Friday, March 25, 2011

பூச்சாண்டி !!!


       
        ராமு 6.3அடி உயரம் கொஞ்சம் ஸ்மார்ட் பார்க்கிறதுக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும் மனசளவில ரொம்ப சாப்ட் நேச்சர் தான்.

      காதல் பண்றதுக்கு பயந்து வருஷத்த கடத்திட்டான் 29 வயசில அவன் வீட்டுலயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணத்த முடிச்சு வச்சுட்டாங்க...

      அவன் மனைவிக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலைங்கறதால காலைல சீக்கிரமாவே கிளம்பி போயிருவாங்க. அதனால தினமும் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கிரீச்ல கொண்டு விடுறது ராமுவோட பொறுப்பு. குழந்தைய சாப்பிட வைக்கிறதுக்குள்ள தினமும் அவனுக்கு போதும் போதும்னு ஆயிடும் .

    கடைசியா அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான் ரோட்ல நின்னு போற வர்ற ஆட்கள குழந்தைக்கு காட்டி "சாப்பிடு இல்ல, அந்த மாமாக்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," "இந்த தாத்தாகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," இப்படி பயமுறுத்தியே தினமும் சாப்பிட வச்சுட்டான். இன்னொரு பக்கம் போறவர்றவங்கள்ல குழந்தைய வச்சு கலாய்க்கிரதில இவனுக்கு ஒரு சந்தோசம்.

   இன்னைக்கும் அப்படி அவன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துகிட்டு வீட்டுக்குள்ள நுழையுறான் அப்ப ஜன்னல் ஓரத்தில ஒரு சத்தம் "ஏய் கஸ்துரி பாரு ராமுமாமா வந்துட்டார் சாப்பிடுரியா இல்ல உன்ன தூக்கிட்டு போய்டுவார் சீக்கிரம் சாப்பிடுன்னு" ஒரு குரல்...




ஒரு நொடி அதிர்ச்சி ஆகி அந்தபக்கம் எட்டி பார்க்கிறான் ராமு,

 'அவன் முகத்த பார்த்ததும் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிற குழந்தை மெதுவா சாப்பிட வாய திறக்குது '!!!







இப்படிக்கு 

மு.வெ.ரா-
திருநெல்வேலியிலுருந்து


மார்ச் மூன்றாவது வாரம்...2011





Monday, March 14, 2011

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்! ! !



      குமாருக்கு
 காலையில அவன் பேங்க் பேலன்ஸ் செக் பண்ணதிலருந்து மனசே சரியில்ல....


  அவன் மனைவிகிட்ட இருந்து முணு மிஸ்டு கால் இவன் போனையே எடுக்கல....


   இந்த மாசம் சம்பளம் இன்கிரிமென்ட் போடுவாங்கன்னு ஒரு வருஷமா காத்துக்கிட்டிருந்தான். நெறைய ப்ளான்லாம் வச்சுருந்தான்.பட் எல்லாம் ப்ளாப்... அவனுக்கு 1000 ரூபாய் தான் இன்கிரிமென்ட் போட்டுருக்காங்கங்கிறது கூட அவனுக்கு வருத்தமா இல்ல, ஆனா அவன் ஜுனியர்ஸ்ல சிலருக்கு 4000௦௦௦ ரூபாய் இன்கிரிமென்ட் போட்டுருக்கிறத நெனைச்சா அவனுக்கு இன்னும் அவமானமா இருந்தது.

   யார்கிட்டயும் பேசல....

    அவன் சீட்ல உட்கார்ந்து எம்.டிய மனசுக்குளையே திட்டி தீர்த்துக்கிட்டுருக்கான். வொர்க்கர்ஸ் பத்தி யார் கவலைபடுறாங்க, அவங்க வருமானம் வருஷம் வருஷம் ஏறுது. நமக்கும் சம்பளம் கூட்ட வேண்டாம் ச்சே...அவன் எரிச்சல் பட்டுக்கிட்டிருக்கும்போதே அவன்  மனைவிகிட்டே இருந்து ஒரு போன்கால் வருது ...




  முதல் கால அவன்  அட்டெண்ட் பன்னல ...

இரண்டாவது, மூணாவது தொடர்ந்து ஒரு அஞ்சு மிஸ்டு  கால்...

குமார் போன அட்டென்ட் பண்றான்...

ஹலோ......சொல்லு

    எதிர்முனையில அவன் மனைவி " ஹலோ என்னங்க சிவகாமி அம்மா நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்து 2 வருஷம் ஆச்சு, இந்த மாசமாவது ஒரு நூறு ரூபா சம்பளத்துல ஏத்தி கொடுக்க முடியுமானு கேட்கிறாங்க "...

     "ஏய் உனக்கு அறிவில்ல ஆபீஸ் நேரத்தில இப்படி தொந்தரவு பண்ற, அவங்க துவைக்கிற நாலு துணிக்கு மாசம் முண்ணூறு ரூபாவே அதிகம். இதுல கூட 100 ரூபா வேற குடுக்கணுமோ வையுடி போனனு கத்திட்டு போன வச்சுட்டான்.....
     


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் இரண்டாவது வாரம் ...

Tuesday, March 8, 2011

அம்மா அம்மாதானே !


நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்

குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா...

" ஏய் சூ...போ...."

அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா...

"மியாவ்...மியாவ்...
"

இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...09-03-2011

Sunday, March 6, 2011

காதலா ! காதலா !


     
         எப்பவும் காலேஜ் முடிஞ்சா தனியா வீட்டுக்கு வர்ற உமா இன்னைக்கு அவங்க அப்பாவோட வண்டியில வந்து இறங்கறத பார்க்கும்போது அவங்க அம்மா கலைவாணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு...

"என்ன உமா இவ்ளோ சீக்கிரம் காலேஜ் விட்டு வந்துட்ட?"

பதில் உமா அப்பாக்கிட்ட இருந்து வருது....

"ஆமா உன் பொண்ணு காலேஜ் படிக்கிற இலட்சணத்தை இன்னைக்குதான பார்த்தேன்...பஸ் ஸ்டாண்ட்ல யாரோ ஒரு பையன் கூட நின்னு பேசிகிட்டிருக்கா..."வார்த்தைகள் வேகமாய் வந்தன..

என்னங்க சொல்றிங்க ?

   "ம்...கேட்டா ரொம்ப நல்ல பையன்ப்பா என் கிளாஸ்மெட்,அவங்க அப்பா அம்மாவுக்குலாம் கூட என்னை நல்ல தெரியும்ங்கிறா..."

  அங்கும் இங்கும் நடக்கிறார் ஏதோ நினைத்தவர் மீண்டும் உமாவ பார்த்து பேசுறார். "ஏய்...உமா இந்த காதல் கீதல்னு ஏதாவது பேசிகிட்டிருந்த நடக்கிறதேவேற, என் சொந்தத்துல நல்ல மாப்பிள்ளையா பார்த்து நானே கட்டிவைக்கிறேனு" கத்திட்டு அந்த இடத்த விட்டு நகர்ந்துட்டார்...

   அந்த வார்த்தை காற்றில கரையிரதுக்குள்ள உமா மனசுக்குள்ள அவங்க அப்பா என்னைக்கோ தன்ன பத்தி பெருமையா சொன்ன சில வார்த்தைகள் திரும்ப திரும்ப ஓடுது "உங்க அம்மாவை நா காதலிச்சப்ப வேறசாதி பையன் எப்படின்னு தெரியலையேனு பல காரனங்கள் சொல்லி எதிர்த்த உங்க தாத்தாவ என் உழைப்பால முன்னேறி போராடி சம்மதிக்க வச்சேன் தெரியுமா"....




"காற்றில் உயிர் இருக்கிறது! ஆம் எத்தனை உயிர்களின் உணர்வுகள் அதில் கலந்திருக்கிறது!"


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் முதல் வாரம்.....