Tuesday, December 14, 2010

விழாக்களும் சில விளக்கங்களும்! -1




வணக்கம் நண்பர்களே!

விழா நாள் :-13-12-2010 திங்கள்கிழமை

"உயிர்மெய் பதிப்பகத்தின் புத்தக வெளியிட்டு விழா"


சிறப்பு விருந்தினர்கள்:-கனிமொழி தொடங்கி சில அரசியல் பிரபலங்களும்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சில இலக்கிய பிரபலங்களும்,மிஷ்கின் போன்ற சில திரையுலக பிரபலங்களும்,

நேரம்:- மாலை 6 மணிக்கு மேல் 10மணிக்குள்

இடம்:-சென்னை காமராஜர் அரங்கம்


அடிக்கடி நான் என் நண்பர்களிடம் இப்படி சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது உண்டு "கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்!தீர விசாரிப்பதே மெய்!" என்பார்கள்.ஆனால்"நான் தீர விசாரிப்பதும் பொய்யே என்பேன்!" ஏன்னென்றால்,அது நாம் விசாரிக்கும் நபர்களை பொறுத்தது.ஆகவே"அனுபவித்து உணர்வது மட்டுமே உண்மை!" என்பது என் தனிப்பட்ட கருத்து.(ஆம் இது கூட என் அனுபவத்தில் நான் உணர்ந்ததே!).இந்த 23 வயதுக்குள் அப்படி என்ன பெரிதாய் அனுபவித்து அறிந்து கொண்டாய் ?என்று நீங்கள் கேட்கலாம்,ஆனால் எனக்கு எப்பவுமே ஒரு நம்பிக்கை உண்டு.இந்த "உலகின் அத்தனை படைப்புகளிலும் நாம் கற்றுக்கொள்ள எதோ ஒரு விஷயம் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது". சிலருக்கு சிலரை பிடிக்கலாம் சிலரை பிடிக்காமல் இருக்கலாம். அதனால் சின்ன முரண்பாடுகளுக்காக (என் ப்ளாக்கின் டைட்டில் கார்டை ஒரு முறை படிக்கவும்.)யாரையும் வெறுக்கமால் விலகி நின்று பார்ப்பது அப்பொழுது இல்லாவிட்டாலும் கூட,பின்னால் பல நல்ல விசயங்களை நாம் கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.


என் அப்பா காவல்துறையில் இருந்தார்.ஆனால் அதற்கு நேர் எதிர்குனம் கொண்டவர்.அமைதியான நபர் என்னையும் அப்படியே வளர்த்துவிட்டார்.அதனால் சின்ன வயதிலிருந்தே என்னிடம் யாரிடமும் எதற்காகவும் சண்டை போடதே யாராவது உன்னை அடித்தால் கூட ஆசிரியரிடம் தான் சொல்ல வேண்டும்.பதிலுக்கு நீ சண்டையிட கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்ததால் தான் என்னவோ நான் சிறு வயதிலிருந்தே யாரிடமும் விளையாட்டுக்கு கூட சண்டை போட்டது கிடையாது.எல்லாரிடமும் நல்ல படியாகவே பழக முயன்று வருகிறேன்.


எதற்காக இவ்வளவு பெரிய முன்னுரை வெங்கட்ராமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது சம்பந்தம் இருக்கிறது."அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிளாஷ் பாக்" நான் சென்னைக்கு வந்த கடந்த இரண்டு வருடங்களில் முதல் ஒரு மாசம் நான் ஆசைபட்டு வந்த சினிமா துறையில இயக்குனர் திரு. ஜீவா அவர்களின் உதவியாளர் ஸ்ரீநாத் இயக்கிய முத்திரை படத்தின் இறுதிகட்டப் பணிகளின் போது தான் உதவிஇயக்குனராய் போய் சேர்ந்தேன்.போர்பிரமேஸ் ஸ்டுடியோவில் ஓர் 30 நாள்களை செலவளித்தேன்.அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜீவாவின் மனைவி அணிஸ் ஜீவா,அந்த படத்தில் அவருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு தொடர்ந்து அந்த குழுவில் நான் இயங்க முடியாமல் போனது.அந்த படத்தில் இருந்து தான் கிரியேடிவ் டைரக்டர் என்ற புது பெயரை கிரேடிட்சில் போட்டுக்கொண்டார்.அணிஸ் ஜீவா.உண்மையில் தமிழ் சினிமா பற்றிய சில புரிதல்களை ஏற்படுத்தியது இந்த காலகட்டம.

(அதற்காக என் ஊரில் ஹலோ பண்பலையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த "ரேடியோ ஜாக்கி" வேலையையும் விட்டுவிட்டு வந்தேன்-"விதி யார விட்டுச்சு"-ஆனா முயற்சி வீண் போகல! "ஆபரேஷன் சக்சஸ் பட் பேசன்ட் நிலைமை பொறுத்திருந்து தான் பார்க்கனும்")

பின் சில மாதங்கள் கழித்து மக்கள் தொலைகாட்சி என்று ஊடகம் சார்ந்த துறைகளில் இயங்கினாலும்,நிறைய விழாக்களில் அலுவல் காரணமாக கலந்துகொண்டாலும் நான் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வு இந்த வார தொடக்கத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த ஒரு பிரபல இணைய எழுத்தாளரின் 7 புத்தகங்கள் வெளியிட்டு விழா தான் ஏன் இவ்வளவு நேரம் அவர் பெயரையே குறிப்பிடாமல் எழுதி வருகிறேன் என்றால் அவருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரவளர்கள் அதிகமோ(உண்மையா?-அப்புடித்தான் சொல்லிகிராங்காப்பா)அதே அளவுக்கு எதிர்ப்பாளர்கள் அதிகம் ஆகவே அவரை பற்றிதான் எதோ எழுதுறேன்னு நெனைச்சு முழுசா படிக்காம விட்ருவாங்கனுதான் அவர் பெயர இப்ப சொல்லல கட்டுரைய முடிக்கிறதுக்குல சொல்லிறேன். ]


இந்த விழாவுக்கு என் நண்பர் திரு.பிரசாத் அவர்களோட கிளம்புனேன்.சார் ஏன் இவரோட விழாவுக்கெலாம் போறீங்கனு கேட்டதுக்கு வா நெறைய காமெடி நடக்கும்னு சொன்னார்.எனக்கு அந்த எழுத்தாளரோட எழுத்துக்கள்ல அவ்வளவு பரிட்ச்சியம் கிடையாதுனாலும் அவர் கூப்பிடதுக்காக போனேன் சொன்ன மாதிரி வந்துருந்த எல்லாரும் வஞ்சபுகழ்ச்சியணியா அடிச்சு விட்டாங்க.சரி இப்ப மேல கொடுத்த முன்னுரையோட விளக்கத்துக்கு வரேன்.நா சின்ன வயசிலுருந்தே நல்ல பழகுறது நாம் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம்னு உணர்ந்தேனோ அதே மாதிரி நாம சந்திக்கிற ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நாம் கத்துக்கிற ஏதாவதொரு ஒரு விஷயம் நிச்சயமா இருக்கும்னு நம்புறேன்.அந்த நம்பிக்கையில தான் இந்த விழாவுக்கும் போனேன் கலந்துகிட்டவங்க பேசினவங்களல பல தகவல்கள் நமக்கு உபோயோகமாச்சு.அதுல சிலவற்றை இங்க பகிர்ந்துக்கலாம்னு ஆசைப்படுறேன்.




மிஷ்கினோட பேச்சு:-

அவர் இத ஒரு சுயவிளக்க கூட்டமாதான் நடத்துனார். ஒரு வழியா அவர் நந்தலாலா படத்த தகேஷி கிட்டநேவோட "கிக்குஜீரோ" பாதிப்பு தாணு ஒத்துக்கிட்டார்.இந்த உலகத்தில எல்லாமே "இன்ஸ்பிரேசன்" தான்.அப்புடிங்க்றது ஏன் தனிப்பட்ட கருத்து.இத இப்படி பார்க்கலாம் "ஆதாம்" படைத்த கடவுள் அவன் உருவமைப்பில் சில மாற்றங்களோடு உருவாக்கியது தான் "ஏவாள் " (கடவுள நம்புறவங்களுக்கு இந்த உதாரணம்) பறவையோட இன்ஸ்பிரேசன்ல உருவானதுதான் விமானங்கள், (அறிவியல நம்புறவங்களுக்கு இந்த உதாரணம்)இப்படி பல உதாரனங்கள சொல்லிகிட்டே போகலாம். ஆனா ஒரு விசயத்த உள்வாங்கிகிட்டு ஒரு புது வடிவம் கொடுக்கிறதோ அல்லது புது பொருள கண்டுபிடிக்கிறதுக்கு பேரு தான் "இன்ஸ்பிரேசன்"அத அச்சு பிசகாம செய்யுறது பேரு நம்ம பள்ளி நாள்கள்ல சொல்ற மாதிரி வாமிடிங்னு சொல்வாங்க...
(மனப்பாடம் பண்ணி எழுதறது என்ன படிச்சோம்னு கடைசி வரைக்கும் புரியாது )

இங்க என்ன நடக்குது.சரி அத ஒத்துகிறது தப்பு இல்ல.ஆனா அத நம்ம கலைஞர்கள் செய்யுறதில ஏன்னா நம்ம மக்களும் ஒரே வார்த்தையில காப்பி அடிச்சிட்டான் இவன்லாம் ஒரு டைரக்டராணு சொல்லிருப்பாங்க.அதுக்கு பின்னாடி உள்ள பல முயற்சிகள் அந்த இயக்குனரோட சில நல்ல கற்பனைகள் யாருக்கும் தெரியாம மறைஞ்சு போயிருது. மாறவேண்டியது அவர்கள் மட்டுமல்ல நாமும் தான்.ஆமா உண்மையிலயே மிஷ்கின் படத்தின் சில வசனங்கள,சில கதாபத்திரங்கள்,நல்லா பண்ணியிருந்தார்.அத பத்தி கொஞ்சம் நெனைச்சு அவர ஊக்ககபடுத்துவோம் ஏன்னா நம்ம தமிழ் சினிமாவில கமல்,மணிரத்னம்க்கு அப்புறம் இந்த நல்ல முயற்சிகள் செய்யுறதுக்கு இங்க ஆள் இல்ல,இப்ப யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் நம்ம இளம் இயக்குனர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நம்ம ஒட்டுமொத்த புறக்கணிப்பு முலமா தடை போடாம,அவர்கள் (கமல்,மணிரத்னம்)செய்த சில
இன்ஸ்பிரேசன் படங்களை நாம் ஏற்று அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மற்ற கலைஞர்களுக்கும் கொடுத்து நல்ல விசயங்களை பாராட்டுக்களோடும் தவறுகளை ஆரோக்கியமான விமர்சங்களோடும் கொடுத்தோம்னா,நம் தமிழ் சினிமாவில் பல மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது.(ஏனென்றால் நல்ல சினிமா திரையரங்கம் கிடைக்காமல் தவித்தாலும் சரியாய் திட்டமிட்டால் ஜெயிக்கும் என்பதற்கு"பேரா நார்மல் ஆக்டிவிட்டி" போன்ற ஹாலிவூட் படங்களின் வெற்றி சூத்திரங்கள் ஒரு உதாராணம்)


அடுத்து மொத்த சிறப்பு விருந்தினர்களில் என்னை ஈர்த்தவர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்:-


"வதை"
என்கிற ஒரு செயலை பற்றி அவர் பேசிய பேச்சு பல கேள்விகளை ஏன் மனசுக்குள் ஏற்படுத்தி கொண்டே இருந்தது. நாம் எப்படி சின்ன வயதிலுருந்தே வன்முறையை மனதுக்குள் விதைக்கிறோம் என்பதை சொல்லியது மிக அருமை. அதாவது குழந்தைகளை பயமுறுத்துவது,துன்புறுத்துவது அவன் நன்மைக்காக தான் செய்கிறேன்னு சொல்லி செய்யுற தனிமை படுத்துற தண்டனைகள்.என ஒண்ணாரெண்டா?




"என் பால்ய பள்ளி தோழன் ஸ்டாலின்னு ஒரு பையன் அவங்க அப்ப அவன அடிக்கிற விதம் ரொம்ப புதுசு ஈக்குச்சிகள்ல எடுத்து ஒன்னு ஒண்ணா அவன் கால்ல வீசுவராம்.அந்த பிஞ்சு கால்ல குச்சி பட்டு பட்டு ரத்தம் வடிஞ்சு மறுநாள் பள்ளிக்கு வந்து காட்டுவான்.அவன் கால் என் மனசுல அப்படியே நினைவிருக்கு.ஏன் பக்கத்து வீட்டுல என் இன்னொரு நண்பன் பைசல் இப்ப சவுதில எதோ ஒரு பாலைவனத்தில வேலை பார்க்கிறான் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு அப்பஅப்ப போன் பண்ணுவான் சொற்ப சம்பளத்துக்காக அவன்படுற பல கஷ்டங்களையும் மறந்து அப்ப அவன் அதிக பட்சம் கேக்கிறது நல்லா இருக்கியா? புதுசா என்ன படம் ரிலீஸ் ஆகிருக்கானுதான் கேட்பான் (இந்த மாதிரி ரசிகர்களா அடுத்த நிலைக்கு கொண்டு போக தமிழ் சினிமா இன்னும் தயராகலைன்னு தான் சொல்லணும்.)அவனுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும்.எதோ தப்பு செஞ்சதுக்காக அவன அவங்க வீட்டில தலைகீழா தொங்கவிட்டு மிரட்டுனாங்க.அத பார்த்தே நா அமைதியா வளர ஆரம்பிச்சேன்னு தான் சொல்லணும்.எங்க வீட்டில இவ்வளவு தண்டனைகள் இல்லேனு தான் சொல்லணும்.ஆனா நா ஆறாம் வகுப்பிலேர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிச்ச சேவியர்ஸ் பள்ளியில வித விதமா தண்டனை கொடுப்பாங்க குணிய வச்சு முதுகுல அடிக்கிற சத்தம் மட்டும் கிளாஸ் புல்லா கேட்கும்.அதே மாதிரி விரலுக்கு இடையில பென்சில வச்சு அமுக்கிறது,முக்கு நுணிய நகத்தால கில்லுறது,அப்படின்னு ஒரு புது டிக்சனரி போடுற அளவுக்கு தண்டனைகள் கொடுப்பாங்க.

இதோட பாதிப்புகள் பெற்றோருக்கு வீட்டோடையும்,வாத்தியாருக்கு அந்த வகுப்போடையும் முடிஞ்சுருது.ஆனா இத அனுபவிக்கிற குழந்தைகள்,அத சமுகத்தில செயல் படுத்தி பார்க்க ஆசப்படுறாங்க,ஏன் அவங்க பெற்றோருக்கே அவங்க பெரியவங்க ஆன பிறகு இந்த தண்டனைகள திருப்பி கொடுக்க நினைக்குற பிள்ளைகளும் இருக்கத்தான் செய்யுறாங்க. இது இனியாவது மாறனும்னா பெற்றோர்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் தான் அதிகம் இருக்கு.(நாங்களும் தயராகிட்டிருக்கோம்ல )

இப்படி பல எண்ண அலைகள என் மனசுல எஸ்.ராவோட பேச்சு ஏற்படுத்திச்சு. அப்புறம் சாரு,அவர் பேச தொடங்கின சில நிமிடங்களியே நாங்க கிளம்பிட்டோம்.(அதாங்க இந்த 7 புத்தகங்கள் வெளியிட்டு விழா நாயகன் சாரு நிவேதாவோட விழா தான் நா இந்த வாரம் கலந்துகிட்டது.சென்னையில இருக்கிற பெருவாரியான வேற்று மாவட்டத்தினர் எல்லாருமே பல சந்தோசங்கள மறந்துட்டு சென்னையில வாழுறது பொழப்புக்காக மட்டும்மில்ல,இந்த மாதிரி மாநகர் முழுக்க நடக்குற நிகழ்வுகளுக்காகவும்தான்,ஆமாங்க ஒரு விழாவுல கொண்டாட்டங்கள்,சந்தோசங்கள்ல தாண்டி நம்ம கத்துக்கிறதுக்கு எதோ ஒரு விசயம் இருந்துகிட்டு தான் இருக்கு.பல புதிய உணர்வுகள்ல கொடுத்து நம்மள புத்துணர்வோட வச்சுருக்கும்ங்கறது அந்த விழாக்களா அனுபவிச்சா தான் உணர முடியும். "அதனால எல்லா விழாக்களையும் கிடைக்கிற அனுபவங்கள்ல யாரோ ஒருத்தருக்காக நாம ஏன் இழக்கணும் ?...."

' இது என் அலுவலக நண்பர் திரு.ராஜ்குமார்(படத்தொகுப்பாளர்)என்னிடம் ஒருநாள் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் சில இந்த இடத்தில் பொருந்தி போகிறது.ஆகவே அதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்."உன்னை போல் உன் அயலானையும் நேசி" இது இயேசு சொன்னது,சாதாரண வார்த்தை இல்ல இது. நாம் நம்ம உணவு,உடை,இருப்பிடம் சுகம்,சந்தோசம் எல்லாத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,அதே விசயங்கள் நம்ம சக மனிதர்களுக்கும் பூர்த்தி செய்ய வேண்டியது நம்ம கடமை '


இது தான் அந்த வார்த்தைகளோட சாராம்சம். இப்படி வாழ முடியாவிட்டாலும் நம் சக மனிதர்களை வதைக்காமலாவது இருக்க முயற்சிக்கலாமே!இது தான் அந்த விழாவில் எனக்கு கிடைத்த முக்கியமான விளக்கங்கள்ல ஒண்ணு....

கவலைகள் மறந்து மனித கடலில் சங்கமிக்கிறது ஒரு வரம்.அது விழாக்களில் மட்டுமே நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.....






விழாக்களும் விளக்கங்களும் தொடரும் .............



மு.வெ.ரா
18-12-10...

No comments: