Friday, November 25, 2011

" பார்வைகள் பலவிதம் "



     "இன்னும் எத்தனை நாள் தான் நாம இப்படி இருக்க போறோமோவர்ற வருமானம் சாப்பாட்டு   செலவுக்கே சரியா இருக்கு. நாலு இடம் போக முடியுதாஇந்த உலகத்துல யாருக்குமே நன்றி இல்லசொந்த பந்தம் பத்தி எல்லாம் யாரு நெனைச்சு பார்க்கிறாங்க. எவ்வளவோ கெட்டது பன்றவங்க எல்லாம் நல்லாதான் இருக்காங்க"  அவ புருஷன் நல்லசிவத்த பார்த்து கத்திட்டு அடுப்படிக்குள்ள போறா தனலட்சுமி.

     
இந்த மாதிரி தினமும் ஒவ்வொரு வீட்டுல இருக்கிற சாதாரண மக்களோட உரையாடல்களை கவனிச்சா நாலு மெகாசீரியல்க்கு ஒரே நேரத்தில வசனம் எழுதலாம். அந்த அளவுக்கு வார்த்தைகள் வந்து விழும் அத கவனமா கேட்டுகிட்டு அமைதியாயிட்டா அன்னைக்கு பொழுதோட அந்த சண்டை முடிஞ்சிரும். இல்ல.... பானிபட் யுத்தம் மாதிரி பல ஆண்டுகள் இந்த சண்டை தொடரும். பாவம் இவங்களால புலம்பதான முடியுது..அப்படி ஒரு நல்ல நாளில தனலட்சுமி கத்தின குரல் தான் இது. நாலாவது வீட்டில இருக்கிற சலீமா மாமிக்கே தெளிவா கேட்கும். இங்க வீட்டில வெராண்டாவில உட்காந்திருக்கிற நல்லசிவத்துக்கு கேட்காதா என்னகேட்டுச்சுஆனா அவர் வாயவே திறக்கலையே.
  
       தனலட்சுமி நல்லசிவத்துக்கு கல்யாணமாகி நாலு வருஷம் ஆகுது.அடுத்தடுத்து ஆண் ஒண்ணு பெண்  ஒண்ணுனு ரெண்டு பிள்ளைங்க,ஊருக்கு வெளிய ஒரு வாடகை வீட்டில குடியிருக்காங்க. 
அவ கணவன் நல்லசிவம் அவங்க வீட்டில மூணாவது பையன். இரண்டு அண்ணன்களும் நல்ல வசதியா தான் இருந்தாங்க. ஒரே ஊரில பெண் எடுத்து பக்கத்தில தான் குடியிருக்காங்க.இரண்டாவது அண்ணன் பத்தி  பிரச்னை இல்ல ஒரு கடை வச்சுருக்காரு சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தாரு.

      முதல் அண்ணன் பேங்க்கில வேலை பார்த்தாருகை நெறைய சம்பளம் ரெண்டு பிள்ளைங்க காலைல பார்த்தா கட்டு கட்டா ரூபாநோட்ட எண்ணுவாரு சாய்ங்காலமான தமிழ்நாட்டோட முக்கிய நிதி ஆதாரமான டாஸ்மாக்ல போய் பணத்த எண்ணி குடுத்துட்டு குடிச்சு முடிச்சா தான் அவருக்கு அன்னைக்கு நாள் நிறைவடையும்.

      இப்படி அவரோட பல வருஷம் கடும் கடமை உணர்ச்சியின் பலனால் ஒரு அஞ்சு  வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு கிட்னி பெயிலியராயிடுச்சு.கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும்நல்ல ஹெல்த்தியான டோனர் வேணும் இல்ல உயிர் பிழைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.வெளிய முயற்சி பண்ணி பார்த்தா கிட்னி கிடைக்க நாளாகும்ங்கறதுனாளையும்  பார்மாலிடிஸ் அதிகம்ங்க்றதுனாலயும்அவன் அண்ணியோட யோசனையில அவன் அண்ணனே நேரடியா வந்து நல்லசிவத்துக்கிட்ட "உன் கிட்னி எனக்கு பொருத்தமா இருக்கு நீ குடு. உன்ன நல்லா பார்த்துக்குறேன்னு சொன்னாரு " அப்ப அவன் அண்ணன் வீட்டில தான் இருந்தான் கல்யாணம் ஆகல அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சேனு பதறி போயிருந்தவன் வேற எதையுமே யோசிக்காம, எந்த பலனையும் எதிர்பார்க்காம உடனே அவனோட ஒரு கிட்னிய கொடுக்க ஒத்துகிட்டான்.

      
அவங்க ஊர்ல நடந்த முதல் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை அதுதான்சொத்தயே பங்கு போட தயாரா இல்லாத அண்ணன் தம்பிங்க வாழுற காலத்தில அண்ணனுக்காக கிட்னி கொடுத்த தம்பின்னு பேப்பர்ல பெரிய நியூஸ்லாம் வந்துச்சு.சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கும் வந்தாச்சு   ஆனா நல்லசிவம் அண்ணன் கிட்னிய வாங்கிட்டு ஒரு மாசத்தில நல்லசிவத்த இரண்டாவது அண்ணன் வீட்டுக்கு விரட்டிவிட்டுட்டான்.அப்புறம் அவங்கதான் நல்லசிவம் உடம்ப தேத்தி தெம்பாக்கி ஒரு சின்ன கடையும் வச்சு கொடுத்து கொஞ்ச நாள் கழிச்சு தூரத்து சொந்தத்தில இருந்த தனலட்சுமிய கல்யாணம் பண்ணிவச்சாங்க.

      
இப்ப பொண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா தான் இருக்கான் நல்ல சிவம் ஆனா அவன் பொண்டாட்டி பிரசவத்திலையும் சரிபிள்ளைங்க பெறந்தப்பவும் சரிகிட்னி கொடுத்த பெரியஅண்ணன் கவர்ன்மென்ட் வேலைல நல்லா இருந்தாலும்எங்க கஷ்டபடுற தம்பி குடும்பம் எதும் காசு உதவி கேட்பாங்களோனு பயந்து ரெண்டு மூணு தடவை எட்டி பார்த்ததோட சரி கடைசி தம்பி நல்லசிவம் வீட்டுக்கு அடிக்கடி வர்றதில்ல.

     இத பத்தி நல்லசிவமும் தனலட்சுமியும் பெரிசா எடுதுக்கலனாலும் அடிக்கடி அக்கம் பக்கம் இருக்கிறவங்க பேசுற பேச்சுல கொஞ்சம் கத்திட்டு அமைதியாவா தனலட்சுமி. இப்ப தண்ணி பிடிக்க போன இடத்தில யாரோ எதோ சொன்னதுல கோபமாகி வீட்டுக்குள்ள வந்து இப்படி தாம்தூம்னு கத்திட்டு சமயலறைக்குள்ள போறா. ஆனா நல்லசிவம் எப்பவுமே அவன் மூத்த அண்ணன்ன விட்டுகொடுக்காம பேசுவான்."இப்ப என்னாச்சு உனக்கு சும்மாயிருக்கமாட்டியா ஆமா சாப்பாடு எப்ப தயாரகுமுனு" பேச்ச மாத்த பார்க்குறான் 

    அதுக்குள்ள தனலட்சுமி உள்ள இருந்து திரும்பவும் வெளியில வந்துட்டா அதே கோபம் குறையாம நல்லசிவத்த பார்த்து கேட்கிறா "ஏங்க உங்க சின்ன அண்ணனுக்கு இருக்கிற அக்கறை கூட இவங்களுக்கு இல்லநல்லா தான இருக்காங்க ஒரு பிள்ளைய கட்டி குடுத்தாச்சு.இன்னொரு பையன இஞ்சினியருக்கு படிக்க வைக்குறாங்க.சொந்தம்னு தான் பேரு நம்மள பார்த்து பேசுறதும் இல்ல ஒரு நல்லது கெட்டதுக்கு வந்து போறது கூட இல்ல,யாருமே செய்யாத உதவி செஞ்ச தம்பிய எப்படி தான் இப்படி ஒதுக்கி வச்சுட்டு இருக்க முடியுதோஹ்ம் "இந்த கடவுள் எப்பதான் நம்ம வாழ்க்கைய கண்ண திறந்து பார்ப்பாரோ" அப்படின்னு புலம்பி முடிக்கிறா" 
     எல்லாத்தையும் பொறுமையா கேட்டு முடிச்ச நல்லசிவம் அவன் மனைவி தனலட்சுமிகிட்ட சொல்றான்."ஏண்டி நீதான் ஒரு கிட்னி இல்ல எனக்கு என்னாகுமோ ஏதாகுமோனு பயப்படுற. நா நல்லா உழைக்கிறேன் தினமும் 300௦௦ ருபாய் சம்பாதிக்கிறேன் இன்னும் சில வருஷத்தில சொந்தக்கடை வச்சுருவேன். இதுவரைக்கும் நா காய்ச்சல்,தலைவலின்னு எதாவது நோய் வந்து படுத்திருப்பேனா,ஏன் நம்ம பிள்ளைங்களுக்கு கூட தடுப்பூசி தவிர வேற எதாவது மருந்து செலவு வந்துருக்குமா இதுக்கு மேல நமக்கு என்ன வேணும்.நீ சீக்கிரம் டிபன் பண்ணி வை இன்னைக்கு எங்க அண்ணனோட கல்யாண நாள் நா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துறேன் "ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துன்னு சொல்லிட்டு விறுவிறுனு வெளிய கிளம்பி போயிட்டான்"....








இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூலை மூன்றாவது வாரம் 2011

No comments: