Wednesday, December 1, 2010

என் கவிதைகள்-2( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)



"முகங்களே முகமூடிகளாய்"

மின்சாரரயில் புறப்பட்டு வேகம் எடுத்த பின் நிதானமாய் ஏறும் இளைஞர்களை பார்க்கும் பொழுது,

அழகான மழையை ரசித்து செல்லும் நெடுஞ்சாலை பயணங்களில் அசுர வேகத்தில் பாயும் வாகன ஓட்டிகளை பார்க்கும் பொழுது,

இரண்டு கண்களும் இன்றி துணைக்கும் எவரும் இன்றி மேடுகள்,பள்ளங்கள் கடந்து நம்மை தாண்டி செல்லும் பார்வையற்ற வழிபோக்கர்களை சந்திக்கும் பொழுது,

நாம் அண்ணாந்து பார்த்து வியக்கும் உயரமான கட்டிடங்களில் அபாயத்தை மறந்து பணியாற்றும் அண்டைமொழி தொழிலாளர்களை பார்க்கும் பொழுது,

ஒரு நொடி கூட முக்கை பொத்த முடியாமால் நாம் கடந்து செல்லும் பல தெருக்களில் கழிவுகளை தன் சோற்றுக்கையால் அள்ளி வீசும் பணியாளர்களை பார்க்கும் பொழுது,

அறுசுவை உணவுண்டு அமர்ந்து எழும் சாப்பாட்டு கடையில் நம் இருக்கை துடைக்கும் சிறுவர்களை பார்க்கும் பொழுதெல்லாம்.

மனம் வேகமாய் துடித்து அடங்குகிறது! பின் மறந்து போகிறது!


"என்றோ எங்கோ என்ன வாழ்க்கைடா" இது என்று நாம் சோர்ந்து போகும் நிமிடங்களில் எல்லாம் இவர்கள் முகங்கள் மனக்கண்ணில் திரும்ப திரும்ப வந்து சொல்லி மறைகிறது.

ஆம்!!!!!!!!!!!!!!

வாழ்க்கை மிகவும் அழகானது-நிபந்தனைகளுக்குட்ப்பட்டது...



இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து ...
எண்ணஉதயம் நாள்:-02-12-2010


நேரம்:- காலை 10மணி


இடம்:- கிண்டி ரயில் நிலையம் சென்னை.

5 comments:

குரங்குபெடல் said...

நல்ல பகிர்வு . . . நன்றி

குரங்குபெடல் said...

நல்ல பகிர்வு . . . நன்றி

Gowtham GA said...

rail life kooda alagaanadhu...

conditions apply- ticket vaanganum... :P

Gowtham GA said...

rail kavidhaigal nandraagave ullana...

but conditions apply...

train la ticket edukkanum...unga packet a check pannunga... :P

Gowtham GA said...

rail kavidhaigal nandraagave ullana...

but conditions apply...

train pogum mudhalil ticket vaangunga....