Monday, March 14, 2011

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்! ! !



      குமாருக்கு
 காலையில அவன் பேங்க் பேலன்ஸ் செக் பண்ணதிலருந்து மனசே சரியில்ல....


  அவன் மனைவிகிட்ட இருந்து முணு மிஸ்டு கால் இவன் போனையே எடுக்கல....


   இந்த மாசம் சம்பளம் இன்கிரிமென்ட் போடுவாங்கன்னு ஒரு வருஷமா காத்துக்கிட்டிருந்தான். நெறைய ப்ளான்லாம் வச்சுருந்தான்.பட் எல்லாம் ப்ளாப்... அவனுக்கு 1000 ரூபாய் தான் இன்கிரிமென்ட் போட்டுருக்காங்கங்கிறது கூட அவனுக்கு வருத்தமா இல்ல, ஆனா அவன் ஜுனியர்ஸ்ல சிலருக்கு 4000௦௦௦ ரூபாய் இன்கிரிமென்ட் போட்டுருக்கிறத நெனைச்சா அவனுக்கு இன்னும் அவமானமா இருந்தது.

   யார்கிட்டயும் பேசல....

    அவன் சீட்ல உட்கார்ந்து எம்.டிய மனசுக்குளையே திட்டி தீர்த்துக்கிட்டுருக்கான். வொர்க்கர்ஸ் பத்தி யார் கவலைபடுறாங்க, அவங்க வருமானம் வருஷம் வருஷம் ஏறுது. நமக்கும் சம்பளம் கூட்ட வேண்டாம் ச்சே...அவன் எரிச்சல் பட்டுக்கிட்டிருக்கும்போதே அவன்  மனைவிகிட்டே இருந்து ஒரு போன்கால் வருது ...




  முதல் கால அவன்  அட்டெண்ட் பன்னல ...

இரண்டாவது, மூணாவது தொடர்ந்து ஒரு அஞ்சு மிஸ்டு  கால்...

குமார் போன அட்டென்ட் பண்றான்...

ஹலோ......சொல்லு

    எதிர்முனையில அவன் மனைவி " ஹலோ என்னங்க சிவகாமி அம்மா நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்து 2 வருஷம் ஆச்சு, இந்த மாசமாவது ஒரு நூறு ரூபா சம்பளத்துல ஏத்தி கொடுக்க முடியுமானு கேட்கிறாங்க "...

     "ஏய் உனக்கு அறிவில்ல ஆபீஸ் நேரத்தில இப்படி தொந்தரவு பண்ற, அவங்க துவைக்கிற நாலு துணிக்கு மாசம் முண்ணூறு ரூபாவே அதிகம். இதுல கூட 100 ரூபா வேற குடுக்கணுமோ வையுடி போனனு கத்திட்டு போன வச்சுட்டான்.....
     


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் இரண்டாவது வாரம் ...

1 comment:

குரங்குபெடல் said...

குமுதத்துல வர்ற மாறி இருக்கு . . நன்றி