Tuesday, November 29, 2011

"கேட்டா தான் கிடைக்கும்"


               செல்வத்தோட அப்பா அப்படின்னு சொன்னாதான் அந்த காம்பவுண்டில எல்லாருக்கும் தெரியும். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். தினமும் காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கிளம்பி தயாராயிருப்பார்.ஏழு மணி வர்ற எல்லார் வீட்டு பேப்பரையும் ஒரு வரி விடாம படிச்சிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவார்.

             இன்னைக்கு அப்படி பேப்பெர படிச்சவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டார். இப்ப பேப்பேர்ல கொஞ்ச நாளா வர்ற உண்ணாவிரதம் செய்திகள், இரண்டாவது விடுதலை போராட்டம், காந்தியின் மறுஉருவம்னுலாம் சிலரை பத்தி செய்தி வர்றத பார்த்துட்டு தான் இந்த யோசனை.

           அந்த நேரம் வெளிய போயிட்டு வீட்டுக்குள்ள நுழையுற அவர் பையன் செல்வத்துகிட்ட "ஏம்ப்பா சத்தியாகிரகம் மாதிரி மாதிரி இந்த போராட்டங்கள்  எல்லாம்  ஊழல ஒழிச்சுரும் போலியே " அப்படின்னு கேக்கிறாரு.


                    செல்வம் எல்லாரும் அதிகமா சப்போர்ட் பண்ணினா அந்த பக்கமே போகமாட்டான். எப்பவுமே எல்லா விஷயத்துலயும் தனக்குன்னு தனி கருத்து வச்சுருப்பான்.இப்ப வேற எத பண்ணினாலும் விமர்சனம் பண்றதுக்குன்னு ஒரு கூட்டம் அதிகமாயிருக்காங்களே அவங்கள்ள இவனும் ஒருத்தன்.இப்ப அவங்க அப்பா செல்வத்துக்கிட்ட கேள்விகேட்டது வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆக அந்த காம்பவுண்டில இருக்கிற எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தம் போட்டு பேச ஆரம்பிச்சுட்டான்.


                  "அப்பா இவங்களுக்கு வேற வேலை இல்லை உண்ணாவிரதம் இருந்தா ஊழல் ஒழிஞ்சிருமா இதெல்லாம் பப்பிளிசிட்டிக்காக பண்றாங்கப்பா, நாட்டில இட ஒதுக்கீடு, சுற்றுசுழல்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இந்த உண்ணாவிரதம் நடத்தவே யார்யார்க்கெல்லாம் லஞ்சப்பணம் கொடுத்துருக்காங்களோ , இந்த உண்ணாவிரதமெல்லாம் மக்கள் மனசில எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" இத செல்வம் சொல்லி முடிக்கவும் அவன் பொண்டாட்டி மண்ணெண்ணெய் டின்னோடு வீட்டுக்குள்ள வரவும் சரியா இருந்துச்சு.


                "என்னடி பத்து பதினஞ்சு நாளா ரேசன் கடைக்காரன் மண்ணெண்ணெய் தராம பிரச்சனை பண்ணிகிட்டிருக்கானு புலம்பிட்டிருந்த இப்ப எப்படி வாங்கின? அப்படின்னு கேட்கிறான் செல்வம் . அதுக்கு அவன் மனைவி டி.வியில, பேப்பேர்ல எல்லாரும் எதுக்கோ உண்ணாவிரதம் இருக்காங்க அரசாங்கமும் அவங்க அஹிம்சை போராட்டத்த அரசாங்கத்தாலேயே ஒன்னும் பண்ண முடியலனு போட்டிருந்துச்சு. அத பார்த்த உடனே நானும் நம்ம தெருவில இருக்கிற முப்பது பொம்பளைகள கூட்டிட்டு போய் நம்ம ரேசன் கடை முன்னாடி மண்ணெண்ணெய் தரும் வரை உண்ணாவிரதம்னு உட்கார்ந்துட்டேன் . அவ்வளவு தான் பயந்துபோன அந்த கடைக்காரன் கடை திறந்த  உடனே எங்க எல்லாருக்கும் மண்ணெணெய்ய கொடுத்துட்டான்" சரி சரி  வாங்க காபி  போட்டு தரேன்னு சொல்லிட்டு  விறுவிறுனு வீட்டுக்குள்ள போயிட்டா....






இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து

காலம் :-ஜூலை நாலாவது வாரம் 2011

No comments: