Wednesday, November 30, 2011

" அய்யோ அய்யோ "






                 "என்னதான் ஊருக்குள்ள இவ்வளவு பெரிய ஆறு ஓடுதுனாலும் காலையில அரை மணிநேரம் பைப்ல தண்ணீர் எடுக்கிறதே குதிரைகொம்பால இருக்கு" செல்வி சொல்லி முடிக்கும் போது பைப்பில தண்ணிவர ஆரம்பிக்குது.

           முதல் குடம் தண்ணி பிடிக்க ஆளாளுக்கு விட்டுக்கொடுக்குறாங்க, ஏன்னா தண்ணி கலங்கலா வரும். அப்ப ஒரு பாட்டி வாசல் தெளிக்க முதல்குடம் தண்ணிய எடுக்கிறாங்க,வரிசையில பேச்சு தொடங்குது.செல்வி அவ முன்னாடி நிக்கிற ஜானகிய பார்த்து ஆரம்பிக்கிறா...

             "ஏய் அப்படி என்ன நடக்குதுன்னு அந்த கோவிலுக்கு வாராவாரம் குடும்பத்தோட போறீங்க, நேத்து நைட்டு கூட 10 மணிக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வந்தீங்க. பக்தி ஓரளவுக்குத்தான் இருக்கணும் ஞாயிற்றுகிழமை கூட நாலு இடத்திற்கு போயிட்டு வராம சாமிய விட்டுட்டு ஆசாமிய போய் இப்புடி விழுந்து விழுந்து கும்பிட்டுட்டு வர்றீங்களே " செல்வி இப்படி சொல்லவும் ஜானகிக்கு கோபம் தலைக்கு மேல ஏறிடுச்சு.

            "உனக்கென்ன தெரியும் அந்த கோவில் மகிமை பற்றி,அந்த இடம் எவ்வளோ அழகு  அங்க வச்சுருக்கிற சிலைகள், ஏன் அந்த சாமியார் எவ்வளவு பவர்புல் தெரியுமா அவர் குறி சொன்னா அப்படியே நடக்கும். உன் முகத்தே பார்த்தே உன் ஜாதகத்த சொல்லிருவாரு வந்து பாரு எவ்வளவு கூட்டம் கால்கடுக்க அங்க காத்து கிடக்குதுன்னு "சொல்லிட்டு செல்விய பார்த்து மூஞ்ச வெட்டிகிட்டு காலி குடத்தோட திரும்பி பார்க்காம வீட்டுக்கு போயிட்டா ஜானகி.

        ரெண்டு நாள் கழிச்சு ஜானகி வீட்டுக்கு போற செல்வி காலையில பேப்பர்ல வந்த தலைப்பு செய்திய அவகிட்ட காட்டுறா, அதுல மீண்டும் ஒரு சாமியார் பாலியல் வழக்குல கைதுன்னு போட்டு ஜானகி வழக்கமா குடும்பத்தோட போற சாமியாரோட புல் சைஸ் கலர் போட்டோ அரை பக்கத்துக்கு போட்டுருக்கு.

          செல்வி அடுத்த வார்த்தை பேச வாய திறக்குறதுக்குள்ள ஜானகியே ஆரம்பிக்கிறா"அந்த ஆள் முகத்த பார்த்தப்பையே நெனைச்சேன் இப்படி எதாவது மாட்டுவான்னு, அந்த ஆள் நடவடிக்கையே சரியில்ல பொம்பளைங்கள சிறப்பு பூஜைக்கு தனியா வர சொல்லி பிரசங்கம் பண்ணிட்டிருந்தான், அந்த கோவில் கூட எதோ செட் போட்ட மாதிரி இருக்கும் ஒரு தெய்வீக கலையே இருக்காது தெரியுமா"படபடனு பேசினவ அடுப்புல சட்டி காயுது நா வரேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம உள்ள போயிட்டா...






இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 

காலம் :-ஆகஸ்டு முதல் வாரம் 2011

2 comments:

செந்தில்பாரதி.. said...

கண்டிப்பாக பெண்கள் கோவிலுக்கு போவதை தவிர்த்தாலே சாமியார்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது... இருந்தும் உங்கள் கதையில் வரும்.... ஜானகியைப்போல சில பெண்கள் இதை மறுக்கிறார்கள்

செந்தில்பாரதி.. said...

கண்டிப்பாக பெண்கள் கோவிலுக்கு போவதை தவிர்த்தாலே சாமியார்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது... இருந்தும் உங்கள் கதையில் வரும்.... ஜானகியைப்போல சில பெண்கள் இதை மறுக்கிறார்கள்