Thursday, August 30, 2012

அ...............க சில கவிதைகள் - 1




அ...............க ஒரு கவிதை :-1  (ஆகஸ்டு -2012  மூன்றாவது வாரம்.)


என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
       யோசிக்காமல் சொன்னேன்


காதல் வந்தால் கவிதை தானாய் வரும் என்பார்கள்
      கவிதையே காதலியாய் வந்திருக்கிறதே!
"இதுதான் காதல் கவிதையோ?"

******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :-2  (ஆகஸ்டு -2012  நான்காவது வாரம் திங்கள்கிழமை )

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
      வார்த்தைகளுக்குள் தொடங்கியது போட்டி
வார்த்தை வெளிவரவில்லை


    நான் நீ என்று
 போட்டி போட்ட வார்த்தைகள்
 திக்கி திணறின,
மௌனமாய் மனதிற்குள்ளேயே
 உன் பெயரை மட்டும் உச்சரித்தேன்...........
           
                                                
******************************************************************************************************

அ............... ஒரு கவிதை :-3   (ஆகஸ்டு -2012  நான்காவது வாரம் புதன்கிழமை )

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
     வேகமெடுத்தன.........
 என் சிந்தனைகள்
சிந்தனை எல்லாவற்றிலும்
 நீயே இருப்பதால் 
        கவிதை வரவில்லை
புன்னகையே வந்தது!!!

******************************************************************************************************


இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...