Wednesday, September 19, 2012

அ...............க சில கவிதைகள் - 2


அ...............க ஒரு கவிதை :- 4  (செப்டம்பர்-2012 முதல் வாரம்.)


                            
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
முதல் நாள்
முதல் சந்திப்பு
உன் அலுவலக வாசலில்
உன்னை நான் பார்த்தபோது
உணர்ந்தேன்
நீ ஒரு காட்சி
கவிதை,
நீ நேரில் பேசிய
முதல் வார்த்தை
ஒரு
ஒலி கவிதை
ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தாலே பிறக்கும்
ஆயிரம் கற்பனைகள்
ஒவ்வொன்றும்
ஒரு கவிதை தொகுப்பு....!

**********************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 5(செப்டம்பர்-2012 இரண்டாவது வாரம்.)

                              
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! 
குழந்தை பெற்றெடுக்க
தகுதியுள்ள குழந்தை
நீ! 
என் குழந்தையை 
பெற்றெடுக்க தகுதியுள்ள 
குழந்தையும்
நீ தான்...!

***********************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 6  (செப்டம்பர்-2012 மூன்றாவது வாரம்.)

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! 
முதலிலேயே முடியாது என்றேன் 
சொல்லு அம்மு!
என்றாள்,
ம்ஹூம் என்றேன்,
சொல்லபோறியா இல்லையா குட்டி 
என்றாள்
மீண்டும் மறுத்தேன்,
என் செல்லம்ல சொல்லுமா
தங்கம்ல 
ப்ளீஸ் புஜ்ஜிம்மா
கட்டிப்புள்ள  
தொடர்ந்தன வார்த்தைகள்
தாமதத்திற்க்கு
பலன் கிடைத்தது 
உன் கொஞ்சல்களை 
சரியாய் அடுக்கி பார்த்தேன் 
எனக்காக நீ படைத்த 
புதுக்கவிதை பிறந்திருந்தது,

***********************************************************************************************
இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து... 

Monday, September 3, 2012

என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

" முற்பகல் செய்யாவிடில் நிச்சயம் பிற்பகலில் விளையாது "

 நம் முன்னோர்கள் 
                காக்கைக்கு தினமும் சாதம்
                 படைத்து உணவளித்தார்கள்,

நம் முன்னோர்கள்
              சிறு உயிரிகளுக்கும்
              மாக்கோலமிட்டு உணவளித்தார்கள்,

நம் முன்னோர்கள் 
            சாலைகளில் தாகமாய் கடந்து செல்லும்
            கால்நடைகளுக்காக
            வீட்டு வாசலிலேயே தண்ணீர் வைத்தார்கள் 
  
இன்று நாம் ?

            இந்த கேள்வி நீண்டநாளாய் என்
            மனதை உறுத்திக்கொண்டே இருந்தது....

            அப்பாடா !

           இன்று விடை கிடைத்துவிட்டது.....

          சாலையில் வெவ்வேறு இடங்களில் 
          இரு காட்சிகள் ...

             இந்த நாட்டின் சாதாரனர்களுக்கு
             அரசு அளிக்கும் ரேசன் பொருட்கள் 
             கொண்டும் செல்லும் வாகனம்
             ஊரெங்கும் அதை சிதறிகொண்டே
             செல்வதை பார்த்த போது 
             என் முதல் 
             கவலை குறைந்துவிட்டது.

            இந்த நாட்டின் சாதாரனர்களுக்கு 
           அரசு அளிக்கும் குடிதண்ணீர் வாகனம்
            ஊரெங்கும் சிந்தி செல்லும் தண்ணீர்  
            இரண்டாவது 
            கவலையை குறைத்துவிட்டது.


           எங்கேயாவது அலைபேசி கோபுரங்களின்
          கதிர்வீச்சுக்கு தப்பித்த பறவைகளும்,
          ரசாயன உரங்களுக்கு தப்பித்த
          சிறு பூச்சிகளும் நிச்சயம் இவற்றை உண்டு 
          சில காலம் தங்கள் ஆயுளை நீட்டித்துகொள்ளும்...

          பாவம் என்னதான் இந்த உலகம்
          நமக்கு  மட்டும் தான்
          என்று நம் மனித இனம்  சர்வாதிகாரம் செலுத்தினாலும்
          எப்படியோ தப்பி பிழைத்து கொள்கின்றன
          அதிர்ஷ்டசாலி உயிரினங்கள் சில ...
                                            
          நாளை நம் தலைமுறை நம்மை காரி உமிழலாம்..

          "எல்லா உயிரினங்களையும் ஒளி காட்சிகளில்
           மட்டுமே 
          விட்டு சென்றுவீட்டீர்களே....
           உங்கள் மனித நேயம் வாழ்க என்று..... "

இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...
செப்டம்பர்-2012