Wednesday, July 20, 2011

எஸ்கேப்பு !!!


         "ஏய் சக்தி அன்னைக்கே சொன்னோம்ல உள்ளுர்லையே படின்னு கேக்காம வெளியூருக்கு படிக்க போன, 'இப்ப ஹாஸ்டல்ல பெருச்சாளி தொல்லை,பூச்சி தொல்லைன்னு, நீ உங்க அம்மாகிட்டேயே பேசிக்கோ' 'நா குளிக்க போறேன்னு' " அவன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டு,
செல்போன்ன அவங்க அம்மாகிட்ட குடுத்துட்டு  பாத்ரூம்க்குள்ள போறான் -விகாஸ்.


                பாத்ரூம்க்குள்ள வந்த வேகத்தில கவனிக்காம கால் வச்சு வழுக்கி கீழ விழுறான். அப்ப கரெக்டா அவன் கால் போய் பாத்ரூம்ல் தண்ணி வெளியாகுற குழி பக்கம் ஸ்டாப் ஆகுது. நல்ல வேலைனு எட்டிபார்க்குறான் அப்ப அங்க ஒரு வாலறுந்த பல்லி குழியவிட்டு மேல வரமுடியாம துடிச்சுட்டு இருக்கு..


           மெல்ல நள்ளி  கம்பிய பிடிச்சு எந்திரிச்சு நிக்கிறான். ஒரு கப் தண்ணிய கோரி ஊத்தினா பல்லி குழிக்குள்ள ஓடி போயிரும்னு கப் எடுக்கிறான் மனசு கேக்கல.. 'ஆத்தி குழிக்குள்ள விழுந்தா செத்து போயிரும்ல' அப்படின்னு மனசுக்குள்ள 
திங்க் பண்ணும் போதே, விகாஷோட மைன்ட் வாய்ஸ்- "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன், அந்த வரிசையில பல்லிக்குஉயிர் கொடுத்த விகாஸ்" ஆஹா அவன அவனே மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு  சந்தோசபட்டுக்கிட்டான்...

              உடனே பக்கத்தில் கிடக்கிற வாரியல்ல ஒரு ஈக்குச்சிய உருவி எடுத்து பல்லிய வெளியில எடுக்க போராடுறான்.பாவம் பல்லி இவன் காப்பாத்த முயற்சி பண்றது புரியாம பயத்தில அந்த பக்கமும் இந்த பக்கமும் பாய பாக்குது.


            இவனுக்கு டென்சன், ஆபிசுக்கும் டைம் ஆச்சு குளிக்கணும். பொறுமையில்லாம ஈக்குச்சிய பல்லி உடம்புக்கு அடியில விட்டு ஒரு கெந்து கெந்துறான் துள்ளி பறந்து வந்த பல்லி விகாஸ் வயித்துல பட்டு தரையில விழுந்து குடுகுடுன்னு ஓடி சுவற்றில ஏறிடுச்சு.


       இப்ப விகாஸ் கத்துறான் "அம்மா பல்லி வயித்தல விழுந்துடுச்சு கொஞ்சம் பால் கொண்டு வா பற்று விழுந்துற போகுது.அப்படியே பல்லி விழுந்த பலன் போட்டுருக்குற காலண்டர் அட்டையையும் எடுத்துட்டு வாமாங்க்றான்".

"யப்பா இத்துணுண்டு பல்லி இப்படி பயமுறுத்திட்டுருடுச்சேனு துண்ட உதறி கட்டுறான் -விகாஸ் ".


     அப்ப மேலே இருந்து பல்லியோட மைன்ட் வாய்ஸ் "நல்ல வேலை இவர் கீழ விழுந்த பலன்ல நா உயிர் பிழைச்சுகிட்டேன்"

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-மே மாதத்தில் நாலாவது வாரம்-2011

No comments: