Wednesday, January 23, 2013

கலியுக பாண்டவர்கள்


    முத்தம்மா கணபதி ரெண்டு பெரும் என்பதாம் கல்யாணம் பார்த்த தம்பதிகள்.அந்த கால உழைப்பு,உணவுகள்னால பிரசர் ,சுகர்னு எந்த நோயும் இல்ல, ஆனா  வயாதிகம் காரணமாக டிவி பிரிட்ஜ் ,எல்லா வசதியும் உள்ள ஒரு வாடகை வீட்டில சமைக்க பாத்திரம் கழுவ வீடு துடைக்க மட்டும் வந்துட்டு போற வேலைகாரி துணையோட வாழ்ந்துட்டு வர்றாங்க. 

    இவங்களுக்கு மொத்தம் ஐந்து ஆம்புள பிள்ளைகள் பிறந்தது இருந்தாலும்  முத்தமாவையும் அவர்  கணவர் கணபதியையும் அவங்க அவங்க வீட்டில வச்சு ஒரு நாள் கூட பார்த்துக்க யாரும் தயாரில்ல யாரவது ஒருத்தர் வேணா  எங்க வீட்டுக்கு வரட்டும் பார்த்துகுறோம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதா இருந்த பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்க, அதான் இவங்க எல்லா பையன்களோட குழுந்தைகளும் வளர்ந்துட்டாங்கல,இனி தாத்தா பாட்டி தேவையில்ல போல...

             அதனால வேற வழியில்லாம 90 வயசுக்கு மேல ஆன கணபதியும் என்பத்தைந்து  வயது ஆன அவர் மனைவி முத்தம்மாவும் சில வருஷங்களா தனியாதான் இந்த வீட்ட்ல இருக்காங்க.

            அவங்க பசங்க ரெண்டு பிரிவா பிரிஞ்சுருக்காங்க ஒருத்தருக்கும் அவங்களுக்குள்ள பெரிய அளவில ஒட்டு உறவில்ல அப்பா அம்மாக்கு பென்சன் எதுவும் கிடையாததுனால  ஆளுக்கு கொஞ்சம் பணத்த மாசம் மாசம் அனுப்புவாங்க.எப்பயாவது சில நாள் வந்து ரெண்டு பேரையும் பார்த்துட்டு ஒரு சிலமணி நேரம் மட்டும் இருந்து பேசிட்டு போவாங்க அவ்வளவுதான்.

          எல்லா வசதியும் இருந்தாலும் எதையும் செய்ய முடியாத அளவுக்கு தளர்ந்து போயிருக்கிற முத்தம்மா கணபதி ரெண்டு பேருமே சின்ன வயசில அவங்க தூக்கி வச்சு கொண்டாடின பசங்க செய்ய முடியாத காலத்தில துணைக்கு இல்லையே அப்படிங்கற வருத்தத்த வெளிகாட்டல எல்லா பிள்ளைங்க கிட்டயும் பாசமா தான் இருப்பாங்க...

          இன்னைக்கு அப்படி அவங்கள் பார்க்க வந்த இரண்டாவது பையன் பாலமுருகனுக்கு கை நடுங்க காப்பி போட்டு கொடுத்துட்டு இருக்கும்  போதே போ ஃன்  அடிக்குது அத அட்டெண்ட் பண்ற முத்தம்மா காதுல ஹலோ சொல்ல எதிர்முனையில ஒரு ஆள் குரல் கேட்கவும் பதறி போய் பக்கத்து  ரூம் குள்ள போறாங்க... 

       ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வெளியில வராங்க...

  அப்ப அவங்க வீட்டு வேலைகாரி "என்னம்மா எதுவும் தூக்க செய்தியா னு" கேட்கிறாள் 

    அதுக்கு முத்தம்மா சோகமா சொல்றாங்க"இப்ப நா யாருக்கு போஃன் பேசினேன்னு தெரிஞ்சா எங்கள பார்க்க வந்துருக்கிற  என் ரெண்டாவது பையன் இனிமேல் எங்கள பார்க்க வரவே மாட்டான்..

          அதிர்ச்சி ஆகி "அப்படி யாருமா"என்று கேட்கிறா  

           மனம் கனத்த நிலையில் முத்தம்மா   சொல்கிறார் "என் சின்னபையன் தான் பேசினான் அவனுக்கும் இவனுக்கும் ஆகாது "உன் மத்த பிள்ளைங்க யாரும் அங்க வராதப்ப எனக்கு போஃன் பண்ணு, நா வந்து உங்கள பர்க்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போஃன கட் பண்ணிட்டான்மா" 

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

No comments: