Monday, July 25, 2011

அட கடவுளே!!!!!!!!!!



    "காலைலயும் சீரியல் பாக்க முடியல சாயங்காலமும் சீரியல் பாக்க முடியல"....இது சதீஷோட பாட்டி

     "ஒரு சட்டினி அரைச்சு சாப்பிட முடியலங்கிறாங்க" சதீஷோட அம்மா 

     "அம்மா போன  சீக்கிரம்  சார்ஜ் போடு கரென்ட் போக போகுது "அப்படின்னு சதீஷ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவங்க ஏரியால கரென்ட் போயிடுச்சு..

     "இப்படிதாங்க ரெண்டு முணு வருஷமா எப்ப வரும் எப்படி வருமுன்னு யாருக்குமே தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வராம  போயிருது. இந்த கரென்ட்கட்டுக்கு  என்ன செய்யுறதுனே தெரியலடி ஈஸ்வரி" அப்படிங்கறான் சதீஷ்

     அதுக்கு அவன் பொண்டாட்டி ஈஸ்வரி  "என்னங்க பக்கத்து வீட்லலாம் எதோ இன்வெர்ட்டர் வாங்கியிருக்காங்கலாம். 12 ,000௦௦ ரூபாய் தான் ஒரு மெஷின் 3 லைட் ரெண்டு பேன் போட்டுக்கலாமாங்க நம்மளும் ஒண்ணும் வாங்கலமாங்க ? " கேட்டுட்டு அவன் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருக்கா

    உடனே சதீஷ் "ஏய் அது ஒன்னு தான் இப்ப குறைச்சல் உங்களுக்கெல்லாம் டி.வி பாக்காம இருக்க முடியாதோ?

இல்லங்க "பேன் இல்லாம இருக்க முடியலங்க்ரா " ஈஸ்வரி

டென்சன் ஆயிட்டான் சதீஷ் "பச்சபுள்ள என் பையன் கரென்ட் இல்லாட்டா கூட அழமா தூங்குறான் உனக்கு என்ன ? தாட் பூட்னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

"ஆமா உங்க பிள்ளை பிறக்கும்போதே கரென்ட் இல்லாம பழகிட்டான் நாங்க அப்படியா! எங்க வீட்டுலலாம் நான் பிறக்கும் போதே பேன் உண்டு தெரியுமானு" ஈஸ்வரி சொல்லிமுடிக்கிறதுக்குள்ள தீடிர்னு கரென்ட் வருது பேன் ஓட ஆரம்பிக்குது  ....




   அங்க அதுவரை நல்லா தூங்கிட்டிருக்கிற சதிஷோட குட்டிபையன் தூக்கம் கலைஞ்சு சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிறான் .....

அப்ப ஈஸ்வரி "ஏங்க அந்த பேன அனைங்க பிள்ளை பயப்படுதுபாருங்க அப்படின்னு" கத்துறா


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் இரண்டாவது வாரம்-2011


No comments: