Thursday, November 24, 2011

"உணவு சங்கிலி"









        டேய் பாபு "இந்த சிலைய பாரேன் உடம்புல உள்ள நரம்பு கூட எவ்வளவு துல்லியமா தெரியிறமாதிரி செதுக்கியிருக்காங்க" வியப்பு அடங்காம சொல்றான்  சங்கர்.

        இரண்டுபேரும் நண்பர்கள் பக்கத்து பக்கத்து தெருவில தான் குடியிருக்காங்க. ஞாயிற்றுகிழமையான சினிமா தியேட்டர் கிரிக்கெட் மைதானம்னு போறவங்கள்ளுக்கு மத்தியில கோயிலுக்கு வந்து போற ஒரு சில இந்த கால இளைஞர்கள்ல இவங்களும் உண்டு  ...


            சங்கருக்கு தெரியாத கோவிலே ஊர்ல கிடையாது ஒரு கோவில்னு போனா வாசல்ல விநாயகர் சன்னதியில ஆரம்பிச்சு கருவறையில இருக்கிற மூலவர், சப்பரபவனி கொண்டு போற உற்சவர்,தட்சினாமூர்த்தினு ஒவ்வொரு சன்னதியா நின்னு அந்தந்த கடவுளுக்குள்ள பூசாரியே மறந்து போன மந்திரங்கள சொல்லிட்டு தான் கிளம்புவான் அவ்வளோ பக்தி.


               மூலஸ்தானத்துக்கு மேல உள்ள கோபுரம் விமானம்.உருவமா சிவன் இருந்தா அதாவது பார்வதி,முருகன் சேர்ந்து லிங்கமும் இல்லாம நடராஜர் வடிவமமும் இல்லாம முழுமனித வடிவுல காட்சி தர்றதுக்கு பேரு சோமாஸ் கந்தர்னு சொல்வாங்க. இப்படி போற போக்கில கோவிலோட கல்வெட்டுல இல்லாத விஷயங்கள கூட சொல்லுவான் சங்கர்.


              இப்ப ஒரு சிலைக்கு முன்னாடி நின்னு ரசிச்சுகிட்டிருக்கான்.பசியால வாடி போய் உடம்பு நரம்பெல்லாம் தெரியுற மாதிரி ஒரு மனுஷன் இறைவன்கிட்ட வேண்டி நிற்கிறமாதிரி இருக்கிற அந்த  சிலைய பார்த்து சொல்றான் "இப்ப உள்ள மனுஷங்ககிட்ட மனிதாபிமானம் குறைஞ்சு போச்சு, எறும்பில இருந்து எல்லாஉயிருக்கும் பகவான் தான் படியளக்கிறார்னு" புகழ்ந்துக்கிட்டுருந்தான் சங்கர். . அப்ப பாபு நேரமாச்சுன்னு சொல்ல பிரசாத தட்ட எடுத்துகிட்டு வெளியில் வந்த ரெண்டுபேரும் செருப்பு எடுக்க போறாங்க....


           அப்ப யாரோ சங்கர் முதுகுல கைவைக்க திரும்பிபார்க்கிறான் ஒரு மனநிலை சரியில்லாத ஆள் அழுக்கான வேட்டியோட வெறும் உடம்புல நிக்கிறான்.கழுத்து நரம்பு புடைக்க கத்தி கைய நீட்டுறான். அவ்வளோதான் பயந்துபோன சங்கர் பிரசாத தட்ட போட்டுட்டு கூட வந்த பாபுவையும் விட்டுட்டு ஓடியே போயிட்டான்.


                 சங்கர காணாம தேடுற பாபு குனிஞ்சு கீழ பாக்கிறான்,அப்ப அங்க அந்த பிரசாத தட்டுல இருந்து சிதறி விழுற பழத்த அந்த மனநிலை சரியில்லதாவர் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்.அவர உற்றுபார்க்கிற பாபுவோட மனசில ஓடுது "அந்த மனநிலை சரியில்லாத ஆளோட பலநாள் பசிக்கு இன்னைக்கு சங்கர் மூலமா படியளந்துட்டார் இறைவன்னு"



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூலை இரண்டாவது வாரம் 2011

No comments: