Wednesday, November 23, 2011

"" மறந்துபோனவைகள்""


             "ஒரு பெரிய மனுஷன் முணு நாளா சொல்லிகிட்டிருக்காரு உன் மகன் கேக்கிறானா? இந்த காலத்து பசங்களா எங்க பெரியவங்க பேச்ச கேட்கிறாங்க " இந்த டயலாக்க வார்த்தை மாறாம இன்னைக்கு மட்டும் தன் பொண்ணு அமுதாகிட்ட பல தடவை சொல்லிடுச்சு ராஜம் பாட்டி...

            தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,அவங்க வீட்டில யார் சொல்லியும் கேட்கல இந்த ஹரி...

            ஸ்கூல் படிச்சு முடிச்சதோட சென்னை போனவன்தான்  நாலு வருஷம் இஞ்சினியரிங் படிச்சுட்டு அங்கேயே ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்துட்டுருந்தான். நல்ல சம்பளம்  வாழக்கை நல்லாத்தான் போய்கிட்டிருந்தது.

               திடீர்ன்னு  ஒரு நாள் ஹரிக்கு ஊர்ல அவங்க அம்மாகிட்ட இருந்து ஒரு போன் "அப்பாக்கு ஹார்ட் வீக்கா இருக்காம்டா புல் ரெஸ்ட்ல தான் இருக்கணும். எந்த வேலையும் செய்ய கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். நீ உடனே உன் வேலைய ரிசைன் பண்ணிட்டு வந்து அப்பாவோட  பிசினெஸ் பார்த்துக்கணும்னு" சொல்லி கட் பண்ணிட்டாங்க.

              ஒரு ரெண்டு முணு நாள் பீல் பண்ணிட்டு சுத்திகிட்டிருந்தான்.அப்புறம் சொந்த ஊருக்கு வந்து வியாபார பொறுப்புகள ஏற்றுக்கிட்டு கவனிக்க ஆரம்பிச்சு ஒரு மாசம் மேல ஆக போகுது.


              தினமும்  காலையில சீக்கிரம் எந்திரிச்சு லேட்டா எல்லாரும் தூங்கினப்புறம் வீட்டுக்கு வர்றதால தப்பிச்சுகிட்டிருந்தான்...

             நேற்று செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு ரொம்ப லேட்டா வந்ததால காலையில எந்திரிச்சு குளிச்சு முடிச்சு பசியில துண்ட கட்டினபடியே சாப்பிட வந்துட்டான். அப்பதான் அவன் தம்பி அத கண்டுபிடிச்சு வீட்டில போட்டுவிட்டுடான்.


            அதுக்கு தான் இப்புடி மாறி மாறி எல்லாரும் திட்டி தீர்த்துட்டுருக்காங்க,எவ்வளவோ   சொல்லி பார்த்துட்டாங்க இவன் கேக்கிறதா இல்ல. இனிமேல் பேசி பிரயோஜனம் இல்லைன்னு முடிவு பண்ணின அவங்க அம்மா ஒரு பிளான் பண்ணின்னாங்க...

         அடுத்த நாள் ஹரி வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து தூங்கி வழக்கம் போல காலைல முழிச்சு பார்க்கிறான். அப்ப அவன் நைட் பேன்ட் மேல டைட்டா அந்த அரைஞான் கயிறு. கட்டியிருக்கு 'அம்மான்னு கத்துர்றான் ' கோரசா வீட்டிலேர்ந்து அவங்க அம்மா தம்பிகிட்டருந்து வருது பதில்"டேய் ஹரி டேய் நாம் ஊர்ல ஆம்பளைங்க யாரும் இந்த கயிறு இல்லாம இருக்கிரதில்லடா ,பட்டணத்துக்கு போய் நீ  இதெல்லாம் அத்து எறிஞ்சிட்ட ,ஆனா நாங்க கண்டுபிடிச்சிட்டோம்ல சரி சரி  அந்த கயிற கட் பன்னிராதாடா.இத கட்டிருந்தா நேரம் கெட்டநேரத்துல வீட்டுக்கு வர்றப்ப காத்து கருப்பு எதுவும் பிடிக்காது.அப்புறம் அதென்ன ஹரிணியா ஹெரினியாவா அந்த நோய் கூட வரதாம்டா"சொல்லிட்டு அடுப்பங்கரைக்கு போயிட்டாங்க....




கேட்டுட்டே இருந்த ஹரி எந்த பதிலும் பேசல அதுக்கு அப்புறம் அவன் அந்த கயிற  அவிழ்க்கவே இல்லை......



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூன் நாலாவது வாரம் 2011

No comments: