Thursday, November 24, 2011

"தண்ணீர் தண்ணீர்"








                "ஏய் அருவியில குளிக்க வந்துட்டு ஏண்டா படியில நின்னுகிட்டு பொம்பளைங்க குளிக்கிற பக்கம் வேடிக்கை பாருக்குறீங்க" கனமாக ஒலிக்கிறது துண்ட கட்டிட்டு லத்தியோட தண்ணியில் நனைஞ்சுகிட்டே கூட்டத்த கட்டுப்படுத்த முயற்சி பண்ணிட்டிருக்கிற ஒரு போலிஸ்காரரின் குரல்.



               லேசா சாரல் அடிக்குது, சோள பொறி அவிக்கிற புகை , மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் சுடுற வாசனை எல்லாம் மோப்பம் பிடிச்கிகிட்டே கூட்டம் கூட்டமா அந்த ரோட்டில போற யார தொட்டாலும் வழுக்கிவிட்டிரும்.அந்த அளவுக்கு உடம்புல நல்லெண்ணைய தேய்ச்சுகிட்டு ஒரு வருஷத்து உடம்பு அழுக்க ஒரே நாளில் தொலைச்சிரனும்னு போட்டிபோட்டுட்டு அருவிக்குள்ள போற ஆட்கள தன்னோட அஞ்சு வயசு பையன கையில் பிடிச்சுட்டே வேடிக்கை பார்துட்டுருக்கிற ரமேஸ் திரும்பி அவன் மனைவிய பார்க்கிறான்.

                   "என்னங்க இன்னும் ஒரு பத்து நிமிஷம் குளிச்சிட்டு வந்துறேங்க குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்கனு" சொல்லிட்டு அருவி தண்ணிக்குள்ள மறைஞ்சு போயிட்டா ரமேஷோட மனைவி.

                    இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணின ரமேஷ் அவன் பையன தூக்கிட்டே அருவிக்குள்ள நுழைஞ்சு குளிக்க பார்க்கிறான். ம்ஹூம் உள்ள போன யாரும் வெளியில வர்றதா தெரியில ரமேஷ நெருக்கி வெளியில்ல தள்ளிட்டாங்க,அவன் பையன் பயந்து அழ ஓரமா வந்து உட்கார்ந்துட்டான் ரமேஷ்.

                  கூட்டத்தோட கூச்சல் நெருக்கடிய பார்த்து பயந்துபோன ரமேஷ் பையன்,அப்பா வீட்டுக்கு போகணுமுன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான். ஓங்கி ஒரு அடி விட்டான் ரமேஷ் ஏன்டா இப்புடி படுத்துற டூர் வந்தா கூட நிம்மதியா இருக்க விடமாட்டியானு திட்டிட்டு முகத்த திருப்பி உட்கர்ந்துகிட்டான்.



                  அருவி தண்ணியையே வேடிக்கை பார்த்துட்டே கொஞ்ச நேரம் அழுது முடிச்ச அவன் பையன் ரமேஷ முதுகுல மெதுவா தட்டி...கேக்கிறான்."அப்பா வீட்டுல பைப் ஒழுங்கா மூடலைனா தீட்டுவேல இந்த அருவியில இவ்வளோ தண்ணி வேஸ்டா போகுதே யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?"






இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து

காலம்:-ஜூலை முதல் வாரம் 2011

No comments: