மாறி மாறி எல்லாரும் திட்டி தீர்த்துட்டுருக்காங்க,எவ்வளவோ   சொல்லி பார்த்துட்டாங்க இவன் கேக்கிறதா இல்ல. இனிமேல் பேசி பிரயோஜனம் இல்லைன்னு முடிவு பண்ணின அவங்க அம்மா ஒரு பிளான் பண்ணின்னாங்க...

         அடுத்த நாள் ஹரி வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து தூங்கி வழக்கம் போல காலைல முழிச்சு பார்க்கிறான். அப்ப அவன் நைட் பேன்ட் மேல டைட்டா அந்த அரைஞான் கயிறு. கட்டியிருக்கு 'அம்மான்னு கத்துர்றான் ' கோரசா வீட்டிலேர்ந்து அவங்க அம்மா தம்பிகிட்டருந்து வருது பதில்"டேய் ஹரி டேய் நாம் ஊர்ல ஆம்பளைங்க யாரும் இந்த கயிறு இல்லாம இருக்கிரதில்லடா ,பட்டணத்துக்கு போய் நீ  இதெல்லாம் அத்து எறிஞ்சிட்ட ,ஆனா நாங்க கண்டுபிடிச்சிட்டோம்ல சரி சரி  அந்த கயிற கட் பன்னிராதாடா.இத கட்டிருந்தா நேரம் கெட்டநேரத்துல வீட்டுக்கு வர்றப்ப காத்து கருப்பு எதுவும் பிடிக்காது.அப்புறம் அதென்ன ஹரிணியா ஹெரினியாவா அந்த நோய் கூட வரதாம்டா"சொல்லிட்டு அடுப்பங்கரைக்கு போயிட்டாங்க....




கேட்டுட்டே இருந்த ஹரி எந்த பதிலும் பேசல அதுக்கு அப்புறம் அவன் அந்த கயிற  அவிழ்க்கவே இல்லை......



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூன் நாலாவது வாரம் 2011

Thursday, August 18, 2011

லேட்டஸ்ட் டிரெண்டு !




"டேய் டேய் ஜான் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த சிஸ்டம்ம எனக்கு குடுடா" கெஞ்சுறான், சரவணன்... அவன சுற்றி நாலஞ்சு பசங்க 'ஓ' னு சத்தம் போட்டுட்டு  இருக்காங்க...

     எல்லாரும் கார்பரேட் கைஸ் ஆபீஸ் வொர்க் பிரஷர், டென்சன் இதுக்கு இடையில இவனுங்க ரிலாக்ஸ் ஆகுறது மெயில் பார்க்குறது, சாட் பண்றது, சோசியல் நெட்வொர்க்ஸ்ல  ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றது, புது புது பிரெண்ட்ஸ் பிடிக்கிறது இதுலல்லாம் தான்...


          டெய்லி ஆபீஸ் ஹவர்ஸ்ல சோசியல் நெட்வொர்க் சைட்ஸ் ஓபன் ஆகுறதில்ல சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பும் போது ஒரு பத்து நிமிஷம் நெட்ல அப்டேட் பண்றதில்ல இவங்களுக்குள்ள போட்டாபோட்டி..எல்லா சிஸ்டம்லையும் எப்பவுமே யாரவது உட்கார்ந்தே இருப்பாங்க...

    இவங்க சோசியல் நெட்வொர்க் சைட்ஸ்ல செய்யுற முக்கியமான சில வேலைகள் "நீச்சல் குளத்தில டைவ் அடிச்சு குளிச்ச போட்டோ ஷேர் பண்ணிட்டு ரெகார்ட் பிரேக்னு டைட்டில் போடுறது, ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கிற முள்ளுகாட்டுக்கு போய் நாலு போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிட்டு வைல்ட் டிராவல் வீக்லி ட்ரெக்கிங்னு கம்மென்ட் போடுறது, யாரவது ஒரு நடிகரோ நடிகையோ இவங்க ஏரியா பக்கம் ஷூட்டிங் வந்தாலோ இல்ல எதாவது கடை திறப்பு விழாவிற்கு வந்தாலோ அவங்க பின்னாடி எங்கேயாவது ஓரமா நின்னு இரு போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிட்டு 'மீ அண்ட் சூர்யா' னு கம்மென்ட் போடுறது இதெல்லாம் இந்த பசங்களோட சமீப கால சாதனைகள்...

      ஆனா சரவணன் இதுல எல்லாம் கொஞ்சம் டிப்பிரென்ட். அவன் பத்து போட்டோ எடுத்தா கூட போட்டோ சாப்ல வொர்க் பண்ணி ஒன்னோ, ரெண்டோ தான் அப்டேட் பண்ணுவான். அதுமட்டுமில்ல டெய்லி நாட்டில நடக்கிற பிரச்சனைகளை தவறாம ஸ்டேடஸ் அப்டேட்ல "இந்திய கறுப்பு பணம் இவ்வளவு இருக்கு மீட்க முடியுமா?" இப்புடி எதாவது கிரிட்டிசைஸ் பண்ணி அப்டேட்ஸ் போடுவான் .இவனோட எந்த ஸ்டேட்டஸ்க்கும் ஒரு கம்மென்ட் கூட வராது ஆனாலும் மனம் தளராம டெய்லி பல நல்ல விஷ்யங்க்கள அப்டேட் பண்ணிட்டே தான் இருப்பான்.



    இன்னைக்கும் அப்படி ஒரு அப்டேட் பண்ண வந்தா, அவன் கூட வேலை பார்க்கிற ஜான் சிஸ்டம் விடாம ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கான். ஒரு வழியா அவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி இடத்த பிடிச்சு அந்த சோசியல் நெட்வொர்க் வெப்சைட்டுக்குள்ள லாக் ஆண் பண்றான் சரவணன் வழக்கம் போல இவன் போட்ட ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு நோ கம்மென்ட்ஸ் ..


     ஆனா இவன் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தி "இன்று நான் சாம்பார் வைத்தேன்" அப்புடின்னு ஒரு அப்டேட் பண்ணிருக்கா, அதுக்கு 160 கம்மென்ட் வந்துருக்கு 65 லைக் விழுந்துருக்கு நொந்துட்டான் சரவணன்
    " சே யுஸ்லெஸ் யூத்ஸ் இதுக்கெல்லாம் ரிப்ளை பண்றாங்களே"னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு 161 ஆவது கம்மென்ட்டா ' கங்கிராட்ஸ்  மேம் ஐ டூ லவ் சாம்பார்'னு போட்டுட்டு அவன் ஹோம் பேஜுக்கு வர்றான். அதுக்குள்ள சரவணன் அந்த பொண்ணோட ஸ்டேட்டசுக்கு போட்ட கம்மென்ட்டுக்கும் ஐஞ்சு லைக் விழுந்துருக்கு.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் மூன்றாவது வாரம்-2011