Wednesday, January 23, 2013

பழிக்கு பழி




   அப்படியா 
   ஆ ...
   சாப்பிட்டேன்....ம் ம் ....

  ராத்திரி சாப்பாட்டுக்கு சப்பாத்தி போட்டு வைனு  சொல்லிட்டு போஃ ன கட் பண்றான்  சிவா...

    அவன்  ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். ஏகப்பட்ட பிரெண்ட்ஸ் வயசு கம்மிதான்.ஆனா நெறைய ஆலோசனை சொல்றேன் உதவி பன்றேன்கிற பேர்ல நாள் முழுக்க போஃன் பேசிட்டே இருப்பான்.

       வீட்ல இருந்து அம்மாவோ அவன் தங்கச்சியோ போஃன் பேசினா மட்டும் ஆ..சரி...ஓகே... அவ்வளவு தான் இதுக்குமேல பேசமாட்டான் ஒரு நிமிஷத்தில போன கட் பண்ணிருவான் ஏன் சாப்பிடவும்,தூங்கவும் மட்டும்தான் வீட்டுக்கே போறான்னு வச்சுக்கோங்களேன்.

      ஆனா அவன்  வீட்டுல எல்லாரும் இவன் மேல உயிரே வச்சுருக்காங்க.என்ன சமையல் செஞ்சாலும் இவன் சாப்பிட்டு மிச்சம் இருந்தாதான் அவங்கலாம்  சாப்பிடுவாங்க எல்லாத்திலையும் இவனுக்கு  தான் முன்னுரிமை...

         ஏதாவது ஒரு சென்டிமென்டான குடும்ப படம் பார்த்தாலே அழுதுருவான்...படம் பார்க்குபோதே அவன் அம்மா தங்கச்சி மேல எல்லாம் பாசம் பொத்துக்கிட்டு வரும் படம் முடியும் போது போன இடம் தெரியாம போயிரும்....

       இன்னும் அவன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அவன் கல்யணம் பண்ணணும்.இதுக்கெலாம் எப்படி பணம் சேர்க்கிறது. இதுதான் அவனோட மிகப்பெரிய லட்சியம் .

        ஒரு நாள்  வழக்கம்போல அவன் வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்தான்..டிவி பார்த்துகிட்டே அவனுக்கு முழிச்சிருந்து சாப்பாடு பண்ணி வச்சு பரிமாறிக்கிட்டிருக்கிற தங்கச்சிய ஏதோ டென்சன்ல நல்ல திட்டிட்டான்.பதிலுக்கும் அவளும்  சத்தம் போட கோபத்தில அவ பின் தலையில் ஒரு அடி ஓங்கி அடிச்சுட்டான்.உடனே சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டா அவன்  தங்கச்சி...

           தூக்கம் கலைஞ்சு அவன் அம்மாவும்  எந்திரிச்சுட்டாங்க  ஒரே சண்டை "பாவம் உன்ன இப்படி கவனிச்சுக்கிற பிள்ளைய போய் இப்படி அடிச்சிட்டியே "திட்டிட்டு அவங்க அம்மாவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க...

      சிவா எதையும் கண்டுக்காம என்ன கோவப்படுத்தாதீங்கனு கத்திட்டு  வீட்டோட  உள் அறையில போய் தூங்க போயிட்டான்... 

       தூக்கத்தில ஒரே கெட்ட கனவு வந்து எல்லாருக்கு முன்னாடி காலையில அஞ்சு மணிக்கெலாம் எந்திரிச்சு ஒரே யோசனையா உட்கார்ந்திருந்தான். மனசு கேட்கல "என்ன நாளும் நம்ம இப்படி  அடிச்சிருக்க கூடாது மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே"அவன் தங்கச்சிய எழுப்பி ரொம்ப வலிக்குதா சாரி அப்படிங்கிறான்.

       அப்ப அவன் தங்கச்சி "ஹே பழிக்கு பழி நான் நைட்டே உன் தலையில் பத்து குண்டு பேண்ன  எடுத்து போட்டுட்டேனே"  அபப்டின்னு கத்திட்டு  அந்த இடத்த  விட்டு ஓடி போயிட்டா...

        ஒரு சில நிமிஷம் அமைதியா இருந்து ஏதோ யோசிச்ச சிவா சிரிச்சுகிட்டே அவன் தலைய தடவி பார்க்கிறான் அதுக்குள்ளே உள்ள இருந்து திரும்பி வந்த அவன் தங்கச்சி ஒரு பேன் சீப்ப எடுத்துட்டு வந்து அவன் தலைய சீப்பால நல்ல சீவி ஒவ்வொரு பேண்னா  எடுத்து குத்த ஆரம்பிச்சிட்டா, ரொம்ப நேர தேடுதலுக்கு அப்புறம் சில பேன் கிடைக்கவும் உற்சாகமாகி  சொல்றா  " ஐ..... அண்ணா  ரெண்டு பேண்  தான் கிடைச்சுருக்கு நல்ல குண்டு பேண்  மீதிய காணோமே" 



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

No comments: