Thursday, July 14, 2016

"சினிமாக்களும் நானும் - 01" - மகேந்திரனின் முள்ளும் மலரும்

நான் ரசித்த முள்ளும் மலரும் ...

           
                          நீண்ட நாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் ஒரு பதிவு .....
        தமிழில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்தாலும் காலம் கடந்தும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது ஒரு சில திரைப்படங்கள் தான்.அப்படி ஒரு பொக்கிஷமான திரைப்படம் தான் முள்ளும் மலரும். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது.  ரஜினியின் பெஸ்ட் படம்,தன்னை இயக்கிய சிறந்த இயக்குனர் மஹேந்திரன்  என்று அவரே அடிக்கடி சொல்வது இந்த "முள்ளும் மலரும்" படம் பத்தி தான்.
                                               
"முள்ளும் மலரும் படம் பார்க்காதவர்கள் டைரக்டர்களே இல்லை!" இது சமீபத்தில் ஒரு பேட்டியில் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர். தங்கர்பச்சான் சொல்லியது....

              நடிகர்கள் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், இயக்குநர்களில் ‘எப்போதும் எவர்கிரீன்’ இயக்குநர் மகேந்திரன்தான். எடுத்த படங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவுக்கு வேறு பரிமாணங்களைத் தந்தவை.அவரின் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம் முள்ளும் மலரும் அந்த படத்தை பத்தி தான் இன்னைக்கு நம்ம சினிமாயனா கோலிவுட் க்ளாசிக்ஸ் செக்மென்ட்ல  பேசப்போறோம் ...

                 அண்ணன்-தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சிவாஜியும், சாவித்திரியும் நடித்த 'பாசமலர்' எப்படி ஒரு  வாடா மலரா விமர்சகர்கள் சொல்றாங்களோ , அதே மாதிரி ரஜினியும், ஷோபாவும் நடித்த 'முள்ளும் மலரும்' ஒரு குறிஞ்சி மலர்னு சொன்னா அது நிச்சயம் மிகையாகாது.

                ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு,வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோர் நடிப்பில் பாலுமஹேந்திரா அவர்கள் ஒளிப்பதிவில் மஹேந்திரனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவான படம் முள்ளும் மலரும் 1966 ல் தமிழ் சினிமாவில் நுழைந்த இயக்குனர் மஹேந்திரன் 7 படங்களுக்கு கதை, 6 படங்களுக்கு கதை வசனம், 3 படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிஇருக்கிறார் அவர் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் முள்ளும்மலரும்.எப்போதும் தன்னை அவர் முன்னிலைப்படுத்தியதில்லை. அவர் படைப்புகள்தான் அவரைப் பற்றி பேசவைக்கின்றன.தலைமுறை கடந்தாலும், தமிழ் ரசிகனால் கொண்டாடப்படும் இயக்குநர் அவர்.

            முள்ளும்மலரும் திரைப்படம் .1978 சுதந்திர தினத்தன்று வெளிவந்தது.வில்லன் குணச்சித்திர வேடம் என மாறி மாறி நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்தின் புதிய பரிமாணத்தை எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டிய படம் முள்ளும் மலரும் இது  நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த  32 வது படம் அது அவருக்கு  மெகா ஹிட் படமாகவும் வெள்ளி விழாப் படமாகவும் அமைந்தது.
     
            கல்கி வார இதழில் வெள்ளிவிழாவிற்க்காக நடத்தப்பட்ட  நாவல் போட்டி ஒன்றில், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதி முதல் பரிசு பெற்றதுதான் 'முள்ளும் மலரும்.' கதை அந்த கதைக்கு திரைக்கதை-வசனம் எழுதி இயக்கினார், ' திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருது பெற்ற படம்  தமிழக அரசின் விருது பெற்ற படம்   தமிழில் வெற்றி பெற்ற இந்த படம்  1979 ல் வேனலில் ஒரு மழா என்ற பெயரில் மலையாளத்திலும்  1985 ல்  பியாரி பேஹானா என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.
.
                    ” முள்ளும் மலரும்’ படத்துக்கு முன்புவரை ரஜினிக்கு வில்லன் முத்திரைதான் அழுத்தமா இருந்துச்சு. அவரை எப்படி ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?” என்று ஒரு பேட்டியில்  இயக்குனர் மஹேந்திரன் கிட்ட கேட்டப்ப அவர் என்ன சொன்னார்னா ....

       ”நடிகர், ஸ்க்ரிப்ட், இயக்கம்னு எதையும், நான் யார்க்கிட்டேயும் கத்துக்கலை. எது எப்படி இருக்கணும்னு எனக்கு நானே தீர்மானிச்சேன்.

          போகிப் பண்டிகையில வேண்டாத விஷயங்களைக் கொளுத்துற மாதிரி, சினிமாவில் யதார்த்தத்துக்குப் புறம்பான, பிடிக்காத விஷயங்களைத் தூக்கிப்போட்டேன்.

             ‘ஆடுபுலி ஆட்டம்’ படத்துக்கு வசனம் எழுதினப்ப, ரஜினி எனக்கு நல்ல நண்பர் ஆனார். விடிய விடிய சினிமாபத்திப் பேசுவோம். சினிமா மேல அவருக்கு  வேட்கையும் தீராக் காதலும் இருந்துச்சு.

           ‘முள்ளும் மலரும்’ எழுதினப்ப ரஜினிதான் சரியா இருப்பார்னு தோணுச்சு. தயாரிப்பாளர் வேணுகிட்ட சொன்னப்ப, ‘ரஜினி கறுப்பா இருக்காரு. வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோவா போட்டா எடுபடுமா?’ன்னு தயங்கினார்.

          ஆனா, ‘ரஜினிதான் ஹீரோ’ன்னு நான் தீர்மானமா இருந்தேன். படம் வெளியான மூணு வாரம் மக்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறந்தவுடனே குழந்தை சத்தம் போடாம இருந்தா, எப்படிப் பதைபதைப்பா இருக்குமோ, அப்படித்தான் நானும் ரஜினியும் இருந்தோம். நாலாவது வாரத்துல படம்  பிக்-அப் ஆச்சு. இப்போ யோசிச்சாலும் காளி கேரக்டருக்கு ரஜினியைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை!”

         முள்ளும் மலரும் திரைப்படத்தின் கதை

        இளமையிலேயே தாய்-தந்தையரை இழந்த ரஜினி தன் ஒரே தங்கை ஷோபாவோட  , கழைக் கூத்தாடியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஊர் ஊரா சுத்தி கடைசியில ஒரு ஊர்ல அடைக்கலமாவாரு, அப்புறம் படி முன்னேறி பக்கத்து மலையில இருக்கிற மின்சார அலுவலகத்தில விண்ட்ச்  ஆப்பரேட்டரா  ஆயிருவாரு.அந்த கிராமத்தில எல்லாருக்கும் பிடித்த அதே நேரத்தில எல்லாரும் பயப்படுற ஒரு கோபாக்கார இளைஞரா இருப்பாரு.

             தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார் ரஜினி. அமைதியாக போய் கொண்டிருக்கும் இவங்க வாழ்க்கையில இன்னொரு ஆதரவற்ற குடும்பம் நுழைவாங்க  படாப்பட் ஜெயலட்சுமி மற்றும் அவரது தாய்க்கும் தங்கைக்காக தன் வீட்டு பக்கத்திலேயே இடம் கொடுக்கிறார் ரஜினி

      அந்த ஊருக்கு புதிதாக வரும் என்ஜினீயர் (சரத்பாபு), கண்டிப்பானவர். அவர் வந்ததில் இருந்து ரஜினிக்கும் அவருக்கும் பிடிக்காமல் போய்விடும் அவரிடம் ரஜினி அடிக்கடி முறைச்சுக்குவார், கோபமாக நடந்துப்பார் .  ஒருமுறை ரஜினி வின்ச் இயக்க தாமதமாக வர்றதால  ரஜினியை பத்து நாள் சஸ்பெண்ட் செய்வார். இதனால் ஆத்திரம் அடையுற  ரஜினி, அளவுக்கு மீறி குடிச்சுட்டு . சாலையில் விழுந்து கிடப்பார். அதனால், விபத்தில் சிக்கி, ஒரு கையை இழந்துவிடுவார்.

              அதன் பின்  ரஜினியிடம் அடைக்கலம் தேடிவந்து அவர்கள் பக்கத்தில் வீட்டில் வாழ்ந்து இவர்களோடு பழகி வரும்  `படாபட்' ஜெயலட்சுமி, ரஜினியை திருமணம் செஞ்சுக்குவார் .

       இதற்கிடையே சரத்பாபுவுக்கு, ஷோபா மேல்  காதல் ஏற்படுகிறது.அதை ஷோபாவிடம் சொல்ல அவர் தான் அண்ணனிடம் அனுமதி கேட்க சொல்ல,வீடு தேடி வந்து பொண்ணு கேட்கும் சரத்பாபுவை  அவமானப்படுத்த அவரை  தன் எதிரியாக நினைக்கும் ரஜினி, இந்தக் காதலை ஏற்காம அவரோட பழகிவரும் கொஞ்சம் வயது முதிர்ந்த வெண்ணிறாடை மூர்த்திய மாப்பிளையா  தேர்ந்தெடுப்பாரு.அவர் ஏற்கனவே ஊரில் ஒரு திருமணமான பெண்ணோடு தொடர்பில் இருப்பாரு .இது தெரிந்து அனைவரும்  அந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ரஜினி பிடிவாதமாக இருப்பார்.அண்ணனுக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கும் ஷோபாவை எல்லாரும் சேர்ந்து மணம்  மாத்துறாங்க

         அண்ணன் மீது அளவற்ற பாசம் வச்சுருந்தாலும்  சரத்பாபுவை மணக்க தீர்மானிக்கிறாங்க , ரஜினிக்கு தெரியாம ஊரே சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் கல்யாணம் நடந்த கோவிலை நோக்கி போய்கிட்டுருப்பாங்க  கல்யாணத்துக்கு சில நிமிஷங்களே இருக்கும்போது, அங்க வர்ற ரஜினியை பார்த்து முதல தயங்குற ஷோபா மனம் மாறி ரஜினியிடமே  ஓடி வந்துருவாங்க . தங்கை தன் மீது கொண்டிருக்கும் ஆழமான பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போயிருவாரு , ரஜினி.

             அந்த சந்தோஷத்தில சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் திருமணத்தை நடத்த அவர் சம்மதிக்கிற  அந்த காட்சியோட படம் நிறைவடையும் .

                            முள்ளும் மலரும்' படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த டைரக்டர் பாலசந்தர் பிரமித்துப்போனார்.

            உடனடியாக ரஜினிக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார். உன்னை அறிமுகபடுத்தியதில் நான் பெருமைகொள்கின்றேன்  என்று எழுதியிருந்தார் .அந்த கடிதத்தை ஒரு பொக்கிஷமாக இன்னைக்கு  பாதுகாத்து வச்சிருக்காரு  ரஜினி.

ரஜினி
                           தன் உச்சபட்ச சிறப்பான நடிப்புத் திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.தங்கைக்கு  சோறு போடாமல் பட்டினியாவச்சுருக்கானு  புரளி பேசின ஆபீஸ் பியூன அடிச்சுட்டு "என் வள்ளி பட்டினியா இருக்கான்னா, அது இந்த காளி செத்த நாளாத்தான் இருக்கும்" என்று சொல்றது , கை போனதால் வேலையை விட்டு தூக்கிட்டாங்கனு சொல்ற  சரத்பாபுக்கிட்ட ரஜினி  "பரவாயில்ல சார். நானும் உங்க இடத்துல இருந்தா, இப்படித்தான் செஞ்சிருப்பேன். கேவலம்.... நாம எல்லாம் மனுஷங்கதானே சார்" என்று விரக்தியா சொல்லிட்டு , டக்குனு  தன் முகபாவத்தை சீரியஸா ஆக்கிக்கிட்டு "ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" னு டயலாக் பேசுவாரு பாருங்க அது க்ளாஸ் , கை போன பிறகு  உதவிக்காக திருமணத்திற்கு சூசகமாக வற்புறுத்துற தன் தங்கை ஷோபாக்கிட்ட  "ம்..... வள்ளிக்குட்டி. நான் என்னவோ நெனச்சேன். நீ கூட பொடி வெச்சு பேச கத்துக்கிட்டியே' என்று நக்கலடிப்பதாகட்டும், தனக்கு பிடிக்காத சரத்பாபுவோட , ஊர்க்காரங்க சேர்ந்து கல்யாணம் பண்ண கூட்டிட்டு போகும் போது  தங்கை ஷோபாகிட்ட  "அந்த நாயிங்க எல்லாம் போகட்டும். ஏன்னா அதுங்க என் கூட பிறந்துதங்க இல்ல. ஆனா நீ என் ரத்தம்" என்று உருகுவதிலாகட்டும்,ஷோபா திருப்பி தன்னை ஓடி வந்து கட்டிபிடிச்சவுடனே  "இப்ப உங்க மூஞ்சுங்கள எங்கடா வெச்சுக்கப் போறீங்க" என்று பெருமைப்படுவதிலாகட்டும்.கடைசிவரைக்கும் அந்த கேரக்டரா வாழ்ந்துருப்பாரு..ரஜினி .

ஷோபா 
           அடுத்தது ஷோபா அப்பாவி முகத்துடன் அறிமுகமாகி சரத்பாபுவோட  ஜீப்பை பஸ் டிரைவர் போல  ஓட்டி விளையாடும் போதும் அப்புறம் பின்னால வந்து நிக்கிற சரத்பாவுவை மிரட்சியுடன் பார்க்கிறது எல்லாம் பயங்கர கியூட்டா பண்ணியிருப்பாங்க சரத்பாபுவுக்கும் இவங்க சந்திக்கிற காட்சியில் முகபாவங்கள் அற்புதம் படத்தின் க்ளைமாக்ஸ்ல சரத்பாபுவோட போறதா? அல்லது அண்ணனோட போறதானு குழம்பி  தவிக்கிற காட்சியில அட்டகாசமா நடிச்சிருப்பாங்க ...


            காளி (ரஜினி )யால் 'லா பாயிண்ட்' என்று பட்டப் பெயர் வச்சு கூப்பிடுற கேரக்டர் ல டிவிசனல் எஞ்சினியரா சரத்பாபு நேர்மையான அதிகாரி அதே நேரத்தில மனிதாபிமானமுள்ள நபர் தானே மாதிரியே யாரும் இல்லாத குடும்பத்தை சேர்ந்த ஷோபா மேல ஆசைப்படுறது தோற்றம் உடை தனக்கு கொடுக்கப்பட்டதை சிறப்ப செஞ்சுருந்தாரு...சரத்பாபு

                  அடுத்து படாபட் ஜெயலட்சுமி ஆரம்பத்தில அப்பாவி பொண்ணு அப்புறம் கலாட்டா போன்ற கேரக்டர் அப்புறம்  கையிழந்த ரஜினியை கிண்டலடிக்கிற ஊர்க்காரங்க கிட்ட ஆக்ரோஷமாகிறது குடும்பத்தலைவிக்கேயுரிய பொறுப்போட ஷோபாவுக்காக தன் கணவனையே எதிர்த்து ஒரு முடிவு எடுக்குற போலடான கேரக்டர்  .பல பரிமாணங்க்ளா வெளிப்படுத்தியிருக்காங்க...இவங்களோட இந்த படத்தில வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு அவர் மனைவியாக வருகிறவர் னு  எல்லா கேரக்டரும் ஒரு கிராமத்தை அச்சு அசலா நம்ம கண்ணு முன்னாடி வந்து நிறுத்தியிருப்பாங்க...

                குறைகள்னு  சொல்ல எதுவுமே இல்லையானா? இல்லைதான்..... ஆனா படத்தில  முக்கிய கதாபாத்திரத்தில் ஒண்ணான படாபட் ஜெயலட்சுமி ஆரம்பத்தில ஆதரவற்ற நிலையில அடைக்கலம் தேடி ரஜினி ( காளி )
 வீட்டுக்கு வர்றாங்க ஆனா அப்பவே அந்த கேரக்டர் வறுமையில் இருக்காங்க ஆனா அவங்களுக்கு லிப்ஸ்டிக் போட்டு மேக்கப் பண்ணி இருக்கிறது உறுத்தலா இருக்கு.எதார்த்தத்தில இருந்து விலகி இருக்கு...மத்தபடி பெரிய குறைகள்  எதுவும் இல்லை. ஒரு கதையை எபப்டி படமாக்கணும்ங்கிறதுக்கு  சினிமாக்குள்ள நுழைய விரும்புற ஒவ்வொருத்தரும் பார்க்கவேண்டிய படம்தான்....


            இசை 

                 இசையமைப்பாளர் இளையராஜா: 1980, 90-களில் இயக்குநர்கள் கதையை முடிவு செஞ்சுட்டு  அதை திரைக்கதையாக்கும் போது இளையராஜாவையும் மனசில வச்சுட்டு தான் ஸ்க்ரீனிப்பிலே பண்ணுவாங்கனு சொல்வாங்க  ராஜாவும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாம மிகச் சிறப்பாக அவரோட தேவ இசையால் நிரப்புவார், சில சமயங்களில் சைலன்ஸ பல இடங்கள அட்மாஸ்பியர் எபெக்ட்ஸ்  மட்டும் தான்.  இந்தப் படத்திலையும்  அப்பப்ப Theme Music மாதிரி வர்ற கழைக் கூத்தாடிகளோட  மேளச் சத்தத்தை பல காட்சிகள்ல  சூப்பரா  பயன்படுத்தியிருப்பார் இளையராஜா .

               இதை பத்தி ஒரு தொலைக்காட்சி நேர்காணல் ல இயக்குனர் மஹேந்திரன் என்ன சொன்னார்னா

              இந்தக் கதையில  திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்ற மாதிரி பல இடங்களில் வசனங்களை குறைச்சு  மெளனங்களை அதிகப்படுத்தியிருந்தேன் சொன்னாரு . உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:

          ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவரை கட்டிப்பிடிக்கிற ஷோபா அப்பதான் ரஜினி கையை இழந்துருக்கிறத பீல் பண்ணி அழ ஆரம்பிப்பாங்க .ராஜா அந்த இடத்தில தான்  இசையால் பார்வையாளர்கள் உருகும்படி செஞ்சுருப்பாரு .

           அதே போல் இந்த முள்ளும் மலரும்  படத்தை பார்ஸ்ட காப்பி பார்த்த  இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ரீ-ரிகார்டிங் முடிவதற்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, பல இடங்கள் வசனங்கள் இல்லாமல் மெளனமாக இருப்பதை பார்த்து ஷாக்காகி இருக்கிறார். 'இன்னாங்க இப்படி எடுத்து வச்சிருக்கீங்க. நான் போண்டிதான் ஆயிடுவேன் போலிருக்கு". னு சொன்னாராம் இறுதியா படம் பிடிக்க வேண்டிய பாடல் காட்சிக்கு பணம் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு அப்புறம் நடிகர்  கமலின் உதவியால அந்த பாடல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல்தான் இன்றளவும் அழியா இசை பெருவெள்ளமாக இருக்கும் “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்கிற பாடல்ஆனா படம் வெளியாகி  மக்கள் அதை ஆரவாரமாக வரவேற்றது சரித்திரம்.

               அதனால  இந்தப்படத்தின் முதுகெலும்பாக இளையராஜாவின் இசையை குறிப்பிடலாம். பாட்ட ஒவ்வொன்னும் கதையோடு இணைஞ்சு வந்தது . 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' பட்ட கண்ணை மூடி  கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோனும் . இந்த பாட்ட  கண்ணதாசன் வரிகள் எழுத கே.ஜெ.யேசுதாஸ் பாடியிருப்பார் .
'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே'  லேலேலெலெ.... ஹம்மிங் அற்புதமா இருக்கும் கங்கை அமரன் எழுத எஸ்.பி.பி பாடியிருப்பார்...

          படத்தின் ஆரம்பத்தில் இளையராஜா படும் "மானினமே" பாடலின் இசையே படத்தில் பெரும்பாலும் பின்னணி இசையாகத் தூவ பட்டிருக்கும் .


             மங்காவுக்கும் காளிக்கும் திருமணம் நடந்து முடிஞ்ச ராத்திரியில வர்ற  "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு" பாடல கங்கை அமரன் எழுத வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க



            வள்ளிக்கு என்ஜினியர் மேல் வரும் காதலுக்கு பிறகு வரும்  "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை" பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுத ஜெஸ்ஸி பாடியிருப்பாங்க...
                               


ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா

                இந்த படத்தில ஆர்வோ (ORWO) கலரில்  பல ஜாலங்கள செஞ்சுருப்பாரு .பாலுமஹேந்திரா பாடல்கள் ல மான்டேஜ் காட்டுற கான்செப்ட்டை தமிழுக்கு அறிமுகப்படுத்தினது இவர் தான் . பல காட்சிகள் ல ஷோபாவுக்கு அற்புதமான குளோசப்புகள். முக்கியமாக  செந்தாழம்  பூவில்  சாங்கில் ஜீப்பில் உட்கார்ந்து இருக்கும் ஷேபாவுக்கு வச்சுருக்குற  குளோசப்.சரத் பாபு திருமணம் பண்ண விருப்பமனு சோப்பாகிட்ட சொன்னதுக்கு அப்புறம் வர்ற அடி  பெண்ணே பாடலில் ஷோபாவோட  இயல்பான அழக பதிவு பண்ணியிருக்கிற ஷாட்டுகள் கவிதையா இருக்கும். ஒரு நல்ல ஒளிப்பதிவாளனின் வேலை, தன் திறமையை தனியே காண்பிக்காமல், கதையோட்டத்திற்கு குறுக்கே நிற்காமல், சம்பவங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப கோணங்களை ஒழுங்குபடுத்துவதுதான். சொல்வாங்க அத சிறப்ப செஞ்சுருப்பாரு பாலு மஹேந்திரா ...

         இயக்குனர் மஹேந்திரன் 

                  1978 ஆம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றின் ஒரு அற்புத அத்தியாயத்தின் தொடக்கம். இயக்குனராக இது மகேந்திரனுக்கு முதல் படம். அதுவரை வசனங்களால் நிரம்பி வழிஞ்ச தமிழ் சினிமாவ காட்சிகளால் நிரப்பும் வேலையை தொடங்கி வச்சவர் மகேந்திரன். ஒரு காட்சியோட  தன்மையை உணர்த்துற மாதிரி  பல நீளமான காட்சிகளை இந்த படத்தில் மகேந்திரன் பயன்படுத்தி இருப்பார். அதுவரை, வசனம், நடிப்பு, கட் அடுத்தக் காட்சினு பார்த்துட்டிருந்த  தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நீளமான காட்சிகள் பிரம்மிப்பை கொடுத்த அதே நேரத்தில், கதையில் ஒவ்வொரு காட்சிகளின், கதாபாத்திரங்களின் தன்மையையும் உணர உதவிச்சு .

                  எஞ்சினியர் திட்டிவிட்டார் என்று கோபத்தில் இருக்குற  அண்ணனுக்கு தங்கை ஷோபா சாப்பாடு கொண்டு வர்ற காட்சி . அண்ணன் தன்னுடைய சுய கௌரவத்திற்கு ஏற்பட்ட இழிவை எண்ணி கழிவிரக்கம் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தங்கையின் பாசம், அவனது கழிவிரக்கத்தை இன்னும் அதிகமாக்குது உரிமையா  தங்கைக்கிட்ட  அண்ணன் கோவிச்சுக்கிறான். அப்புறம் ராத்திரி வீட்டுக்கு வந்ததும்  தங்கையை, அண்ணனும், அண்ணனை தங்கையும் சமாதானப்படுத்தும் இடங்கள் காட்சிகளால் நிரம்பி வழியும் அற்புதமா திரைக்கதை அமைச்சுருப்பாரு மஹேந்திரன் கிட்டத்தட்ட ஒரு படமாகவே எடுக்க வேண்டிய விசயத்தை ஒரே காட்சியிலேயே காட்டியிருப்பார்

                        காளியின் கதாப்பாத்திரம் பத்தி  எஞ்சினியர் இன்னொரு அலுவலரிடம் கேட்கும்போது அதற்கு அவர் காளியின் கதாப்பாத்திரத்தை விளக்கும்போதே, காளியின் நிஜ கதாப்பாத்திரத்தை பின்னணியில் காட்சிகளாக காட்டியிருப்பார் காட்சிகளால் நகர்ந்துட்டருக்கும் கதையை, ஒரே ஒரு வசனத்தால் இன்னும் பல படிகள் முன்னோக்கி நகர்த்தி இருப்பார் இயக்குனர். தம்பி இல்லாத வேற ஏதாவது கிளார்க்  இருந்தா வர சொல்லுங்கள்,அப்படினு  என்று எஞ்சினியர் சரத்பாபு சொல்ற  கதாப்பாத்திரம் சொல்கின்ற அந்த இடம், காட்சிகளும், வசனமும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு படத்தை நகர்த்தி செல்லும் காட்சியமைப்பு அருமையா இருக்கும் .

                   தமிழ்சினிமாவை சர்வதேச தரம் நோக்கி அழைத்து செல்லகூடிய இயக்கத்தை  மகேந்திரன் வெளிப்படுத்தியிருப்பார்.அவருடைய ஒவ்வொரு படமுமே தமிழில் ஒரு உலக சினிமா தான்...நான் காம்ப்ரமைஸ் டைரக்டர் அவரு,.,

                     ஒரு புத்தகத்தில் மஹேந்திரன் இந்த கதையை இயக்கனும்னு பத்தி சொன்னது என்னனா “முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை. ஆனா அந்த படம் அவர் இயக்கத்திலேயே வெளிவந்து தமிழ் சினிமாவில் வரலாறாகவே மாறியது....
                                       
https://www.youtube.com/watch?v=u7cGyXMHeI0  MULLUM MALARUM FILM YOU TUBE LINK....
                   சரி தமிழ் சினிமாவில பார்த்தே தீர வேண்டியபடம். முள்ளும் மலரும் இந்த அற்புதமான படத்தை பத்தி பல விஷயங்கள்  உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன் படம் பார்த்தவங்களுக்கு காட்சிகள் கண் முன்னாடி வந்து போயிருக்கும் பார்க்கத்தவங்க கண்டிப்பா உடனே போய் படத்தை போய் பாருங்க...அடுத்ததா இன்னொரு அழகான படத்த பத்தி  சினிமாக்களும் நானும்ல எழுதுறேன்....



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து.....

Thursday, June 27, 2013

அ...............க சில கவிதைகள் - 4

அ...............க ஒரு கவிதை :- 10  ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)



என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !




 அன்று 

ஒரு சிறிய ஊடல்... 

அப்பொழுதுதான் அழுது முடித்திருந்தாய்  ;-)

தயவுசெய்து இனி ஒருநாளும் 

ஆனந்த கண்ணீர் கூட சிந்திவிடாதே  ...

ஏனென்றால் 

ஒரு மனிதனால் தாங்ககூடிய வலியின் அளவு 45 டெல் அலகுகள் தானாம் 

ஆனால் உன் ஒவ்வொரு துளி கண்ணீர் சிந்தும் போதும் 

என் இதயத்தில் உண்டாகும் வலி 100 டெல் அலகுகளை தாண்டுகிறதே!!!


******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 10  ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)


என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !



ஒரு வேலை நாள் ...

நீண்ட நேரத்திற்கு பிறகு 

உன் கைபேசியில் இருந்து ஒரு அழைப்பு ....

'ஒ ' என்று...கத்த வேண்டும் போல இருந்தது...

துவும் பேசவில்லை நான் 

மௌனமாகவே இருந்தேன்...

வார்த்தைகள் வரவில்லை 

பேசி பேசி ஓய்ந்திருந்தேன்.

ஆம் 

உன் குரலை கேட்க காத்திருந்த நேரங்களில் 

நான் என்னை மறந்து கொட்டிய 

உளறல்களை 

யாரேனும் கேட்டிருந்தால் 

நிச்சயம் அதை 

காதலர்களின் தேசிய கீதமாக  அறிவித்திருப்பார்கள் !!!


******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 10  ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)


என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !





ஒவ்வொரு நாளும் 

பின் இரவுகளில் 

நடக்கும் 

நம் கைபேசி உரையாடல்களில் 

அடிக்கடி நான் மௌனமாகி விடுவேன் 

தூங்குறியா ? 

சொல்லு தூங்குறியா ? 

மீண்டும் மீண்டும் 

கேட்டுக்கொண்டே இருப்பாய் 

இல்லை என்பேன் 

இல்ல பொய் சொல்ற...

இல்ல அம்மு தூங்கல ...

நல்லா தூங்கு 

போ...

பேசாத

போன  வை....

உன் கோபம் அதிகமாகும் 

கடைசியாக

 நீ 

வழக்கமாய்  சொல்லும்  வார்த்தைகள்  

அம்மு...

இன்னும் ஒரு வாரத்திற்கு என்கிட்டே பேசாத 

குட் பை...

இப்பொழுது முழுவதுமாய்  ஆழ்ந்திருப்பேன் 

இணைப்பு துண்டிக்கப்பட்ட  அடுத்த சில நிமிடங்களிலேயே  

மீண்டும் உன்னிடம் இருந்து அழைப்பு வரும் 

சாரி தங்கம்...

வா ..... வா ..... எந்திரி 

ஒரு கதை சொல்லி என்ன தூங்கவை...

எங்கேயிருந்து வருமோ  எனக்கு அந்த உற்சாகம் 

நான் சொல் தொடங்குவேன்...

கதையின் பாதியிலேயே 

என் தூக்கத்தையும் சேர்த்து நீயே  தூங்கிவிடுவாய் !!!

******************************************************************************************************



இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து... 

Wednesday, January 23, 2013

ஐ.சி.யு


இரவு பதினோரு மணிக்கு மேல இருக்கும் 

நடுரோட்டில ஒரு அம்மா அரை மயக்கத்தில ஒரு வாலிப பையன்ன தோள்ல சாய்ச்சுகிட்டு நிற்கிறாங்க...
   
   அந்த நெடுஞ்சாலையில சீறி பாய்ந்து வர்ற மாருதி கார் ஒன்னு சடன் பிரேக் அடிச்சு அவங்க முன்னால நிக்குது...

   வண்டியில டிரைவர் சீட் பக்கத்தில உட்கர்ந்த்ருக்கிற அஜய் தலைய வெளிய நீட்டி"கெட்ட வார்த்தையில திட்டுறான் நீங்க சாக ஏன் வண்டி தான் கிடைச்சுதா தள்ளும்மா "

  "வீட்டில ஒரு சின்ன பிரச்சனை என் பையன் ஏதோ மருந்த குடிச்சுட்டான். இந்த பக்கம் ரொம்ப நேரமா எந்த வண்டியும் வரல கொஞ்சம் எங்கள ஆஸ்பத்திரில இறக்கி விட்டுட்டு போறீங்களா "பதட்டமாக சொன்னா அந்த பெண்...

    வண்டிக்குள்ள பின்னாடி மூணு பேர் முன்னாடி ரெண்டு பேர் அதுல ஒரு குரல் "கிளம்பு கிளம்பு நமக்கு  ஏற்கனவே நேரமாகுது"

     அஜய்க்கு மனசு கேட்கல டிரைவர்ட்ட சொல்றான் "இன்னும் ஒரு கிலோமீட்டர்ல ஒரு ஹாஸ்பிட்டல் இருக்குடா போற வழிதான இறக்கி விட்டுட்டு போயிறலாம்"

     ஒரு நிமிஷம் யோசிச்ச டிரைவர் சொல்றான் "சரி சரி சீக்கிரம் ஏறுங்க "  

வண்டி முன்ன விட  இப்ப வேகமா கிளம்பி போய்  அந்த ஊர் அரசு மருத்துவமனையில நின்னது  ...

  ஆஸ்பத்திரியோட அவசரசிகிச்சை பிரிவு வாசல்ல ரெண்டு பேரையும் இறக்கி விடவும் அந்த அம்மா "தம்பி ஒரு கை பிடிச்சு உள்ள வந்து விட்டுட்டு போங்கபா "கெஞ்சுறாங்க ....

    "ஒரு நிமிஷம்டா வந்துறேன் "பதில் எதிர்பார்க்காம வண்டியில் இருந்து இறங்குற அஜய் ஒரு கை பிடிச்சு அந்த பையன  தூக்கிக்கிட்டு  ஐ.சி.யுக்குள்ள நுழையுறான் ....

    அன்னைக்கு மூணு ஆக்சிடெண்ட் கேஸ் ஒரு பக்கம்  தையல்  போட்டுட்ட்ருக்காங்க அந்த ஆள் வலி தாங்காம  அலறிட்டிருக்காறு..

       பெட் எல்லாம் புல் ஆகிருந்தது  மூணு போன் பிராக்ச்சர் இட இல்லாம  கேஸ்  தரையிலதான்  படுக்க வச்ச்ருக்காங்க ...

        அஜய் கொண்டு வந்த பையனையும் கீழ படுக்க வச்சுட்டு வெளிய வர பார்க்கிறான் அப்ப அங்க இருக்கிற  டாக்டர் "சார் எங்க போறீங்க,நைட் ஷிப்ட்ல ஆள் இல்ல  ஒரு கை பிடிங்கனு சொல்லிட்டு என்ன விஷம் எப்ப குடிச்சாங்க அது இதுன்னு சில கேள்விகள் கேட்டுட்டு தயாரா  இருக்கிற  சோப்பு நுரை குழாய் எடுத்து  மருந்து குடிச்ச பையன் வாயில விடுறாரு"

     அஜய் மணிய  பார்க்குறான் உள்ள வந்து பத்து நிமிஷம் ஆயிடுச்சு ...

அவன் போன் வைப்ரேட் ஆகிட்டே இருக்கு.... அவன் அத எடுக்கல 

ரூம் முழுக்க ஒரே ரத்த வாடை...

எல்லா பக்கமும் வலியால துடிக்கிரவங்களோட சத்தம்.. 

இன்னும் பல மெடிக்கல் உபகரனங்களோட சத்தம்னு ஒவ்வொன்னா அவன் காதுல விழுது 

பக்கத்தில ஒரு ஆள் இழுத்து இழுத்து சிரமப்பட்டு மூச்சு விட்டுட்டு இருக்கார் ....

    இந்த எல்லா  விஷயமும் சேர்ந்து அஜய்க்கு லேசா  தலை சுத்த வைக்குது கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு அவனுக்கு தெரியல ,எல்லாம் மங்களா இருக்கு அவனுக்கு அந்த டாக்டர் சொல்றது கேட்குது "கூட் பேஷன்ட் பிழைச்சுக்கிட்டார் சரியான நேரத்தில கொண்டு வந்து சேர்த்தீங்கனு சொல்லிட்டே அந்த  பையன் வாயில உள்ள குழாய எடுக்கிறார்...

    அஜய்க்கு குமட்டிட்டு வருது அந்த பையன பிடிச்சிருந்த கைய எடுத்துட்டு மெதுவா வெளிய வர்றான்...அவன் பின்னாடியே இவங்க வண்டியில வந்த அந்த விஷம் குடிச்ச  பையனோட அம்மா" தம்பி நீங்க நல்ல இருக்கணும் என் பையன் உசிர காப்பாத்திட்டீங்க உங்களுக்கு எந்த குறையும் வராது "னு வாழ்த்திட்டு போறாங்க"
     
    

ஐ.சி.யு வாசலுக்கு வர்ற அஜய  இடிச்சுட்டு ஒரு அம்மா வேகமா உள்ள ஓடுறாங்க சட்டுன்னு குனிஞ்சு அவன் சட்டைய  பார்க்கிறான் ஒரே  ரத்தம் திரும்பி அந்த அம்மாவ பார்க்கிறான் அவங்க கையில ஒரு ஆறுமாச குழந்தை கட்டில இருந்து  ரத்த வெள்ளத்தில இருக்கு...கட்டில்ல இருந்து விழ்ந்துட்டான் டாக்டர் என் பிள்ளைய காப்பத்துங்கனு அந்த அம்மா கதுறுற சத்தம் இவனுக்கு நல்லா கேக்குது  ...

    தட்டுதடுமாறி வெளிய வந்து ஐ.சி.யு பக்கத்தில இருக்கிற  சுவத்தில சாய்ஞ்சுகிட்டு ஒரு நிமிஷம் யோசிக்கிறான்  அஜய். அவன் ஆஸ்பத்திரிக்குள்ள வந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம் தான் இருக்கும்.ஆனா ஒரு யுகம் போன மாதிரி மலைச்சு  போயிருக்கான்.அவன்  செல் எடுத்து பார்க்கிறான் அதுல 15 மிஸ்டு கால் கார்ல இருந்தவங்ககிட்ட இருந்து வந்தருந்தது..

      போன்ல ஒரு நபருக்கு டைல் பண்றான் எதிர்முனையில் போஃ ன்  அட்டெண்ட் ஆகவும் "ஹலோ டாக்டர் ராஜதுரை வீடானு கேட்டான் .

      அந்த பக்கம் ஆமானு பதில் வர 

இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க வீட்டுக்கு வந்து உங்கள கொலை பண்ண  போறாங்க தப்பிச்சு போயிருங்க ....

எதிர் முனையில ஹலோ நீங்க யாரு பேசுறது ஹலோ யாருங்க......

அஜய் கால் கட் ஆயிடுச்சு....


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

அம்மா அப்பா



     ஏம்பா பிரேம் டைட்  பண்ணு

 "இன்னும் கொஞ்சம்  ஒரு எக்ஸ்போசர் கட் பண்ணு "

"ஓகே பிக்ஸ் " 

"அப்புறம்  ஆங்கர் ,கெஸ்ட் ரெண்டு பேரையும் வாய்ஸ்கொடுக்க சொல்லு"  

     அந்த பிரபல தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியோட படப்பிடிப்பு அரங்கதுக்குள்ள உள்ள இருக்குறவங்களுக்கு  பார்த்து வெளிய டெக்னிகல் ரூம்ல ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து அடுத்தடுத்து கமெண்ட்ஸ் பறக்குது.

     அது மாலை நேர மருத்துவ நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருக்கு 

ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து "கியூ " சவுண்ட் வர...

     தொகுப்பாளர் சரஸ்வதி பேச தொடங்குறாங்க "அனைவருக்கும் காலை வணக்கம் இன்று மருத்துவ நேரம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பிரபல குழந்தை நல மருத்துவர் இன்ப செல்வி வணக்கம் மேடம்"

     "நேயர்களுக்கு அன்பு வணக்கம்" என்றாள்  இன்பசெல்வி.
  
 


     சரஸ்வதி "மேடம் என்னோட முதல் கேள்வி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இன்னைக்கு அதிகமாயிட்டே இருக்குது.ஒரு குழந்தையோட மன உடல் வளர்ச்சி ஆரோக்கியமா இருக்க நாம என்ன பண்ணணும்?"

      அவ்வளோதான் அந்த டாக்டர் ஆவேசமா  பேச தொடங்குறாங்க"ஒன்னும் பண்ணகூடாதுங்க அப்பா அம்மா ரெண்டு பேர்ல ஒருத்தராவது வேலைக்கு எதுவம் போகாம வீட்லயே குழந்தைகள் கூட ஒரு அஞ்சு வயசு வரையாவது இருந்து கவனிச்சுக்கணும். அதுவே போதும்".சொல்லிமுடிக்கிறாங்க....

       அடுத்தடுத்து   கேள்விகள்  தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம்  முழுக்க உள்ள தமிழர்கள் வாழுற எல்லா நாடுகள்ல இருந்தும்  நெறைய தொலைபேசி அழைப்புகள் வந்துட்டே இருந்தது. எல்லாத்துக்கும் டாக்டர் இன்பசெல்வியோட பதில் ரொம்ப நிறைவா இருந்ததது போல சந்தோசமா நன்றி சொல்லிட்டு வச்சாங்க...

      நேரம் போனதே தெரியல முதல் விளம்பர இடைவேளை ..

கேமரா  அட்ஜஸ்ட் பண்ணி லைட்டிங் செக் பண்ணிட்டு இருக்காங்க டெக்னீசியன்ஸ்....

     அப்ப குழந்தை நல மருத்துவர் இன்பசெல்வி  செல்போனுக்கு ஒரு கால் வருது அட்டெண்ட் பண்ணினவங்க  "ஹலோ யாருனு  கேட்கிறாங்க எதிர்பக்கம்  வணக்கம் மேடம் நாங்க உங்க பொண்ணு படிக்கிற க்ரீச்ல  இருந்து பேசுறோம் எல்லா பேரண்ட்சும்  வந்து  அவங்க அவங்க குழந்தைகளா கூட்டிட்டு போயிட்டாங்க க்ளோசிங் டைம் ஆயிடுச்சு உங்க குழந்தை  உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கா உங்க ஹஸ்பண்ட்  நம்பர் ட்ரை பண்ணினோம் பிஸினு வருது"  எப்ப  வறீங்க மேடம்னு கேட்டாங்க 




அதுக்கு மருத்தவர்  இன்பசெல்வி "ஐயம் லிட்டில் பிசி  கால்  யு லேட்டர்னு" சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க... 


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011

முரண்



கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம் கனவு சேவியருக்கு 18 வயசு ஆனதுல இருந்து பாஸ்போர்ட் எடுக்கிற முயற்சியின் இறுதியில, புரோக்கர் இல்லாமல் ஒரு வார போராட்டத்துக்கு அப்புறம் ஆன்லைன்ல அப்பாயின்மென்ட் வாங்கி  பாஸ்போர்ட் ஆபிஸ் கியுல வந்து நிற்கிறான். 


     


      "9.15 அப்பாயின்மெயின்ட்லாம் உள்ள வாங்க கூட யாரும் வரகூடாது "  பாஸ்போர்ட் ஆபிஸ் செக்யுரிட்டி சொல்லிட்டு மெட்டல் டிடக்ட்டர் வச்சு உள்ள வர்ற ஒவ்வொருத்தரையா செக் பண்ண ஆரம்பிக்கிறார்....

        பயத்தோட அந்த ஏ.சி.அறைகுள்ள நுழையுற சேவியர் .அங்க வரிசையா இருக்கிற 5  கஸ்டமர் கவுண்ட்டர்ல எதுல நிக்கலாம்னு யோசிச்சு வரிசை நீளம் கம்மியா இருக்கிற ஐந்தாவது கவுன்ட்டர்ல போய் நிக்கிறான்.அப்ப அவன் பக்கத்துல நிக்கிற ஆள பார்த்து அங்க இருக்கிற என்கொயரி ஆபிசர் "சார்   4ஆம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருந்தா  தமிழ்ல தான் கையெழுத்து போடணும்.இங்கிலிஸ்ல போடுறீங்கனா நோட்டிரி  பப்ளிக் கிட்ட ஒரு செர்ட்டிபிக்கேட் வாங்கிட்டு வந்துருங்கனு " சொல்றார் 

       சின்ன வயசுல படிக்க வாய்ப்பில்லாம போனாலும் கஷ்டப்பட்டு தன்னோட கையெழுத்த ஆங்கிலத்தில எழுத  பயிற்சி பண்ணின அந்த ஆள் வருத்ததோட வெளிய போறார்.இப்படி அங்க நின்ன பல பேரு சின்ன சின்ன காரணங்கள்னால அவங்களோட பாஸ்போர்ட் அப்பிளிகேசன் ரிஜெக்ட் ஆகி வெளிய போயிக்கிட்டேயிருக்காங்க....

       இத பார்க்கிற சேவியர் பயத்தோட அவன்  செர்டிபிகேட்ஸ் எல்லாம் வெரிபிக்கேசனுக்கு கொடுக்கிறான்.இவன் காலேஜ் டிஸ்கண்டிநியு. இப்ப கொஞ்ச நாளா ஒரு கடை வச்சு நடத்திக்கிட்டு  இருந்தான்.12த்  செர்டிபிகேட் கொடுத்து ஒவ்வொரு கவுண்டர்லையும் விசாரணை முடிஞ்சு கடைசியா பாஸ்போர்ட் ஆபிசர மீட் பண்றதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டான்.எல்லாம் சரியாதான் வச்சுருக்கான் பணமும் கட்டிட்டான்.அந்த ஆபிசர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டான். கடைசியா ஒரு கேள்வி கேட்டார் " ப்ளஸ் டு படிச்சு இத்தன வருஷமா எங்கயுமே வேலை பார்த்தது இல்லையானு அப்பவே இருந்து பிஸ்னெஸ் தான் பண்றீங்களா" னு  கேட்டார் . ஒரு முனு மாசம் முன்னாடி வரை சென்னைல வொர்க் பண்ணினேன் இந்த மாசம் தான் கடை ஆரம்பிச்சேன்."னு சொல்லவும் பிடிச்சுகிட்டார்.தம்பி அந்த கம்பெனி இருக்கிற ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருங்க உங்க பாஸ்போர்ட் கிளியர் பண்ணிரலாம்னு சொல்லிவெளிய அனுப்பிட்டார் .   
          
        மூணு மணி நேரம் காத்திருந்து பாஸ்போர்ட் எடுக்கமுடியாம போனதுல ரொம்ப நொந்துட்டான்.வெளிய வந்து நேரா பாஸ்போர்ட் ஆபிஸ்  வாசல்ல இருக்கிற டீகடைக்கு வந்து உட்கார்ந்தவன் "அண்ணன் சூடா  ஒரு இஞ்சி டீ போடுங்க"னு சொல்லிட்டு பெஞ்சல இருந்த நியுஸ் பே ப்பர எடுத்து திருப்புறான்.அதுல இருந்த ஒரு செய்தி பார்த்து மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டான் .அது  அரை பக்கத்திற்கு வந்தருந்தது  "  பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நான்காவது பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்"   


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

காதல் டூ கல்யாணம்



           ஹேய் ராஜி  இந்த பேப்பர்ல போட்டிருக்கிற நியூஸ் பாரேன் . "அவன விட  வயது மூத்த காலேஜ் புரோபஸர லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கான் ஒரு பையன் .அவங்க வீட்டிலையும் அவங்கள ஏத்துக்கிட்டாங்க..அவங்கலாம் ரொம்ப லக்கி இல்லடா  நா என் சொந்தகார பொண்ணு உன்ன பிடிச்சு போய் லவ் பண்ணி  கல்யாணம் பண்ணினேன். அதுக்கு உங்க குடும்பமே  நம்மள ஒதுக்கி வச்சுட்டாங்க.நமக்கு பொண்ணு பிறந்து அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் உன் அம்மா அப்பா  அண்ணனுங்க யாரும் வந்து அவ முகத்தை கூட பார்க்கல  அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமடி " தன்னுடைய ஆற்றாமையை  வெளிப்படுத்தினான் முத்துகுமார்.

         ஆமாங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாளாச்சு .எங்க அண்ணன் கல்யாணத்துக்கு  இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.இதுக்கும் கூட நம்மள கூப்பிட மாட்டாங்க போல " ராஜி இந்த   வார்த்தைகள சொல்லும் போது அவளுக்கு லேசா தொண்டை அடைக்க ஆரம்பிச்சிருந்தது.

           " ஏண்டி இப்ப பீல் பண்ற  விடு நாமளும் போய் பேசி பார்த்தாச்சு எல்லா சொந்தகாரங்களும் நமக்காக பேசிட்டாங்க உங்க  வீட்டில நம்மள வேண்டவே வேண்டாம்ங்கிறாங்க . நாம என்ன தான் பண்றது...நம்ம கதை சினிமா  படத்த விட பெரிசால  இருக்கு.நா ஒன்னு சொல்றேன் கேளு இப்ப உங்க அண்ணன்  கல்யாணத்துக்கு மட்டும் நம்மள கூப்பிடல நம்ம  குடும்பமும் சேரவே முடியாது " முத்துகுமார் சொல்லி முடிக்கவும் ராஜி அழ ஆரம்பித்துவிட்டாள். 

              இதே நேரத்தில ராஜி வீட்டில அவங்க அம்மா ரெண்டு அண்ணன் சித்தி இன்னும் சில உறவினர்கள் எல்லாரும் கல்யாண ஏற்பாடுகள்  பத்தி பேசுறதுக்காக உட்கார்ந்திருக்காங்க அவங்க சித்தி  தான் முதல பேச்ச ஆரம்பிச்சாங்க "ராஜிய கல்யானத்துக்கு கூப்பிட்டுட்டிங்களா "

           அவ பேச்ச  எடுக்கிற யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம் கோபமா பேசின  ராஜி சின்ன அண்ணன் அந்த அறைய விட்டு எந்திரிச்சு வெளிய  போறான்.அப்ப அங்க  இருந்த ஒரு பெரியவர் " நம்ம குடும்ப ஜோசியர்ட்ட பேசிதான நாள் குறிச்சிருக்கீய " என்று கேட்கிறார்.

     " இல்லயா பொண்ணு வீட்ல தான் நாள் குறிச்சாங்க நம்ம ஜோசியர் காசி போயிருக்கார் இன்னும் வரல" தயங்கிகிட்டே ராஜி அப்பா சொல்லிக்கிட்டிருக்கும் போதே  அவங்க குடும்ப ஜோசியர் அவங்க வீட்டுக்குள்ள நுழையவும் சரியா இருந்தது...

     "ஏம்பா என்ன கூப்பிடாமலே உன் மூத்தமகன் கல்யாணத்த முடிச்சிரலாமுனு பார்க்குறியா" செல்ல கோபத்தோட கேட்டுட்டே சோஃபால வந்து உட்காருராறு அவங்க குடும்ப ஜோசியர்.

       "வாங்கய்யா அப்படிலாம் ஒண்ணுமில்ல எப்ப வந்தீங்க ஊர்ல இருந்துன்னு..." வார்த்தைய முழுங்குராறு ராஜி அப்பா... 
       
         அதுக்கு ஜோசியர் "நா பஸ் இறங்கி நேர உங்க வீட்டுக்கு தான் வரேன் .ஆமா கல்யாணம்  என்னைக்கு வச்சுக்ருகிய?னு " கேட்டார்.

         "அய்யா தை பத்தாம்நாள் வர்ற திங்கள்கிழமை வச்சுருக்கோம் .நீங்க சொன்ன நட்சத்திரத்தில தான் பொண்ணு பார்த்துருக்கோம். 
நம்ம பிள்ளைகள் ஜாதகம் இது நீங்களும்  ஒரு தடவை பார்த்து அந்த நாள் நல்லது தான்னு கொஞ்சம் பார்த்து சொல்லிட்டிங்கனா எங்க எல்லார் மனசும்  திருப்தியாயிரும்" இப்படி சொல்லிட்டே மாப்பிளை பொண்ணு ஜாதக ஜெராக்ஸ் எடுத்து ஜோசியர் கையில கொடுக்கிறாரு  ராஜி அப்பா ...

        அத வாங்கின ஜோசியர் கொஞ்சம் திருப்பிட்டு கட்டத்த எண்ணி எதோ மன கணக்கு போடுறாரு, அப்படியே தன்  கையில இருக்கிற மஞ்சபைய எடுத்து தூசி தட்டி அதுக்குள்ளே இருக்கிற ஒரு ஏடு எடுத்து பார்க்கிறாரு "ஒரு ரெண்டு நிமிஷம் யோசனைக்கு அப்புறம் மெதுவா பேச ஆரம்பிக்கிறாரு"நா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க இப்ப உங்க பையனுக்கு நேரம் சரியில்ல,ஆனா நீங்க  தேதி குறிச்சு பத்திரிகை எல்லாம் குடுத்துட்டிங்க.  நீங்க நெனைக்கிற தேதியில கல்யாணம் பண்ணணும்னா   உங்க பையனோட  உடன் பிறந்தாளுக்கும் அவ மாப்பிள்ளைக்கும் புது துணி எடுத்து கொடுத்து உங்க குடும்பம் எலாரும் சேர்ந்து போய் உங்க குலசாமி கோவில்ல ஒரு பொங்கல் வச்சு படையல் போட்டுருங்க எல்லா பிரச்சனையும் தானா சரியாகிரும்"  சட்டுப்புட்டுனு ஆகிற வேலைய பாருங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு  அந்த ஜோசியர்..

       ஒரு நிமிஷம்  ஒருத்தர் முகத்த  ஒருத்தர் பார்த்துக்குறாங்க,அவங்க அப்பா அம்மா பெரியண்ணன் 
எல்லாரும் அப்புடியே அமைதியா இருக்காங்க ,திரும்ப உள்ள வர்ற ராஜியோட  சின்ன அண்ணன் மட்டும் இன்னும் கோபமாகி "ஏம்ப்பா இந்த ஜோசியர் சொல்றதெல்லாம் நம்பாதீங்க அவளெல்லாம் கூப்பிட முடியாது .நம்ம சம்மதம் இல்லாம அவளுக்கு பிடிச்ச  மாப்பிள்ளைய கட்டிட்டு போனால அவகிட்ட போயெல்லாம் நிக்க முடியாது" னு கத்துறான்.

        அப்ப ராஜியோட அப்பா அவ சித்திக்கிட்ட மெதுவா கேட்கிறாரு "ஏம்மா என் பொண்ணு வீடு எங்க இருக்கு ஒரு எட்டு போய் அவளயும் அவ அண்ணன் கல்யாணத்துக்கு கூப்பிட்டுட்டு வந்துருவோம்ங்கிறார்"

        இதே நேரத்தில அங்க ராஜி வீட்டில அவளுக்கு விக்கல் எடுக்குது....


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

நடைநேரத்தில் சில நிமிடங்கள்


          விசு பியூர் வெஜிடேரியன் எல்லாமே சரியா இருக்கனுமுன்னு நெனைக்கிறவன். கடவுள் பக்தி ரொம்ப அதிகம் கொஞ்சம் சுத்தம், ஆனா அடிக்கடி ரோட்டில எச்சில் துப்புவான். அதவச்சு அவன லாக் பண்ணுவான் சம்பத் இவன் விசுவோட வாக்கிங் பிரென்ட் .அதாங்க காலையில உடம்பு குறைக்கிறேங்கிற பேர்ல கதை அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு வருவாங்கள அந்த கூட்டத்த சேர்ந்தவங்க ... 

          சம்பத் ஒரு 'எக்கிடேரியன்' வெஜிடேரியன் தான் எக் மட்டும் சேர்த்துக்குற மாடர்ன் பையன் வேற வழியில்ல காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிதான ஆகணும்.  


         இரண்டு பேரும் மிடில் கிளாஸ் தான். தினமும் காலையில ஜிம் போகணுமுன்னு இவங்களுக்கு ஆசைதான் வசதியில்ல, அதனால 6 மணிக்கெல்லாம் முயற்சி பண்ண ஆரம்பிச்சி ஒரு வழியா 7 மணிக்கு வாக்கிங் போக  ...
தொடங்குவாங்க....

          இவங்க போற வழி எல்லாம் நெறைய கறிகடைகளா இருக்கும் சம்பத் சாதாரணமா வந்தாலும் விசு வால   மூக்க பொத்தாம வர முடியாது. தினமும் ஏதாவது சொல்லிக்கிட்டே வருவான் .அன்னைக்கும் அப்படிதான்  வாக்கிங் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில அந்த கறிக்கடைகள்  இருக்கிற ரோட்டு பக்கம்  வந்துட்டுருந்தாங்க ,அப்ப விசு சொல்றான் "ஏண்டா சம்பத் தினமும் இந்த கறியெல்லாம் எப்படித்தான் ருசிச்சு ரசிச்சு திங்கிறாங்களோ ரத்தமும் சதையுமா ப்பா நெனைச்சாலே உதறுது நிம்மதியா வாக்கிங் போக விடுறாங்களா வெஜிடேரியன் ஹோட்டல் நான் வெஜ் ஹோட்டல்னு இருக்கிற மாதிரி நான் வெஜ் கடைகள் தனியா ஒரு ஏரியா பிரிச்சு அங்க திறக்க வேண்டியதான இந்த கரி கடைய, இப்படி நாம போற ரூட் எல்லாத்திலையும்  ஒரு கடைய திறந்து வச்சு சாகடிக்கிறாங்களே  " புலம்பி தள்ளிட்டான் 

     சம்பத் அவன் பக்கமே திரும்பல மெதுவா காதில ஹெட் போன மாட்டிட்டு எப்.எம் கேட்டுக்கிட்டே  வாக்கிங்க  கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டான்...

    சம்பத்கிட்ட இருந்து பதில் வராததுனால அமைதியா இருந்த விசு ஒரு ரெண்டு தெரு போகவும் திரும்பியும் வேற ஒரு பிரச்சனைய ஆரம்பிச்சிட்டான் .அங்க ஒரு நாலஞ்சு பொண்ணுங்க விதவிதமா நகைகளா போட்டுக்கிட்டு எங்க கடையில் நகை வாங்குங்க உங்க ஊரே செழிக்கும்னு போஸ் குடுத்துட்டு நிக்கிறாங்க.. 

  "டேய் சம்பத் இங்க பாருடா அடுத்த கடைய நம்ம ஊர்ல ஆரம்பிச்சிடாங்க கடந்த ரெண்டு வருஷத்தில மட்டும் நம்ம ஊர்ல புதுசா ஒரு பத்து நகை கடை வந்துருக்கு. தங்க நகை விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டு இருக்கு .ஆனா இங்க எல்லா கடையிலையும் எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே தான் இருக்கு.இவங்களுக்கு மட்டும் எங்கேர்ந்துதான் காசு வருதோ?"விசு இப்புடி சொல்லி முடிக்கவும் டெண்சன் ஆயிட்டான் சம்பத்.

      "விசு கொஞ்ச நேரம் அமைதியா நடக்க மாட்டியா உனகெல்லாம் எதுக்கு டா வாக்கிங் ...." என்றான் சம்பத்

        விசு விடல "சம்பத் இப்புடி காலையிலேயே பல விஷயங்கள் மனச ஸ்பாயில் பண்ணிருதுடா, இந்த டென்சன்ல ஆபிஸ் போனா அங்கையும் பல தொல்லைகள் எனக்கு ஒரு நாள் போறது ஒரு யுகம் மாதிரி இருக்குடா என்னடா வாழக்கை இது ஒரு நிம்மதி இல்ல நம்மளால என்ன முடியும் இப்படி புலம்பிட்டே போயிற வேண்டியதான்...லைப்ல ஒரு சந்தோசம் இல்ல வேலைக்கு போறோம் சாப்பிடுறோம் தூங்குறோம் அவ்வளோதான் "விரக்தியா சொன்னான் விசு...

         அப்ப அங்க ஒரு குரல்  ரெண்டு பேர்  கவனத்தையும் ஈர்த்துது...

மல்லி கீரை.... அர கீரை.... பொண்ணாங்கண்ணி கீரை.....பசலிக்கீரை.....
  அம்மா அக்கா  கீரை வாங்கலியோ நாட்டுக்கீரை ஒரு கட்டு அஞ்சு ரூபா கீரை...கீரை.....கீரை...

      ஒரு நிமிஷம் அந்த ஆள  திரும்பி பார்த்த விசு "ஹலோ கீரை கொஞ்ச இங்க வாங்கனு  கூப்பிட்டான் "  

        அவர் வேகமா நடந்து இவங்ககிட்ட வர்றாரு இத பார்த்துகிட்ட்ருந்த சம்பத் ஏதோ முடிவு பண்ணின மாதிரி பேச ஆரம்பிச்சான் "விசு இந்த கீரைகாரர்ர பாருடா நான் நாலாங்கிலாஸ் படிக்கும் போதிலிருந்து இந்த அய்யா நம்ம ஏரியால தான் கீரை விக்கிறாரு ஒரு நாலாவது சிரிச்ச முகம் மாறினதில்ல இவங்களா இந்த உலகத்தில சந்தோசமா  வாழல" சும்மா என்னக்கு மட்டும் இப்புடி அப்புடின்னு புலம்பிறது நிறுத்து இல்ல நாளைல இருந்து நான் உன் கூட வாக்கிங் வர மாட்டேண்டா"  

     அதுக்குள்ளே அவர் வந்துட்டாரு விசு ஒரு இருபது ரூபாயைய அந்த  ஆள்கிட்ட குடுத்து ஒரு கட்டு கீரை கேட்கிறான்.அவர் கீரைய கொடுத்துட்டு "அய்யா என்கிட்டே சில்லறை இல்லங்க நீங்க தான் முதல் போனி அஞ்சு ரூபாய் இருந்த கொடுங்கன்னு கேட்கிறார்.   
  
     சம்பத் டக்னு அவன் பாக்கெட்ல இருந்து ஒரு அஞ்சு ரூபாய் நோட்ட எடுத்து கொடுக்கிறான்.அத வாங்கின அந்த கீரைகாரர் ஒரு நிமிஷம் அந்த நோட்ட பார்த்துட்டு  சம்பத் கிற "அய்யா ரொம்ப நன்றி இந்தாங்க இத வச்சுகோங்கனு " சொல்லி ஒரு சின்ன கட்டு கீரைய கொடுக்கிறாரு "

       எதுக்கு இதுங்கிற மாதிரி மனசில நெனைச்சுகிட்டு அத வாங்க கையா நீட்டினான் சம்பத் அப்ப "டேய் சம்பத் இதுக்குதான் இப்படி ஓசி கீரை வாங்கிறதுக்குதான் இந்த கீரைக்காரற பத்தி கொஞ்சம் நேரம் புகழ்ந்துக்கிட்டிருந்தியா சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்" என கிண்டலா பேசினான் விசு..

         பதில் சம்பத் கிட்ட இருந்து வரல அந்த கீரைகாரர்கிட்ட இருந்து வந்தது  "அய்யா அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு இந்த அய்யா ரூபா கொடுத்தப்ப என்  மனசு ரொம்ப சந்தோசமா இருந்த்து . அதான் கீரைய சும்மா கொடுத்தேன் இந்த ரூபாய் நோட்ட கொஞ்சம் பாருங்கனு  இவங்க பக்கமா திருப்பி காட்டினார்.

         அதுல "நல்ல பெரிய எழுத்துகள்ல  "இறைவன் உன்னை உயர்த்துவார் மகிழ்ச்சியாயிரு"னு  எழுதியிருந்தது.


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011