சைதாப்பேட்டை பேருந்து
நிறுத்தம்..
இரவு 10.30 மணிக்கு மேல இருக்கலாம்...
அப்புறம் ஒரு மூணு நாலு கிலோமீட்டர் அந்த ஷேர்ஆட்டோ சென்னையோட இரவு காட்சிகளை அழகாக கடந்து போய்க்கிட்டிருந்தது. டிராபிக் ரொம்பவே கம்மியாயிருந்தது.சாலைகள்ல ஆளே இல்லாட்டாலும் ரெண்டு மூணு இடத்தில ஒரு அஞ்சு நிமிஷம் நிப்பாட்டி யாராவது வர்றாங்களானு பார்த்துகிட்டே தான் வண்டி ஒட்டினார்.அந்த ஷேர்ஆட்டோ டிரைவர்.பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு வாசலில சின்ன சின்ன இட்லி கடைகள் முளைத்திருந்தன.
நா ஸ்டீபன் அண்ணாவ திரும்பி பார்த்தேன் அவர் போன்ல பிஸியாயிருந்தாரு.
ஹிந்தியில சத்தமா எதோ ஒரு குரல் என் முன்னாடி இருந்த நாலுபேர்ல யாரோ பேசினாங்கனு மட்டும் புரிஞ்சுது.ஆனா யார் பேசினாங்க என்ன பேசினாங்கனு சத்தியமா தெரியல, டிரைவருக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவர் உடனே ஷேர்ஆட்டோவ நிப்பாட்டினார்.அந்த நாலு பேரும் இறங்க,அந்த இடத்துக்கு இப்ப ஒரே ஒரு தமிழ் பொண்ணு வந்து உட்காருறா... அந்த பொண்ணுங்க இறங்கவும் லேசா சோகமான என்னோட சக பயணிகளின் முகம் மீண்டும் சந்தோஷமாகுது.
ஆஹா! பொண்ணு தமிழ்னு எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறீங்களா? எனக்கு கொஞ்சம் கால் முட்டு நீளம். நான் என் சீட்ல உட்கார்ந்தாலே எதிர் சீட்ல உட்கார்ந்துருக்குறவங்களுக்கு இடிக்கும் அதான் "கொஞ்சம் தள்ளிக்கோங்கன்னு அந்த பொண்ணு என்ன பார்த்து சொன்னத வச்சு தான் கண்டுபிடிச்சேன். நானும் கொஞ்சம் தலைய தூக்கி அந்த பொண்ணோட முகத்த பார்த்தேன்.அந்த பொண்ணுக்கு ஒரு இருபத்து இரண்டு இல்ல இருபத்து மூணு வயசுக்குள்ள இருக்கும்.கண்ணெல்லாம் வீங்கி சின்ன சினுங்களோட ஜன்னல பார்த்து உட்கார்ந்துக்கிட்டா .
அப்ப நான் ஸ்டீபன்ன பார்த்து திரும்ப சரியா அவரும் என்ன பார்த்து திரும்ப நாங்க ரெண்டும் பேரும் ஒருத்தர ஒருத்தர பார்த்துக்கிட்டோம் எதுவும் பேசிக்காம எதிர் எதிரா திரும்பிக்கிட்டோம். கொஞ்சம் தூரம் ஆட்டோ நகருது எனக்கு லேசா பசி தூக்குது. மணி பதினொன்னு தாண்டி இருக்கும்.
எங்க எதிர புதுசா வந்து உட்கார்ந்திருக்கிற அந்த பொண்ணு ஏதோ இடம் சொல்லி அங்க ஆட்டோ நிக்கும்மானு எங்ககிட்ட கேட்டா,ஆமானு ஸ்டீபன் சொன்னாரு, பதில் கிடைச்ச உடனேதிரும்பவும் அந்த பொண்ணு ஜன்னல் பக்கம் திரும்பி உட்கார்ந்துகிச்சு.
அப்ப அந்த பொண்ணுக்கு ஒரு போஃன்கால் வருது அத அட்டன்ட் பண்ணின உடனே லேசா கண்ண துடைச்சிக்கிட்டு பேச ஆரம்பிக்குறா, "சொல்லு இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணின.... பொய் சொல்லாத நா பதினைஞ்சு நிமிஷமா அந்த ஓயின்ஷாப் வாசலில நின்னு உன்ன பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்.எனக்கு எல்லாம் தெரியும்னு கோபமா ஆட்டோல இருக்கிற எல்லாருக்கும் கேக்கிற மாதிரி பேசிட்டு அந்த பக்கம் பதில எதிர்பார்க்காம போன் கட் பண்ணிட்டு தலைய குனிஞ்சு அழ ஆரம்பிச்சுட்டா.அப்ப அந்த பொண்ண பார்த்து தண்ணி குடிக்கீறீங்களா மேம்னு கேட்டாரு ஸ்டீபன், குனிஞ்ச தலை நிமிராம தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு தொடர்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சு.
எனக்கு அந்த பொண்ணுகிட்ட என்னமோ கேக்கனும்னு தோனுச்சு.ஆனா வார்த்தை வரல ஒரு பெரிய அமைதி சுத்தி அங்கங்க பாக்கிற மாதிரி காட்டிக்கிட்டாலும் கடைசியில கண்ணு அந்த பொண்ணு பக்கமே போச்சு. இப்ப இராத்திரி பதினோரு முப்பது மணிக்கு மேல ஆயிருக்கும்.இந்நேரம் ஒரு பொண்ணு தனியா வர்றது சென்னையில சாதாரண விஷயம்னாலும் இப்படி அழுதுட்டே வர்றது பார்க்கிறதுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு.என்ன பிரச்சனையா இருக்கும் நான் மனசில நெனைச்சுது புரிஞ்ச மாதிரி பேசுறாரு ஸ்டீபன் "எதாவது லவ் மேட்டரா தான் இருக்கனும் அவ ஆளு தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேனு சொல்லியிருந்துருப்பான். இப்ப கையும்களவுமா மாட்டிக்கிட்டிருப்பான்.அதுதான் பிரச்சனையா இருக்கும்" அப்படினு சொல்லி முடிக்கிறாரு அப்ப அந்த பொண்ணு செல்போஃன்ல மறுபடியும் ரிங் அடிக்குது...
ஒரு நிமிஷம் போஃன் டிஸ்ப்ளேய பார்த்து யோசிக்கிற அந்த பொண்ணு அட்டென்ட் பண்ணுது "ஹலோ எனக்கு கால் பண்ணாதேன்னு சொன்னேன்ல இப்ப எதுக்கு திரும்பவும் கால் பண்ற அவ்வளோதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. நாளைக்கு பேப்பர்ல நா செத்து போயிட்டேன்னு போட்டோவோட நியுஸ் வரும் அத பார்த்து தெரிஞ்சிக்கோ" கத்திட்டு போஃன் கட் பண்ணிட்டா....
எனக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரி போட்டிருச்சு, ஏதோ விபரீதம் நடக்க போகுதோன்னு மனசு படபடனு அடிச்சுது.....
"ஹேய் நாளைக்கு பாரு,அவ ஆளுக்கிட்ட பேசிருவா ப்ரீத்தாவும் அடிக்கடி இப்படித்தான் சாகப்போறேனு சொல்லிக்கிட்டேயிருப்பா,என அவரது முன்னால் காதலியை பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லி முடித்தார் ஸ்டீபன். அவர் காதலிக்கிறத பார்த்துதான் நானெல்லாம் கல்யாணம்னா அது காதலிச்சு தான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்.ஆனா இப்ப அவர் காதல் முறிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆகிபோச்சு. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கு.ஆனா இவரு இன்னும் "போனால் போகட்டும் போடா பாட்டுல ஆரம்பிச்சு லேட்டஸ்ட் போ நீ போ வரைக்கும் அத்தனை காதல் பிரிவு பாடல்களையும் போட்டு போட்டு கேட்டுட்டே இருப்பார்.அவர் செட் பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணியும் இவர் இன்னும் கல்யாணமே பண்ணாம இருக்கிறாரு.அவர் அனுபவத்தில சொன்ன விஷயம் சரியா தான் இருக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்தாலும் அந்த பொண்ணு முகத்த பார்க்கும் போது மனசுகுள்ள லேசா கஷ்டமாவும்,பயமாவும் இருந்துச்சு...
திடீர்னு அந்த பொண்ணு டிரைவர் பக்கம் திரும்பி "அண்ணா சீக்கிரம் வண்டிய நிப்பாட்டுங்க நா இறங்கிக்கிறேன்". அப்படின்னு சொல்லி அவசரமா ஒரு இடத்தில இறங்குனா, எனக்கென்னமோ அவ இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு இறங்கிருக்குமோனு ஒரு சந்தேகம். ஆட்டோ கிளம்புது. நான் திரும்பி அந்த பொண்ணையே பார்த்துட்டிருந்தேன்.அவ ரோட்டில எங்க போகனு தெரியாம அப்படியே நிக்குறா மணி பண்ணிரெண்டு கிட்ட நெருங்கிட்டிருக்கு.அந்த ரோட்டில ஆள் நடமாட்டம் ரொம்ப கம்மியா தான் இருந்தது. என் கண்ணவிட்டு அந்த பொண்ணு மறையுற வரை நா பார்த்துக்கிட்டே இருந்தேன்...அப்படியே அசதியில கண்ணசந்து தூங்கிட்டேன்.
சில நிமிடங்கள் கடந்தது......
ஒரு கை என் முதுகுல தட்டுது,முழிச்சு பார்த்தா சுத்தியும் "பாம் பாம்"னு பயங்கர சத்ததோட நெறைய வாகனங்கள் போகுது ஒரே புகைவாசனை கோயம்பேடு வாசலில இறங்குறோம். நாங்க இறங்கினதும் , "சாப்பிட வாரியாடான்னு கேட்டாரு" ஸ்டீபன் "பசியில்லண்ணா, நீங்க சாப்பிடுங்க நா கிளம்புறேன்" என்று அவருக்கு பை சொல்லிட்டு நான் அங்க இருந்து நகர்ந்து வெளியூர் பஸ் நிற்குற பகுதிக்கு வந்தேன். அந்த பொண்ணோட அழுகை சத்தம் மட்டும் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்தது .
நா ஆந்திரா ரூட்டில தமிழ்நாடு எல்லையில உள்ள ஒரு கிராமத்தில நடக்க இருக்கிற கல்யாணத்துக்கு போகணும்.அன்னைக்கு சாயங்காலம் கல்யாண ரிசெப்சன் முடிஞ்சிருந்தது. மறுநாள் திங்கள் கிழமை காலையில கல்யாணம். மாப்பிள்ளை என் நண்பன் அவனுக்கு நா ரிசெப்சனுக்கு வராததுல கொஞ்சம் வருத்தம்தான்.எங்க ஊரில எல்லாம் கல்யானம்னா தாலி கட்டறப்பதான் போவாங்க இங்கதான் முந்தினநாள் ரிசெப்சன்லையே எல்லாரும் வந்துட்டு போயிடறாங்க.ஆனா நா தான் பிடிவாதமா முகூர்த்ததுக்கு தான் வருவேன்னு சொல்லி அன்னைக்கு அவ்ளோ லேட்டா தான் போனேன். காலைல ஆறு மணிலேயிருந்து ஏழு மணி வரைக்கும் முகூர்த்தம் நா போகவேண்டிய ஊருக்கு பஸ் ஒண்ணுமே இல்ல.கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு. எனக்கு அந்த பொண்ணு ஞாபகமாவே இருந்தது என்னவாயிருக்கும்,வீட்டுக்கு போயிருக்குமா தற்கொலை எதாவது? ச்சீ ச்சீ அப்படியெல்லாம் எதுவும் இருக்காதுனு நானே என் மனச தேத்திக்கிட்டு ரொம்ப பஸ்சுக்கு அப்புறம் வந்த ஒரு திருப்பதி பஸ்ல ஏறினேன். பஸ் மெல்ல கிளம்புச்சு டிக்கெட் எடுத்துட்டு நின்னுக்கிட்டே போய்கிட்டிருந்தேன்.
லேசா கண்ணக்கட்டுச்சு ,எல்லாம் மறையுது, திடீர்னு ஒரு போன் சார் ரஜினி வந்துட்டாரு அந்த மேனேஜர் என்னை கூப்பிட்டு சொன்னாரு, அம்மாவோட குரல் இட்லி ரெடியா இருக்குடா சாப்பிட்டுட்டு போ,ஹே பார்த்து போ இடிச்சுற போகுதுடா,சொல்லி முடிப்பதற்குள் எதிரே உள்ள மரத்தின் மீது தூக்கி வீசப்பட்டு அலறுறேன்,சம்பந்த சம்பந்தமில்லமா என்னலாமோ காட்சிகள் தோணுது. என் முன்னாடி அந்த பொண்ணு நிக்கிறா.ஒரு பயங்கர சத்ததோட திடுக்கிட்டு முழிச்சா பஸ்ல என்னை தவிர எல்லாரும் நல்லா தூங்கிட்டிருக்காங்க, நம்ம நினைவு பதிவுகள் தான் கனவுகள்னாலும், நம்ம ஒவ்வொரு கனவுகளையும் சரியா கோர்வையாக்கினா ஒரு திரைப்படத்துக்கு அருமையான திரைக்கதை பண்ணிரலாம்பா, நல்லவேளை என் சத்தத்தில யாரும் தூக்கம் கலைஞ்சு முழிக்கல,அப்புறம் எனக்கு தூக்கமே வரல அரைமணிநேரம் அப்படியே போச்சு நா இறங்க வேண்டிய ஸ்டாப்பும் வந்துடுச்சு.இறங்கி மண்டபத்த நோக்கி கொஞ்சதூரம் நடந்துருப்பேன்.
அப்ப அங்க நின்னுக்கிட்டிருந்த ஹைவே பேட்ரோல் வண்டி முன்னாடி காத்துகிட்டிருக்கிற போலிஸ்காரங்க என்ன மறிச்சாங்க "சார் என்னவிஷயம் எங்க போறீங்க என்கிற வழக்கமான விசாரிப்புகள் தான்.நா என் ஆபிஸ் ஐ.டி கார்டு காட்டி நண்பன் கல்யாணத்துக்கு வந்துருக்கேன்ங்கிறதா புரிய வச்சுட்டு இருந்தேன்.அப்ப அந்த வண்டியில இருந்த ஓயர்லஸ்ல பீப் ஒலிக்கு பின்னாடி ஒரு குரல் "வடபழனி பக்கம் ஒரு பொண்ணு டெத் ஓவர்...... சூசைடு ஒரு செல்போன் மட்டும் இருக்கு ஓவர்..." என தகவல வர எனக்கு பதட்டம் அதிகமாகிறது. என்கிட்ட நிக்கிற போலிஸ்காரரிடம் அந்த பொண்ண பத்தி விளக்கம் கேட்கலாம் என நினைக்கும் போதே என் விவரங்களை சரிபார்த்த எஸ்.ஐ. "தம்பி நீங்க வெளியில ரொம்ப நேரம் நிக்காம மண்டபம் போய் சேருங்க என்று சொல்லிவிட்டு மற்ற போலீசாரோடு வண்டியை கிளப்பி சென்றார்.
எனக்கு ஒண்ணுமே ஓடல,ஸ்டீபனுக்கு போன் அடிக்கிறேன் அவர் என் கால் அட்டென்ட் பண்ணல,ரொம்ப நேரம் அந்த தேசிய நெடுஞ்சாலையில் நின்று வானத்தையே வெறிச்சு பார்த்துக்கிட்டிருந்தேன், "எல்லா காதலியும் காதலனை ஏமாத்துறதில்ல, எல்லா காதலனும் காதலிய ஏமாத்துறதில்ல அவர்களுக்குள்ள அப்பப்ப சில சண்டைகள் வந்து போகும்.ஆனா இப்படி சின்ன விஷயத்துக்கு போய் உயிரை விட்டுட்டுச்சே அந்த பொண்ணு, சென்னைதான் சொந்த ஊரா? இல்ல வேற எந்த ஊரோ? சென்னைக்கு படிக்க வந்துருப்பாளா? வேலைக்காக வந்தவளா? அவ அப்பா அம்மாக்கு இந்த தகவல் தெரிஞ்சா என்னாவங்க? எனக்கு ஒரே குழப்பம், காதலில் நேர்மை எவ்வளவு முக்கியம்.அந்த பையனின் நேர்மையின்மை தான் இந்த பொண்ணோட உயிரை பறிச்சுடுச்சு" எவ்வளவோ கேள்விகள், விமர்சனங்கள் என்னை துளைத்தெடுக்க மௌனமாக நடந்தே கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தேன்.சிலமணி நேரங்கள் ஓடிபோச்சு.
மணி அதிகாலை மூன்று மணிக்கு மேல இருக்கும் கண்ணை மூடினா அந்த பொண்ணோட முகம் தான் என் நினைவுக்கு வந்தது." ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களின் தற்கொலை பாறைகளில், குளங்களில்,கிணறுகளில் ஆறுகளில் விழுந்து இறந்தவர்கள், மரங்களில் வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கியவர்கள், பாகற்காய் சாப்பிடவே கசப்பு என ஒதுக்கியவர்கள் எல்லாம் எலி மருந்தையும் இன்னும் பிற வஸ்துக்களையும் உண்டு உயிர்விட்டவர்கள்,தீக்குளித்து இறந்தவர்கள் என் பக்கத்து வீட்டில்,அடுத்து தெருவில்,ஊரில் இன்னும் எங்கெங்கோ நடந்த விபரீதங்களை பலதடவை கேள்விப்படும்போது, எங்கோ பேப்பரில் இதுபோன்ற இறப்பு செய்திகளை அடிக்கடி படிக்கும்போதெல்லாம் மிக சாதரனமாய் அதை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் அன்னைக்கு என்னால ஏனோ முடியல.
மறுநாள் காலை விடிந்தது நல்லபடியாக திருமணம் முடிந்து நான் ஊருக்கு கிளம்ப தயாரானேன்.பஸ் ஏறி கோயம்பேடு வந்து சேர்ந்தேன். சாப்பாடு இறங்கவே இல்ல தண்ணீர் மட்டும் இரண்டு மூன்று அதற்கும் மேல் பாட்டில் பாட்டிலாக வாங்கி குடித்து காலி செய்து கொண்டேயிருந்தேன். அன்று காலை செய்தித்தாள் நான்கைந்தை வாங்கி படித்தேன். எல்லாவற்றிலும் அந்த பெண்ணின் தற்கொலை செய்தி பெரியதாய் வந்திருந்தது.பாலத்தில் இருந்து குதித்து இறந்திருந்தது என்றும் மூளை சட்டினி ரத்த வெள்ளம் என வார்த்தைகளில் விளையாண்டிருந்தார்கள். புகைப்படத்தில் முகம் சரியாக தெரியவில்லை.அந்த பெண்ணின் செல்போனில் சிம்கார்ட் எதுவும் இல்லாததால் உறவுகளுக்கு தகவல் சொல்லமுடியவில்லை. என்ற செய்தி என் இதயத்தை மேலும் கணமாக்கியது....
நான்குமணிநேரம் பேருந்து நிலையத்திலேயே கழித்தேன், எங்கேயும் செல்லவில்லை, எனக்கு வந்த எந்த செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. ஸ்டீபன்,ஆபிஸ் கால், அவளிடமிருந்து மட்டும் இருபது மிஸ்டு கால்கள். மாலை ஐந்து மணி சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் இரு பஸ்கள் என் முன். அன்று வார நாள் என்பதால் கூட்டம் குறைவு தான், அதான் இரண்டு பேருந்து கண்டக்டர்களும் கூவி கூவி அனைவரையும் அழைத்து கொண்டிருந்தார்கள்.நான் முதலில் டிக்கெட் வாங்கி பஸ்சில் ஏறி உட்கார்ந்தேன்.வலது பக்கம் இரண்டாவது ஜன்னல் ஓர சீட். பஸ்ஸின் உள்ளே இருந்த வெறுமையை பார்க்க பிடிக்காமல் நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியில் வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.சில நிமிடங்களில் ஒரு பத்து பதினைந்து ஆட்களோடு அந்த அரசு பஸ் அதன் பயணத்தை தொடங்கியது,
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அந்த பஸ் ஒரு டிராஃபிக் சிக்னலில் நின்றது.அப்ப நா பார்த்த காட்சி எனக்கு ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துச்சு சிரிப்பு,அழுகை அதெல்லாம் கடந்து ஒரு மாதிரியான மனநிலை, நா பார்த்தது அந்த பொண்ண...
அந்த பொண்ணோட பெயர் கூட தெரியாது ஆனா அவளோட உருவம் மட்டும் என் மனசில ஆழமா பதிஞ்சுருந்தது.எனக்கு அப்பதான் நிம்மதியா இருந்தது.ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு உணர்வு சொல்லமுடியாத சந்தோஷம். கடவுளே நன்றி,அப்படி இப்படின்னு ஒவ்வொன்னா யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது மனசுக்குள்ள எங்கேயோ எப்பயோ படிச்ச ஒரு வாசகம் மட்டும் திரும்ப திரும்ப வந்து போனது "தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ஏன் வாழ்ந்துபார்க்க கூடாது"...
இரவு 10.30 மணிக்கு மேல இருக்கலாம்...
அந்த பக்கம் இந்த பக்கம் ஒரு நாற்பது அம்பது கடையில வேலை பார்க்கிற நபர்கள் ரோட்டில நிக்கிற ஆட்டோ டிரைவர்கள் கடைய மூட தயாராகிட்டிருக்கிற சாலையோர வியாபாரிகள்,அவரவர் பகுதிக்கு கடைசி பஸ்ஸுக்காக காத்திருக்கிற பயணிகளோட நான்.எனக்கு வயசு 23 என் நண்பர் ஸ்டீபன் வயசு 31...
இரவு பூலோக பிரமாண்டங்களின் பகல் பிம்பங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க தொடங்கியிருந்தது.
நான் தான் முதல்ல பேச்ச தொடங்கினேன் "என்ன ஸ்டீபன் அண்ணா நேரம் போனதே தெரியல,என்னதான் நான் சென்னையில பிறந்திருந்தாலும் வளர்ந்ததெல்லாம் ஊர்ல தான். அப்பப்ப இங்க வந்து போயிருந்தாலும் இன்னைக்கு சென்னையில எனக்கு ஒரு வித்தியாசமான நாள், மறக்க முடியாத நாள் இதுக்கெல்லாம் நான் உங்களுக்குதான் நன்றி சொல்லணும் தேங்ஸ்னா" ரொம்ப சந்தோஷமா பேசி முடிச்சேன்.ஆனா அவர் கவனமெல்லாம் வேற பக்கம் இருந்துச்சு..
அதுக்குள்ள என் செல்போனுக்கு அவகிட்ட இருந்து ஒரு கால் வந்துடுச்சு.."உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி" சைனா செட் ரிங் டோன் ஒரு நிமிஷம் அந்த இடத்தில இருக்கிற எல்லாரையும் திரும்ப வச்சுடுச்சு .சுத்தி லுக் விட்டுட்டு சிரிச்சுக்கிட்டே போஃன் அட்டென்ட் பண்ணினேன்...
ஓ! அவ யாருன்னு உங்ககிட்ட சொல்லவே இல்லலே.அவதான் என்னோட வைஃப் இன்னும் கல்யாணமெல்லாம் ஆகல. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு அப்படி சொன்னேன். நாங்க எட்டு மாசமா லவ் பண்ணிக்கிட்டிருக்கோம். பட் நாங்க அப்பத்தான் இரண்டாவது தடவை
சந்திச்சோம். நேத்தே சென்னை வந்துட்டேன் பிரெண்ட்ஸ் கூட அவளையும் கூட்டிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டேன்.
அன்னைக்கு இரண்டாவது நாள் பர்ஸ் கொஞ்சம் வீக்கா தான் இருந்துச்சு...
என்ன பண்ணலாம்னு யோசிக்க டைம் இல்ல, என் பிரெண்ட் ஸ்டீபன் இன்னிக்கு டே ஸ்பான்சர் பண்ணிட்டார். அவரோட புண்ணியத்தில வழக்கமா வெளியில இருந்தே வேடிக்கை பார்த்த பல இடங்களை உள்ள போய் சுத்தி பார்த்தோம்.அப்புறம் அவளோட செலவில நெறைய பர்சேஸ் பண்ணி முடிச்சு எல்லா இடமும் சுத்திட்டு இப்ப தான் இங்க வந்தோம். அவள அவளோட ஹாஸ்ட்டல்ல டிராப் பண்ணிட்டு நாங்க வந்த டாக்ஸிய கட் பண்ணிட்டு நடந்தே பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.அன்னைக்கு காலைலயிருந்தே மனசு சந்தோஷமா இருந்ததால பசியும் தெரியல, நேரம் போனதும் தெரியல...
என்ன பண்ணலாம்னு யோசிக்க டைம் இல்ல, என் பிரெண்ட் ஸ்டீபன் இன்னிக்கு டே ஸ்பான்சர் பண்ணிட்டார். அவரோட புண்ணியத்தில வழக்கமா வெளியில இருந்தே வேடிக்கை பார்த்த பல இடங்களை உள்ள போய் சுத்தி பார்த்தோம்.அப்புறம் அவளோட செலவில நெறைய பர்சேஸ் பண்ணி முடிச்சு எல்லா இடமும் சுத்திட்டு இப்ப தான் இங்க வந்தோம். அவள அவளோட ஹாஸ்ட்டல்ல டிராப் பண்ணிட்டு நாங்க வந்த டாக்ஸிய கட் பண்ணிட்டு நடந்தே பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.அன்னைக்கு காலைலயிருந்தே மனசு சந்தோஷமா இருந்ததால பசியும் தெரியல, நேரம் போனதும் தெரியல...
நாங்க அந்த பஸ் ஸ்டாண்ட்ல ஒரு ஓரமா நின்னுகிட்டிருந்தோம் "டேய் ராம் என்னடா இவ்ளோ நேரம் பார்த்து பேசிட்டு தான வந்தீங்க அதுக்குள்ள போஃன்ல என்ன பேச்சு.முதல்ல போஃன்ன கட் பண்ணு. அப்புறம் பேசிக்கலாம், போய் கோயம்பேட்டுக்கு பஸ் இருக்கானு கேட்டுட்டு வா" கொஞ்சம் கோபமாவே சொன்னார் ஸ்டீபன்...
நானும் அங்க இங்க நின்னவங்கள்ல ஒவ்வொருத்தரையா பார்த்து கேக்க ஆரம்பிச்சேன்.
தெரியல பாஸ்,
நான் இந்த ஊர் இல்ல, வேற யார்கிட்டையாவது கேளுங்க தம்பி...,
இருக்கலாம் இல்லாமலும் போகலாம் சும்மா நேரங்கெட்ட நேரத்தில.....,
கடைசி ஆள் தலைய மட்டும்தான் ஆட்டினார்....
இப்படி பல பேர்கிட்ட விசாரிச்சுக்கிட்டு வரும் போதே என் பின்னாடி வேகமா இடிக்கிற மாதிரி வந்து சடன் ப்ரேக் போட்ட ஷேர்ஆட்டோ டிரைவர், நான் அதிர்ச்சி ஆகி நின்னத கூட கவனிக்காம "கோயம்பேடு கோயம்பேடு ஏறுங்க ஏறுங்கனு குரல் குடுத்தாரு"
ஸ்டீபனுக்கு இப்ப தான் லேசா கோபம் குறையுது. "சரி ஏறுடா ராம்னு" சொல்லிட்டு அவரும் ஆட்டோக்குள்ள ஏறினார். .
நாங்க ஏறின பின்னாடி என்னோட பின் பக்கமிருந்த சீட்டில நாலு பசங்க முன்னாடி டிரைவர் பக்கம் ரெண்டு பசங்க, என் பக்கத்தில ஒரு பையன் உள்ள ஏறி உட்கார்ந்துட்டாங்க.ஆனா யார் முகத்திலையும் ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல.மணி கிட்டத்தட்ட 10.45 அந்த ஷேர்ஆட்டோ மெல்ல கிளம்ப ஆரம்பிக்குது.என் எதிர காலியா இருந்த சீட்டில ஒரு மூணு நார்த் இந்தியன் பொண்ணுங்க மாடர்ன் டிரெஸ்ல வந்து உட்காருறாங்க கூட ஒரு நார்த் இந்தியன் பையன் நல்ல குண்டா வெள்ளையா ஹிந்தி காமெடி ஆக்ட்டர் மாதிரி இருந்தான்.அந்த பொண்ணுங்க பெர்சனாலிட்டிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல, ஆனாலும் ஆட்டோ கிளம்பினதுலேர்ந்து அவங்க நாலு பேரும் ஹிந்தியில ஜாலியா ஏதேதோ சிரிச்சு பேசிக்கிட்டே வந்தாங்க.நான் உட்பட சுத்தி இருக்கிற யாருக்குமே அவங்க பேசுறது என்னனு புரியலனாலும் என்ன தவிர எல்லாரும் சந்தோஷமா அவங்க நாலு பேரையும் பார்த்துக்கிட்டே ஒரு சின்ன சிரிப்போடையே வந்தாங்க.
அப்புறம் ஒரு மூணு நாலு கிலோமீட்டர் அந்த ஷேர்ஆட்டோ சென்னையோட இரவு காட்சிகளை அழகாக கடந்து போய்க்கிட்டிருந்தது. டிராபிக் ரொம்பவே கம்மியாயிருந்தது.சாலைகள்ல ஆளே இல்லாட்டாலும் ரெண்டு மூணு இடத்தில ஒரு அஞ்சு நிமிஷம் நிப்பாட்டி யாராவது வர்றாங்களானு பார்த்துகிட்டே தான் வண்டி ஒட்டினார்.அந்த ஷேர்ஆட்டோ டிரைவர்.பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு வாசலில சின்ன சின்ன இட்லி கடைகள் முளைத்திருந்தன.
நா ஸ்டீபன் அண்ணாவ திரும்பி பார்த்தேன் அவர் போன்ல பிஸியாயிருந்தாரு.
ஹிந்தியில சத்தமா எதோ ஒரு குரல் என் முன்னாடி இருந்த நாலுபேர்ல யாரோ பேசினாங்கனு மட்டும் புரிஞ்சுது.ஆனா யார் பேசினாங்க என்ன பேசினாங்கனு சத்தியமா தெரியல, டிரைவருக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவர் உடனே ஷேர்ஆட்டோவ நிப்பாட்டினார்.அந்த நாலு பேரும் இறங்க,அந்த இடத்துக்கு இப்ப ஒரே ஒரு தமிழ் பொண்ணு வந்து உட்காருறா... அந்த பொண்ணுங்க இறங்கவும் லேசா சோகமான என்னோட சக பயணிகளின் முகம் மீண்டும் சந்தோஷமாகுது.
ஆஹா! பொண்ணு தமிழ்னு எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறீங்களா? எனக்கு கொஞ்சம் கால் முட்டு நீளம். நான் என் சீட்ல உட்கார்ந்தாலே எதிர் சீட்ல உட்கார்ந்துருக்குறவங்களுக்கு இடிக்கும் அதான் "கொஞ்சம் தள்ளிக்கோங்கன்னு அந்த பொண்ணு என்ன பார்த்து சொன்னத வச்சு தான் கண்டுபிடிச்சேன். நானும் கொஞ்சம் தலைய தூக்கி அந்த பொண்ணோட முகத்த பார்த்தேன்.அந்த பொண்ணுக்கு ஒரு இருபத்து இரண்டு இல்ல இருபத்து மூணு வயசுக்குள்ள இருக்கும்.கண்ணெல்லாம் வீங்கி சின்ன சினுங்களோட ஜன்னல பார்த்து உட்கார்ந்துக்கிட்டா .
அப்ப நான் ஸ்டீபன்ன பார்த்து திரும்ப சரியா அவரும் என்ன பார்த்து திரும்ப நாங்க ரெண்டும் பேரும் ஒருத்தர ஒருத்தர பார்த்துக்கிட்டோம் எதுவும் பேசிக்காம எதிர் எதிரா திரும்பிக்கிட்டோம். கொஞ்சம் தூரம் ஆட்டோ நகருது எனக்கு லேசா பசி தூக்குது. மணி பதினொன்னு தாண்டி இருக்கும்.
எங்க எதிர புதுசா வந்து உட்கார்ந்திருக்கிற அந்த பொண்ணு ஏதோ இடம் சொல்லி அங்க ஆட்டோ நிக்கும்மானு எங்ககிட்ட கேட்டா,ஆமானு ஸ்டீபன் சொன்னாரு, பதில் கிடைச்ச உடனேதிரும்பவும் அந்த பொண்ணு ஜன்னல் பக்கம் திரும்பி உட்கார்ந்துகிச்சு.
அப்ப அந்த பொண்ணுக்கு ஒரு போஃன்கால் வருது அத அட்டன்ட் பண்ணின உடனே லேசா கண்ண துடைச்சிக்கிட்டு பேச ஆரம்பிக்குறா, "சொல்லு இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணின.... பொய் சொல்லாத நா பதினைஞ்சு நிமிஷமா அந்த ஓயின்ஷாப் வாசலில நின்னு உன்ன பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்.எனக்கு எல்லாம் தெரியும்னு கோபமா ஆட்டோல இருக்கிற எல்லாருக்கும் கேக்கிற மாதிரி பேசிட்டு அந்த பக்கம் பதில எதிர்பார்க்காம போன் கட் பண்ணிட்டு தலைய குனிஞ்சு அழ ஆரம்பிச்சுட்டா.அப்ப அந்த பொண்ண பார்த்து தண்ணி குடிக்கீறீங்களா மேம்னு கேட்டாரு ஸ்டீபன், குனிஞ்ச தலை நிமிராம தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு தொடர்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சு.
எனக்கு அந்த பொண்ணுகிட்ட என்னமோ கேக்கனும்னு தோனுச்சு.ஆனா வார்த்தை வரல ஒரு பெரிய அமைதி சுத்தி அங்கங்க பாக்கிற மாதிரி காட்டிக்கிட்டாலும் கடைசியில கண்ணு அந்த பொண்ணு பக்கமே போச்சு. இப்ப இராத்திரி பதினோரு முப்பது மணிக்கு மேல ஆயிருக்கும்.இந்நேரம் ஒரு பொண்ணு தனியா வர்றது சென்னையில சாதாரண விஷயம்னாலும் இப்படி அழுதுட்டே வர்றது பார்க்கிறதுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு.என்ன பிரச்சனையா இருக்கும் நான் மனசில நெனைச்சுது புரிஞ்ச மாதிரி பேசுறாரு ஸ்டீபன் "எதாவது லவ் மேட்டரா தான் இருக்கனும் அவ ஆளு தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேனு சொல்லியிருந்துருப்பான். இப்ப கையும்களவுமா மாட்டிக்கிட்டிருப்பான்.அதுதான் பிரச்சனையா இருக்கும்" அப்படினு சொல்லி முடிக்கிறாரு அப்ப அந்த பொண்ணு செல்போஃன்ல மறுபடியும் ரிங் அடிக்குது...
ஒரு நிமிஷம் போஃன் டிஸ்ப்ளேய பார்த்து யோசிக்கிற அந்த பொண்ணு அட்டென்ட் பண்ணுது "ஹலோ எனக்கு கால் பண்ணாதேன்னு சொன்னேன்ல இப்ப எதுக்கு திரும்பவும் கால் பண்ற அவ்வளோதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. நாளைக்கு பேப்பர்ல நா செத்து போயிட்டேன்னு போட்டோவோட நியுஸ் வரும் அத பார்த்து தெரிஞ்சிக்கோ" கத்திட்டு போஃன் கட் பண்ணிட்டா....
எனக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரி போட்டிருச்சு, ஏதோ விபரீதம் நடக்க போகுதோன்னு மனசு படபடனு அடிச்சுது.....
"ஹேய் நாளைக்கு பாரு,அவ ஆளுக்கிட்ட பேசிருவா ப்ரீத்தாவும் அடிக்கடி இப்படித்தான் சாகப்போறேனு சொல்லிக்கிட்டேயிருப்பா,என அவரது முன்னால் காதலியை பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லி முடித்தார் ஸ்டீபன். அவர் காதலிக்கிறத பார்த்துதான் நானெல்லாம் கல்யாணம்னா அது காதலிச்சு தான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்.ஆனா இப்ப அவர் காதல் முறிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆகிபோச்சு. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கு.ஆனா இவரு இன்னும் "போனால் போகட்டும் போடா பாட்டுல ஆரம்பிச்சு லேட்டஸ்ட் போ நீ போ வரைக்கும் அத்தனை காதல் பிரிவு பாடல்களையும் போட்டு போட்டு கேட்டுட்டே இருப்பார்.அவர் செட் பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணியும் இவர் இன்னும் கல்யாணமே பண்ணாம இருக்கிறாரு.அவர் அனுபவத்தில சொன்ன விஷயம் சரியா தான் இருக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்தாலும் அந்த பொண்ணு முகத்த பார்க்கும் போது மனசுகுள்ள லேசா கஷ்டமாவும்,பயமாவும் இருந்துச்சு...
திடீர்னு அந்த பொண்ணு டிரைவர் பக்கம் திரும்பி "அண்ணா சீக்கிரம் வண்டிய நிப்பாட்டுங்க நா இறங்கிக்கிறேன்". அப்படின்னு சொல்லி அவசரமா ஒரு இடத்தில இறங்குனா, எனக்கென்னமோ அவ இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு இறங்கிருக்குமோனு ஒரு சந்தேகம். ஆட்டோ கிளம்புது. நான் திரும்பி அந்த பொண்ணையே பார்த்துட்டிருந்தேன்.அவ ரோட்டில எங்க போகனு தெரியாம அப்படியே நிக்குறா மணி பண்ணிரெண்டு கிட்ட நெருங்கிட்டிருக்கு.அந்த ரோட்டில ஆள் நடமாட்டம் ரொம்ப கம்மியா தான் இருந்தது. என் கண்ணவிட்டு அந்த பொண்ணு மறையுற வரை நா பார்த்துக்கிட்டே இருந்தேன்...அப்படியே அசதியில கண்ணசந்து தூங்கிட்டேன்.
சில நிமிடங்கள் கடந்தது......
ஒரு கை என் முதுகுல தட்டுது,முழிச்சு பார்த்தா சுத்தியும் "பாம் பாம்"னு பயங்கர சத்ததோட நெறைய வாகனங்கள் போகுது ஒரே புகைவாசனை கோயம்பேடு வாசலில இறங்குறோம். நாங்க இறங்கினதும் , "சாப்பிட வாரியாடான்னு கேட்டாரு" ஸ்டீபன் "பசியில்லண்ணா, நீங்க சாப்பிடுங்க நா கிளம்புறேன்" என்று அவருக்கு பை சொல்லிட்டு நான் அங்க இருந்து நகர்ந்து வெளியூர் பஸ் நிற்குற பகுதிக்கு வந்தேன். அந்த பொண்ணோட அழுகை சத்தம் மட்டும் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்தது .
நா ஆந்திரா ரூட்டில தமிழ்நாடு எல்லையில உள்ள ஒரு கிராமத்தில நடக்க இருக்கிற கல்யாணத்துக்கு போகணும்.அன்னைக்கு சாயங்காலம் கல்யாண ரிசெப்சன் முடிஞ்சிருந்தது. மறுநாள் திங்கள் கிழமை காலையில கல்யாணம். மாப்பிள்ளை என் நண்பன் அவனுக்கு நா ரிசெப்சனுக்கு வராததுல கொஞ்சம் வருத்தம்தான்.எங்க ஊரில எல்லாம் கல்யானம்னா தாலி கட்டறப்பதான் போவாங்க இங்கதான் முந்தினநாள் ரிசெப்சன்லையே எல்லாரும் வந்துட்டு போயிடறாங்க.ஆனா நா தான் பிடிவாதமா முகூர்த்ததுக்கு தான் வருவேன்னு சொல்லி அன்னைக்கு அவ்ளோ லேட்டா தான் போனேன். காலைல ஆறு மணிலேயிருந்து ஏழு மணி வரைக்கும் முகூர்த்தம் நா போகவேண்டிய ஊருக்கு பஸ் ஒண்ணுமே இல்ல.கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு. எனக்கு அந்த பொண்ணு ஞாபகமாவே இருந்தது என்னவாயிருக்கும்,வீட்டுக்கு போயிருக்குமா தற்கொலை எதாவது? ச்சீ ச்சீ அப்படியெல்லாம் எதுவும் இருக்காதுனு நானே என் மனச தேத்திக்கிட்டு ரொம்ப பஸ்சுக்கு அப்புறம் வந்த ஒரு திருப்பதி பஸ்ல ஏறினேன். பஸ் மெல்ல கிளம்புச்சு டிக்கெட் எடுத்துட்டு நின்னுக்கிட்டே போய்கிட்டிருந்தேன்.
லேசா கண்ணக்கட்டுச்சு ,எல்லாம் மறையுது, திடீர்னு ஒரு போன் சார் ரஜினி வந்துட்டாரு அந்த மேனேஜர் என்னை கூப்பிட்டு சொன்னாரு, அம்மாவோட குரல் இட்லி ரெடியா இருக்குடா சாப்பிட்டுட்டு போ,ஹே பார்த்து போ இடிச்சுற போகுதுடா,சொல்லி முடிப்பதற்குள் எதிரே உள்ள மரத்தின் மீது தூக்கி வீசப்பட்டு அலறுறேன்,சம்பந்த சம்பந்தமில்லமா என்னலாமோ காட்சிகள் தோணுது. என் முன்னாடி அந்த பொண்ணு நிக்கிறா.ஒரு பயங்கர சத்ததோட திடுக்கிட்டு முழிச்சா பஸ்ல என்னை தவிர எல்லாரும் நல்லா தூங்கிட்டிருக்காங்க, நம்ம நினைவு பதிவுகள் தான் கனவுகள்னாலும், நம்ம ஒவ்வொரு கனவுகளையும் சரியா கோர்வையாக்கினா ஒரு திரைப்படத்துக்கு அருமையான திரைக்கதை பண்ணிரலாம்பா, நல்லவேளை என் சத்தத்தில யாரும் தூக்கம் கலைஞ்சு முழிக்கல,அப்புறம் எனக்கு தூக்கமே வரல அரைமணிநேரம் அப்படியே போச்சு நா இறங்க வேண்டிய ஸ்டாப்பும் வந்துடுச்சு.இறங்கி மண்டபத்த நோக்கி கொஞ்சதூரம் நடந்துருப்பேன்.
அப்ப அங்க நின்னுக்கிட்டிருந்த ஹைவே பேட்ரோல் வண்டி முன்னாடி காத்துகிட்டிருக்கிற போலிஸ்காரங்க என்ன மறிச்சாங்க "சார் என்னவிஷயம் எங்க போறீங்க என்கிற வழக்கமான விசாரிப்புகள் தான்.நா என் ஆபிஸ் ஐ.டி கார்டு காட்டி நண்பன் கல்யாணத்துக்கு வந்துருக்கேன்ங்கிறதா புரிய வச்சுட்டு இருந்தேன்.அப்ப அந்த வண்டியில இருந்த ஓயர்லஸ்ல பீப் ஒலிக்கு பின்னாடி ஒரு குரல் "வடபழனி பக்கம் ஒரு பொண்ணு டெத் ஓவர்...... சூசைடு ஒரு செல்போன் மட்டும் இருக்கு ஓவர்..." என தகவல வர எனக்கு பதட்டம் அதிகமாகிறது. என்கிட்ட நிக்கிற போலிஸ்காரரிடம் அந்த பொண்ண பத்தி விளக்கம் கேட்கலாம் என நினைக்கும் போதே என் விவரங்களை சரிபார்த்த எஸ்.ஐ. "தம்பி நீங்க வெளியில ரொம்ப நேரம் நிக்காம மண்டபம் போய் சேருங்க என்று சொல்லிவிட்டு மற்ற போலீசாரோடு வண்டியை கிளப்பி சென்றார்.
எனக்கு ஒண்ணுமே ஓடல,ஸ்டீபனுக்கு போன் அடிக்கிறேன் அவர் என் கால் அட்டென்ட் பண்ணல,ரொம்ப நேரம் அந்த தேசிய நெடுஞ்சாலையில் நின்று வானத்தையே வெறிச்சு பார்த்துக்கிட்டிருந்தேன், "எல்லா காதலியும் காதலனை ஏமாத்துறதில்ல, எல்லா காதலனும் காதலிய ஏமாத்துறதில்ல அவர்களுக்குள்ள அப்பப்ப சில சண்டைகள் வந்து போகும்.ஆனா இப்படி சின்ன விஷயத்துக்கு போய் உயிரை விட்டுட்டுச்சே அந்த பொண்ணு, சென்னைதான் சொந்த ஊரா? இல்ல வேற எந்த ஊரோ? சென்னைக்கு படிக்க வந்துருப்பாளா? வேலைக்காக வந்தவளா? அவ அப்பா அம்மாக்கு இந்த தகவல் தெரிஞ்சா என்னாவங்க? எனக்கு ஒரே குழப்பம், காதலில் நேர்மை எவ்வளவு முக்கியம்.அந்த பையனின் நேர்மையின்மை தான் இந்த பொண்ணோட உயிரை பறிச்சுடுச்சு" எவ்வளவோ கேள்விகள், விமர்சனங்கள் என்னை துளைத்தெடுக்க மௌனமாக நடந்தே கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தேன்.சிலமணி நேரங்கள் ஓடிபோச்சு.
மணி அதிகாலை மூன்று மணிக்கு மேல இருக்கும் கண்ணை மூடினா அந்த பொண்ணோட முகம் தான் என் நினைவுக்கு வந்தது." ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களின் தற்கொலை பாறைகளில், குளங்களில்,கிணறுகளில் ஆறுகளில் விழுந்து இறந்தவர்கள், மரங்களில் வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கியவர்கள், பாகற்காய் சாப்பிடவே கசப்பு என ஒதுக்கியவர்கள் எல்லாம் எலி மருந்தையும் இன்னும் பிற வஸ்துக்களையும் உண்டு உயிர்விட்டவர்கள்,தீக்குளித்து இறந்தவர்கள் என் பக்கத்து வீட்டில்,அடுத்து தெருவில்,ஊரில் இன்னும் எங்கெங்கோ நடந்த விபரீதங்களை பலதடவை கேள்விப்படும்போது, எங்கோ பேப்பரில் இதுபோன்ற இறப்பு செய்திகளை அடிக்கடி படிக்கும்போதெல்லாம் மிக சாதரனமாய் அதை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் அன்னைக்கு என்னால ஏனோ முடியல.
மறுநாள் காலை விடிந்தது நல்லபடியாக திருமணம் முடிந்து நான் ஊருக்கு கிளம்ப தயாரானேன்.பஸ் ஏறி கோயம்பேடு வந்து சேர்ந்தேன். சாப்பாடு இறங்கவே இல்ல தண்ணீர் மட்டும் இரண்டு மூன்று அதற்கும் மேல் பாட்டில் பாட்டிலாக வாங்கி குடித்து காலி செய்து கொண்டேயிருந்தேன். அன்று காலை செய்தித்தாள் நான்கைந்தை வாங்கி படித்தேன். எல்லாவற்றிலும் அந்த பெண்ணின் தற்கொலை செய்தி பெரியதாய் வந்திருந்தது.பாலத்தில் இருந்து குதித்து இறந்திருந்தது என்றும் மூளை சட்டினி ரத்த வெள்ளம் என வார்த்தைகளில் விளையாண்டிருந்தார்கள். புகைப்படத்தில் முகம் சரியாக தெரியவில்லை.அந்த பெண்ணின் செல்போனில் சிம்கார்ட் எதுவும் இல்லாததால் உறவுகளுக்கு தகவல் சொல்லமுடியவில்லை. என்ற செய்தி என் இதயத்தை மேலும் கணமாக்கியது....
நான்குமணிநேரம் பேருந்து நிலையத்திலேயே கழித்தேன், எங்கேயும் செல்லவில்லை, எனக்கு வந்த எந்த செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. ஸ்டீபன்,ஆபிஸ் கால், அவளிடமிருந்து மட்டும் இருபது மிஸ்டு கால்கள். மாலை ஐந்து மணி சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் இரு பஸ்கள் என் முன். அன்று வார நாள் என்பதால் கூட்டம் குறைவு தான், அதான் இரண்டு பேருந்து கண்டக்டர்களும் கூவி கூவி அனைவரையும் அழைத்து கொண்டிருந்தார்கள்.நான் முதலில் டிக்கெட் வாங்கி பஸ்சில் ஏறி உட்கார்ந்தேன்.வலது பக்கம் இரண்டாவது ஜன்னல் ஓர சீட். பஸ்ஸின் உள்ளே இருந்த வெறுமையை பார்க்க பிடிக்காமல் நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியில் வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.சில நிமிடங்களில் ஒரு பத்து பதினைந்து ஆட்களோடு அந்த அரசு பஸ் அதன் பயணத்தை தொடங்கியது,
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அந்த பஸ் ஒரு டிராஃபிக் சிக்னலில் நின்றது.அப்ப நா பார்த்த காட்சி எனக்கு ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துச்சு சிரிப்பு,அழுகை அதெல்லாம் கடந்து ஒரு மாதிரியான மனநிலை, நா பார்த்தது அந்த பொண்ண...

எனக்கு நல்லா தெரியுது அது அந்த பொண்ணு தான்,ஒரு பையன் கூட பைக்ல பின்னாடி உட்கார்ந்து சிக்னல்ல ரோட கிராஸ் பண்றதுக்காக காத்துக்கிட்டிருந்தா.நேத்து ஏன் முன்னாடி ஷேர் ஆட்டோவில போன்ல அழுது சண்டை போட்டு திடீர்னு இறங்கி போச்சே, நிச்சயமா அதே பொண்ணு தான் இப்ப உயிரோட என் கண் முன்னாடி, அதுவும் பைக்ல ஒரு பையன் பின்னாடி சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே உட்கார்ந்திருக்குறா.அப்ப
அன்னைக்கு காலைல பேப்பர்ல இறந்து போனதா செய்தி போட்டிருந்ததே
அது இவ இல்லையா? அப்படின்னா அந்த பொண்ணு யாரு?அவளுக்கு என்ன பிரச்ச்னை? அவ ஏன் தற்கொலை பண்ணிகிட்டா? இப்ப என் கண் முன்னாடி நிக்கிற பொண்ணு கூட இருக்கிறது யாரு? நேத்து சண்டை போட்ட லவ்வரா? இல்ல இது வேற பையனா? கேள்விகள் அடுக்கடுக்காக வந்துகிட்டே இருந்துது எனக்கு, அதுக்குள்ள என் பஸ் அந்த இடத்த விட்டு நகர அந்த ஜோடி வேகமாக வேறு பக்கம் சாலையில் திரும்ப என் கண்ணை விட்டு
மறைந்தார்கள்.
அந்த பொண்ணோட பெயர் கூட தெரியாது ஆனா அவளோட உருவம் மட்டும் என் மனசில ஆழமா பதிஞ்சுருந்தது.எனக்கு அப்பதான் நிம்மதியா இருந்தது.ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு உணர்வு சொல்லமுடியாத சந்தோஷம். கடவுளே நன்றி,அப்படி இப்படின்னு ஒவ்வொன்னா யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது மனசுக்குள்ள எங்கேயோ எப்பயோ படிச்ச ஒரு வாசகம் மட்டும் திரும்ப திரும்ப வந்து போனது "தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ஏன் வாழ்ந்துபார்க்க கூடாது"...
இப்படிக்கு
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் ஏப்ரல்-15 -2012...
